Search This Blog

Saturday 9 November 2013

மொபைலில் கட்டணத் திருட்டை தடுப்பது எப்படி?

மொபைல் போன்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கட்டணத்திருட்டுக்கு முடிவு கிடைத்துள்ளது. இது சாத்தியமா? மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை!

இது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, ‘ட்ராய்’ இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது. இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்ற எண்னை பயன்படுத்துங்கள்.

இந்த எண்னானது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொதுவானதே! இதன் மூலமாக உங்களுக்கு தேவையில்லாத அனைத்து சேவைகளையும் நிறுத்த முடியும். இதனால் உங்களுடைய பணம் திருடப்படாது என்பது ட்ராயின் கருத்து!

No comments:

Post a Comment