Search This Blog

Saturday 30 November 2013

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்?


தமிழரின் பெருமை தெரியவேண்டும் என்றால்.தமிழகத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும் 

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!

பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?

தமிழ்ச் சொற்கள்!

தமிழில் டீக்கு "தேநீர்',

காபிக்கு "குளம்பி' என்று

 பெரும்பாலோருக்குத் தெரியும்.

மற்ற சில முக்கியமான உணவு

 பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

 புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

 கிச்சடி - காய்சோறு, காய்மா

 கேக் - கட்டிகை, கடினி

 சமோசா - கறிப்பொதி, முறுகி

 பாயசம் - பாற்கன்னல்

 சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

 பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

 பொறை - வறக்கை

 கேசரி - செழும்பம், பழும்பம்

 குருமா - கூட்டாளம்

 ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

 சோடா - காலகம்

 ஜாங்கிரி - முறுக்கினி

 ரோஸ்மில்க் - முளரிப்பால்

 சட்னி - அரைப்பம், துவையல்

 கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

 பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

 போண்டா - உழுந்தை

 ஸர்பத் - நறுமட்டு

 சோமாஸ் - பிறைமடி

 பப்ஸ் - புடைச்சி

 பன் - மெதுவன்

 ரோஸ்டு - முறுவல்

 லட்டு - கோளினி

 புரூட் சாலட் - பழக்கூட்டு

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்!


சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..!

நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!


வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!

ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப... ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா... தலைமேல பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா... காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க!


• மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும், இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.


• வெள்ளைப் பூண்டுடன், கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.


• நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.


மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்!



எடை குறைவுடன் பிறந்த குழந்தையானது மிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை இவ்வாறு பிறந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது.

இந்த நேரத்தில் தான், அத்தகைய குழந்தையை மிகவும் கவனமாக கவனித்து, சரியான உணவுகளை சரியான வேளையில் கொடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும். பொதுவாக எடை குறைவாக பிறந்த குழந்தைகளை எளிதில் நோய்கள் தொற்றும் வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான கவனிப்பானது இன்றியமையாதது.

சொல்லப்போனால், இந்த நேரத்தில் பெற்றோர்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது சிரமத்தை மனதில் கொள்ளாமல், சரியாக கவனித்தால், உங்கள் குழந்தையும் மற்ற குழந்தைகளைப் போல் இருப்பார்கள். சரி, இப்போது அப்படி எடை குறைவாக பிறந்த குழந்தையை சரியாக கவனிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

• குறைவான எடையில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் போதிய சத்துக்கள் கிடைக்கும்.எடை குறைவில் குழந்தை பிறந்தால், அடிக்கடி தொடர்ச்சியாக பாலைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு உடலில் சத்துக்கள் சேர்வதற்கு சற்று தாமதமாகும்.

• மற்ற குழந்தைகளை விட, எடை குறைவாக பிறந்த குழந்ததையை மிகவும் கவனமாக தூக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், கைகளில் வைத்திருக்கும் போது, முக்கியமாக தலையை மிகவும் கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும்

• பொதுவாக எடை குறைவில் பிறந்த குழந்தை தூங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகளுக்கு SIDS (Sudden Infant Death Syndrome) என்னும் திடீரென குழந்தை இறப்பு நோய்த்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், பெற்றோர்கள் குழந்தையை தங்களது வயிற்றில் தூங்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

• மிகவும் குறைந்த எடையில் பிறந்த குழந்தையைச் சுற்றியுள்ள இடங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த குழந்தைகளுக்கு நோய்களானது எளிதில் தாக்கக்கூடும். எனவே குழந்தையை சுற்றியுள்ள இடத்தை மட்டுமின்றி, குழந்தையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• குழந்தையின் எடை சரியான அளவில் வரும் வரை, பெற்றோர்களைத் தவிர வேறு யாரையும் குழந்தையை தூக்க அனுமதிக்க வேண்டாம்.

அடிவயிற்றில் இருதயத்துடன் உயிர் வாழும் இளைஞர்!

 

பிறக்கும்போதே அடிவயிற்றில் இருதயத்துடன் பிறந்து 24 வயது வரை உயிர்வாழ்ந்து கொண்டியிருக்கும் இளைஞர் அதிசயமாக கருதப்படுகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் இருதயத்தை பொருத்த சீன டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சீனாவின் கினாம் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூஜிலியாங் (வயது 24). இவர் முடிதிருத்தல் தொழில் செய்து வருகிறார். பிறக்கும்போதே இவருக்கு அடிவயிற்றில் இருதய துடிப்பின் சத்தம் கேட்டது. ஆனால் இவரது பெற்றோர்கள் இதை சாதாரணாகவே எடுத்துக்கொண்டனர்.

நாளடைவில் ஹூஜிலியாங்கின் இருதயம் அடிவயிற்றில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவர், பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. கடினமாக வேலை செய்தால் அல்லது ஓடினால் மூச்சிறைப்பு ஏற்பட்டது. அடிவயிற்றில் இருதயம் துடிப்பதை அவரால் உணர முடிந்தது.

இந்தநிலையில் பத்திரிகை செய்தி ஒன்றில் இதேபோல் பாதிக்கப்பட்ட ஒரு வாலிபருக்கு கடந்த 2012_ல் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து இருதயத்தை இடமாற்றம் செய்து சாதனை படைத்தனர். இதனை படித்த ஹூஜிலியாங், தானும் இதேபோல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பி, அந்த மருத்தவமனையில் சேர்ந்துள்ளார்.

சீன டாக்டர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை அடிவயிற்றில் உள்ள இருதயத்தை இடமாற்றம் செய்து விலா எலும்பு பகுதியில் பொருத்த உள்ளனர். இதன் மூலம் தனக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹூஜிலியாங் உள்ளார்.

டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம். மார்ச்சுவரி கொடுமைகள் குறைய வாய்ப்பு…!

 

உலகிலே மிக கொடுமையான விஷயம் மரண்ம். இயற்கை மரணம் ஏற்பட்டால கவலை இல்லை ஆனால் விபத்து, தற்கொலை மற்றும் இயற்கை அல்லாத ஒரு மரணம் சம்பவித்து விட்டால் கொடுமை – அதிலும் போஸ்ட்மார்ட்டம் என்னும் உடலை ஆய்வு செய்யும் ஒரு கொடுமை.

இதற்கிடையில் இதை அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் தான் செய்ய முடியும். அதை செய்ய பல ஃபார்மாலிட்டீஸ்……. போலீஸ் கம்ப்ளயன்ட் செய்திருக்க வேண்டும். மார்ச்சுவரி செய்ய மருத்துவர் நேரம் ஒதுக்க வேண்டும். சில சமயம் 1 நாளில் இருந்து மூன்று அல்லது 1 வாரம் கூட ஆகும் கொடுமை. அடுத்து அங்கிருக்கும் அக்க போர்கள்….. பான்டேஜ் வாங்கனும், காடா துணி வாங்கனும், காசு தாங்க சார் சரக்கு அடிச்சா தான் நல்லா அறுக்க முடியும்னு ஏற்கனவே சோகமா இருக்கிற உறவுகள் கிட்ட காசை புடுங்கு புடுங்குனு புடுங்கி மண்டையை இரண்டா புளந்து அப்புறம் உடம்பில் கழுத்தில் இருந்து கீழ் வரை ஒரே வெட்டு வெட்டு உள்ளே உள்ளது எல்லாம் எடுத்து அப்படியே கோனி தைக்கிற மாதிரி தைத்து ஒரு பொட்டலமாய் தான் தருவார்கள். இதனால் அவர்களுக்கு அளிக்க படும் இறுதி யாத்திரை குளியல் செய்ய முடியாது அது போக உடலை கட்டி கூட அழ முடியாத ஒரு அவலம் தான் இந்த போஸ்ட்மார்ட்டம்.

பெரும் சோகத்தை ஏற்படுத்தும் இதனை முறியடிக்க முதலில் இங்கிலாந்தின் மார்ச்சுவரியில் ஹைடெக் 3டி சி டி மற்றும் எம் ஆர் ஸ்கேனரை உபயோகபடுத்துகிறார்கள். இதன் மூலம் இறந்தவரை துல்லியமாக கத்தியின்றி ஆராய முடியும். அப்படியும் தேவை எனைல் தோலை சிறிதாக வெட்டினால் போதும். இதை செய்திருப்பது இங்கிலாந்து அரசாங்கம் செய்திருக்கும் கம்பெனி ஐஜீன் என்ற மலேஷிய கம்பெனி. இதன் மூலம் இங்கிலாந்தில் 2015க்குள் எல்லா மருத்துவமனையிலும் செய்ய இயலும். இதே போல மலேஷியாவில் உள்ல கோலலம்பூர் ஜி ஹெச் எனப்படும் அரசாங்க மருத்துவமனையிலும் இது நடக்கிறது.

இப்படி மோசமான மரணத்தின் இறுதி சடங்க்காற்றும் இந்தியாவுக்கு மிக அவசிய தேவையான ஒன்று இது. உலகில் எவ்வளவு பெரிய அப்பாடக்காராய் இருந்தாலும் ஒரு முறை ராயப்பேட்டை அல்லது ஜி ஹெச்சில் உள்ள சவக்கிடங்குக்கு போய் வந்தால் அவர்களின் அத்தனை ஆணவ ஆட்டமும் அடங்கும் என்று நான் அடித்து கூறுவேன்………….சே இவ்வளவுதானா மனிதன் வாழ்க்கை என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம்.!

பேஸ்புக், ட்விட்டர் மூலம் சதி + வதந்தீ = ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம்!

 

குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டுமா? அதற்கு ஒரு விலை.

*எதிராக உள்ள தலைவரின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமா? இதற்கு இரு மடங்கு விலை.

*குறிப்பிட்ட தொகுதியில் யாருக்கும் ஓட்டு விழக்கூடாது என்று தடுக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும்.

*தேவைப்பட்டால் வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும்.
nov 30 edit obra_post
 *உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும். இப்படி எதை வேண்டுமானாலும் செய்ய பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யுடியூப் வலைதளங்களை பயன்படுத்தி போலியாக செயற்கையாக மோசடித்தனமாக கருத்துக்களை பரப்புவது, வீடியோக்களை வெளியிடுவது என்பது ஒரு பிசினசாகவே நடக்கிறது. இப்படி அவதூறுகளை, வதந்திகளை பரப்பியும், ‘லைக்’ மற்றும் எதிரான கருத்துக்களை லட்சக்கணக்கில் வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தவே சில ஐடி கம்பெனிகள் உள்ளன. இவர்களால் போலியாக லட்சக்கணக்கில் வெறும் ‘லைக்’ போடுவது மட்டுமல்ல, எதிரான கருத்துகளை வெளியிடுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்படுத்தவும், குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவருக்கு செல்வாக்கை அழிக்கவும் முடியும். இதை ஒரு பிசினசாகவே இந்தியாவில் செய்வது யார் தெரியுமா? ஏதோ தாதாக்கள், மாபியாக்கள் என்று எண்ணி விட வேண்டாம். சில ஐடி கம்பெனிகள் தான். இந்த பெரும் சதி பிசினசை கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு வெப்சைட் ஏற்கனவே பல மோசடிகள், தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது இது. டெல்லியில் ஆரம்பித்து பெங்களூர் வரை 24 ஐடி கம்பெனிகளை கண்டுபிடித்து அவர்களின் இந்த கேவலமான ‘சதி’ பிசினசை இந்த வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக கோப்ரா போஸ்ட் வெப்சைட்டின் இணை ஆசிரியர் சையது மஸ்ரூர் அசன் என்பவர் தான் இந்த மோசடி ஐடி கம்பெனிகளை அணுகி பேசியுள்ளார்.

‘என் பாஸ் நேதாஜி வரும் சட்டசபை தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு அதிக ‘லைக்’ போட வேண்டும். அவர் வெற்றி பெற்றபின் லோக்சபா தேர்தலில் நிற்க வேண்டும். அதன் பின் அமைச்சராக வேண்டும். இதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை. பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் என்று அனைத்திலும் கருத்துக்களை பரப்ப வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லா கம்பெனிகளும் நம்பி பேரம் பேசியுள்ளன. இந்த கம்பெனிகளின் பெயர்களுடன் அவர்களுடன் நடத்திய பேரத்தை வெப்சைட் அம்பலப்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோப்ரா போஸ்ட் வெளியிட்ட தகவல்கள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, ஐடி நிறுவனங்கள் இப்படி நடந்து கொள்வது பற்றி வெப்சைட் வெளியிட்ட தகவல்கள் உண்மை தான் என்பது போல குறிப்பிட்டார். ‘சமீபத்தில் உளவுத்துறை கூட்டத்தில் கூட நான் இதுபற்றி குறிப்பிட்டேன். எனது கவலை இப்போது நிரூபணமாகி விட்டது. இன்னும் தகவல்கள் முழுமையாக வரட்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ரு தெரிவித்தார்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கெட்ட ரத்தத்தைக் குடிக்க அட்டைப் பூச்சி!


என் வயது 35. கடந்த பத்து வருடங்களாக முழங்கால் வலியால் அவதிப்படுகிறேன். எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் பயன் இல்லை. உள்ளங்காலில் எரிச்சலும், குடைச்சலும் வேறு இருக்கிறது. இதனால் நான் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். தூக்கமின்மையாலும் தவிக்கிறேன். இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா?

உள்ளங்கால் எரிச்சல் என்பது சூடு எனும் குணத்தைக் கொண்ட பித்த தோஷத்தின் சீற்றம், ரத்தத்தில் கலப்பதால் ஏற்படக் கூடும். இந்தக் கலப்பினால் ரத்தம் கெட்டுவிடக் கூடும். அவரைக்காய், நீர் வாழ் பிராணிகளின் மாமிசம், கொள்ளு, புளிப்பான மதுபானம், மோர், தயிர், உணவில் அதிக காரம், புளி, உப்பு ஆகியவற்றின் சேர்க்கை, சாப்பாட்டிற்குப் பிறகு பகலில் படுத்து உறங்குவது, குடையும் காலில் செருப்பில்லாமலும் கடும் வெயிலில் அலைந்து திரிவது போன்ற செய்கைகளாலும், அவ்வாறு அலைந்துவிட்டு உடனே குளிர்பானங்களைக் குடிப்பது ஆகியவற்றால் ரத்தத்தில் பித்த சீற்றம் கூடி எரிச்சலை உண்டாக்குகிறது.

பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்வது, இரு சக்கர வாகனத்தில் குண்டும் குழியுமாக உள்ள பாதைகளில் பயணம் செய்வது, குளிர்ச்சியான நீரில் நீந்துவது, குளிப்பது, கால்களால் அதிகம் மிதித்து தையல் மிஷினில் வேலை செய்வது போன்றவற்றால் இடுப்பிற்குக் கீழே வாயுவின் சஞ்சார விசேஷம் கூடுகிறது.

ஆனால், தமனிகளில் சஞ்சரிக்கும் கேடுற்ற ரத்தத்தினால் வாயுவின் ஓட்டத்திற்குத் தடை ஏற்படுகிறது. அதன் கதி முடக்கம், மூட்டுகளில் வலியும், உள்ளங்கால் எரிச்சலுக்கும் காரணமாகின்றன.

இதற்கு வாத ரத்தம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. முதலில் சருமம், மாம்ஸம் ஆகிய தாதுக்களில் தங்கி உண்டாகும் வாத ரத்தம், உத்தானம் அதாவது வெளிப்படையானது எனப்படும். பிறகு எல்லாத் தாதுக்களிலும் பரவும். இந்த நிலைக்குக் கம்பீரம் அதாவது ஆழ்ந்தது எனப் பெயர்.

இந்நோயில் கெட்டுள்ள ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். காலில் பெருவிரல் பகுதிக்கும் அதற்கு அடுத்துள்ள விரலுக்கும் நடுவே உள்ள பகுதிக்கு க்ஷிப்ர மர்மம் என்று பெயர். அதிலிருந்து 2 அங்குலம் மேலே அட்டைப் பூச்சியை வைத்து கடிக்கச் செய்தால், கெட்ட ரத்தத்தைக் குடித்துவிடும். உடலில் நெய்ப்புத் தரும் நெய் மஜ்ஜை முதலியவற்றைக் கொடுத்து எண்ணெய்ப் பசையை உருவாக்கிய பிறகு, மேற்குறிப்பிட்ட அட்டைப் பூச்சி வைத்தியம் சிறந்தது. கெட்ட ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, ஆயுர்வேத கஷாய மருந்துகளாகிய பலாகுடூதசச்யாதி, கோகிலாக்ஷம், ப்ருகத்யாதி, தசமூலம் போன்றவற்றில் உங்களுக்கு எது உகந்ததோ அதை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

பிண்ட தைலம், மஞ்ஜிஷ்டாதி தைலம் போன்றவை மேல் பூச்சாக உபயோகிப்பது, ஆஸன வாய் வழியாக மலப்பையில் சேர்க்கப்படும் எண்ணெய் வஸ்தி, குடல் கழிவுகளை அகற்றும் கஷாய வஸ்தி, முட்டி வலியைப் போக்கும் ஜடாமயாதி, கொட்டம் சுக்காதி போன்ற மேல்பூச்சு பற்று மருந்துகள், மூலிகைத் தைலத்தைத் தாரையாக முட்டி மற்றும் பாதங்களில் ஊற்றுவது போன்ற சிறப்பான மருத்துவ முறைகளால் நீங்கள் விரைவில் குணம் பெறலாம்.

அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண்ணுங்க...


உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகம...ாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, ஏப்பம் வந்தால் ஒருவித கெட்ட துர்நாற்றமும் வீசும். இப்படி அடிக்கடி ஏப்பம் விட்டால், யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். ஆகவே பலர் ஏப்பத்தால், சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும் அடிக்கடி ஏப்பம் வந்தால், நமக்கே எரிச்சல் ஏற்படுவதோடு, உடலும் சோர்ந்து விடும். இருப்பினும் இத்தகைய தொடர் ஏப்பத்திற்கு பல்வேறு இயற்கை நிவாரணிகள் உள்ளன. எனவே ஏப்பம் வரும் போது கீழ் கூறியவற்றை முயற்சித்தால், நிச்சயம் ஏப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சரி, அந்த இயற்கை நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

அடிக்கடி ஏப்பம் விட்டு மானம் போகுதா? இத ட்ரை பண்ணுங்க...

குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.

சோடா

அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம்.

புதினா

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீ கூட ஏப்பத்திற்கு நல்ல நிவாரணியாக விளக்கும். அதற்கு ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடியுங்கள்.

சோம்பு

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

சீமைச்சாமந்தி டீ

 
டீயிலேயே ஏப்பத்தை கட்டுப்படுத்துவதில் சீமைச்சாமந்தி டீ தான் பெஸ்ட். எனவே அடிக்கடி ஏப்பம் வந்தால், சீமைச்சாமந்தி டீயை குடியுங்கள்.

செலரி

செலரியை சிறிது வாயில் போட்டு மென்றால், ஏப்பம் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஏலக்காய் டீ

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

குளிர்ந்த பால்

ஒரு கப் குளிர்ந்த பாலை மெதுவாக குடித்து வந்தாலும், ஏப்பம் வருவதை தடுக்கலாம்.

கிராம்பு

ஒரு துண்டு கிராம்பை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

கோதுமை பிரட்

ஒரு துண்டு கோதுமை பிரட் சாப்பிட்டால், அது ஏப்ப பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

எலுமிச்சை ஜூஸ்


எதுவும் முடியவில்லையா, ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

தயிர்

இல்லாவிட்டால், சாப்பிடும் போது ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள், நல்ல மாற்றம் தெரியும்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்


 இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.


இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.


 இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

 தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.

சீரகம் – 1 ஸ்பூன்

 சோம்பு – 1/2 ஸ்பூன்

 சின்ன வெங்காயம் – 3

கறிவேப்பிலை – 2 இணுக்கு

 கொத்தமல்லலி – சிறிதளவு


 நெல்லி வற்றல் – 10 கிராம்

 வெட்டிவேர் – 5 கிராம்

 இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

வெள்ளை மீசை பறவை!



படத்திலுள்ள, இந்த இன்கா டெர்ன்ஸ் எனும் பறவைகள் வளரும் போது, கூடவே நீண்ட வெள்ளை மீசையும் வளருகிறது. பெரு மற்றும் சிலி நாடுகளில் இவை அதிகம் காணப்படுகிறது.

ஸ்டர்னிடி குடும்பத்தை சேர்ந்த இப்பறவைகள், நீர் பறவை வகையை சேர்ந்தது. பார்க்க நம்ம ஊர் காக்கையை போல இருந்தாலும், கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் காணப் படுகிறது. இதன் அலகுகள், ஆரஞ்சு கலந்த சிவப்பில் இருக்கும். தலைப்பகுதிக்கு, கீழ் இருபுறமும் வெள்ளை மீசை இருக்கும் ஒரே பறவை இனம் இதுதான். இதன் கால்களும், பாதமும் மருதாணி வைத்ததை போன்று, கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பாறைகளுக்கு நடுவிலும், மரப்பொந்துகளிலும் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும். ஒரு முறைக்கு, ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை மட்டுமே இடும். இம்முட்டைகளை இப்பறவை கள், நான்கு வாரங்கள் அடைகாக்கும். இந்த அரிய வகை பறவை உலகளவில், மிக குறைந்த எண்ணிக்கையில், உள்ளதால், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கோபம் கோபம் கோபம்!

மூன்று எழுத்திலே மனிதனின் வாழ்கை உள்ளது ! ஆம் நம்மை நிர்ணிப்பது பல,

அவற்றில் சில முன்றே எழுத்து உதாரணமாக மனம் மானம் கல்வி காதல் .இதில் மிக முக்கியமானது மனம் அதன் வழி வருவது கோபம். ஆம். நான் எனக்கு கோவத்தை பற்றி தெரிந்ததை உங்களிடம் பகிர விரும்புகிறேன் .

சரி நாம் முதலில் ஒரு உதாரணம் காண்போம் ஒரு மாணவி அன்று ஸ்கூலில் காலையில் extra class இருக்குது என்று சீக்கிரம் செல்ல வேண்டும் என்று அதற்கு முன்தினம் கூறுகிறாள் . அவர்களும் சரி என்கிறார்கள் .

அடுத்த நாள் காலை அவள் லேட்டாக எழுகிறாள் வீட்டிலுள்ள அனைவரையும்  திட்டுகிறாள். அம்மாவிடம் "எவ்ளோ நேரமா தான் சமைக்கிற" என்று கத்துகிறாள் தங்கையிடம் சீக்ரம் டிரஸ் iron பண்ணுடி" என்கிறாள் . தந்தை இடம் எதுவும் சொல்ல சொனால் அவளுக்கு திட்டு தான் என்பது தெரியும் . இவ்ளோ கத்திவிட்டு பள்ளிக்கு செல்கிறாள் அங்கே சென்றால் ஆசிரியர் வரவில்லை . நிதானமாக யோசித்தால் இதில் அவள் மேல் உள்ள தவறு அவளுக்கு புர்யும் .

புரிந்து என்ன பயன் அவள் அப்போதே கட்டு படுத்தி இருக்க வேண்டும் . ம் இப்போது யோசித்து பயன் இல்லை இது போல் தான் நாமும் நம் கோபத்தை பல இடங்களில் கட்டுப்படுத்தாமல் இருகின்றோம் இதனால் எவ்ளோ பிரச்சனைகள் நாம் சண்டை இடவரிடம் திரும்பிய் சென்று முகம் கொடுத்து பேச இயலுமா நம்மால்.

முடியாது அல்லவே சரி இந்த கோவத்தை கட்டுபடுத்துவது எப்படி?

எல்லாருக்கும் தெரிந்தவைகள் கோவம் வரும் இடத்தை விடு வெளியில் செல்வது

நீர் குடிப்பது

Numbers தலைகீழாக எண்ணுவது இன்னும் பல

வேற என்ன செய்யலாம் என்றால் அந்த இடத்திலேயே நமக்கு பிடித்த படலை பாடி கொண்டல் கோவம் குறையும்

இல்லையேல் தினமும் யோகா செய்யுங்கள்

இல்லையேல் கோவம் வருவது போல் இருந்தால் உடனே சிரித்து விடுங்கள்.

சருமத்தை பளபளக்க வைக்கும் சில அற்புத எண்ணெய்கள்!!!


அழகான மற்றும் பளபளப்பான தோலை பெற வேண்டும் என்றால் தோலை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். உங்கள் தோலை பளபளப்பாக வைக்க செய்ய வேண்டியவற்றில் ஒன்றாக அதற்கு மிகவும் தேவையான எண்ணெய் சத்துக்களை அளிக்க வேண்டும். மிகவும் தேவையான எண்ணெய்கள் என்று வரும் போது, அவை சென்ட் பாட்டில்களில் விற்கப்படும் தாவரச் சாறுகளை குறிப்பிடுவதில்லை. இந்த எண்ணெய்களுக்கு உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய சிறந்த குணங்கள் உள்ளன. இவை வலி நிவாரணிகளாகவும் மற்றும் சக்தியை வழங்குபவையாகவும் கூட செயல்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் உங்கள் தோலையும் பளபளக்கச் செய்கின்றன.

மூப்படைதல், ஹார்மோன் சமனிலையற்ற தன்மைகள் மற்றும் பிற காரணங்களால் நமது தோல் பகுதி பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இந்த எண்ணெய்கள் பிரச்னைகளை சமாளித்து, தோலை முறையாக பராமரிக்கின்றன. எண்ணெய் கொண்டு தோலை பராமரிப்பது மிகவும் சிறந்த வழிமுறையாகவும் மற்றும் இது அரோமா தெரபியின் ஒரு பகுதியாக இருந்து உங்கள் தோலின் அடிப்பகுதி வரையிலும் சென்று, உள்ளிருந்தே வேலை செய்யும். நீங்கள் இந்த எண்ணெய்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி குறிப்பிடத்தக்க பிரச்சனைகளிலிருந்து உங்கள் தோலை குணப்படுத்த முடியும்.

எண்ணெயை உங்கள் தோலின் மேல் தடவும் போது அதன் தரம், உருவாக்கம், நீட்சித்தன்மை போன்றவை உங்கள் மனதிற்கு சந்தேகத்தை உருவாக்கும், இந்த எண்ணெய்களை குறைவான அளவே பயன்படுத்தினால் கூட உங்கள் தோல் எளிதில் கிரகித்துக் கொள்ளும். இது உங்கள் தோல் பகுதியின் துளைகளை அடைத்துக் கொள்ளும் என்ற சந்தேகத்தை முழுமையாக நீக்கி விடும். இங்கே உங்களுடைய தோல் பகுதியை பளபளக்க வைக்கும் சில முக்கியமான எண்ணெய்களைப் பற்றி கொடுத்துள்ளோம். மேற்கொண்டு படித்து, மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

பாதாம் எண்ணெய்

 பொதுவாகவே தோல் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் பாதம் எண்ணெய் பாதாம் கொட்டையை காய வைத்து அதிலிருந்து எடுக்கப்படுகிறது. பாதம் எண்ணெயில் உயர்வான ஈரப்பதத்தை ஏற்படுத்தும் தன்மைகளும் மற்றும் தோலுக்கான சத்துக்களும் உள்ளன. தோலினால் எளிதில் கிரகித்துக் கொள்ளப்பட்டு, அதன் மூலமாக பளபளப்பை தோன்றச் செய்வதாக பாதம் எண்ணெய் உள்ளது. இது தோல் அரிப்பையும், வறட்சியையும் சரி செய்கிறது.

ஆர்கன் எண்ணெய் (Argan oil)

எண்ணெய் கொண்டு தோலை பராமரிக்கும் வேளைகளில் ஆர்கன் எண்ணெய் மிகச்சிறந்த நிவாரணியாக உள்ளது. உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை நீக்கும் தனித்தன்மையான குணத்தை கொண்டதாக ஆர்கன் எண்ணெய் உள்ளது. வலியில் உள்ள சருமத்தை குணப்படுத்தவும் மற்றும் கறைகளை நீக்கவும் இது உதவுகிறது. இது மட்டுமல்லாமல், ஆர்கன் எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் கிருமிகளை அழிப்பவையாகவும் உள்ளன.

பபாஸ்சு எண்ணெய் (Babassu oil)

பிரேசிலின் பபாஸ்சு பனையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் தோலை பளபளக்க வைக்கும் எண்ணற்ற குணங்கள் உள்ளன. இயற்கையாக தோலை ஈரப்பதமாக வைக்கவும் மற்றும் தோலை அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. மேலும், இந்த எண்ணெயை தலைமுடி பராமரிப்பிற்கும் பயன்படுத்தலாம்.

ஆமணக்கு எண்ணெய்/விளக்கெண்ணெய்

 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ள ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு தோலில் தடவினாலே போதும், எளிதில் கிரகித்துக் கொள்ளும். ஈரப்பத்தத்தை ஏற்படுத்தும் பொருளாகவும் மற்றும் தோலின் ஈரப்பதத்தை நிலைநிறுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெயும் தலைமுடி பராமரிப்பிற்கான எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது.

தேங்காய் எண்ணெய்

 தோல் பராமரிப்பிற்காக மிகவும் பொதுவாகவே பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் ஒன்றாக தேங்காய் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் தோல் மற்றும் தலைமுடி பராமரிப்புக்கான இடுபொருட்கள் நெடுங்காலமாகவே உள்ளன. இது தலைக்குள் நன்றாக ஊடுருவி சென்று தலைமுடியின் செழித்து வளரச் செய்கிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட தோல் மென்மையாகவும் மற்றும் பஞ்சு போலவும் இருக்கும்.

ஜோஜோபா எண்ணெய் (Jojoba oil)

எண்ணெய் வழியாக தோலை பராமரிக்கும் போது மறக்கக் கூடாத விஷயமாக ஜோஜோபா எண்ணெய் உள்ளது. இது ஒரு திரவ மெழுகாக உள்ளது. ஜோஜோபா எண்ணெயில் சில வலி எதிர்ப்பு பொருட்களும் மற்றும் தோலுக்குள் ஆழமாக பரவும் தன்மையும் உள்ளது. இந்த எண்ணெய்க்கு தோலை பளபளப்பாக்கும் தன்மையும் உள்ளது.

வேப்ப எண்ணெய்

 பாக்டீரியா எதிர் தன்மைகளுக்காக அறியப்படும் வேப்ப எண்ணெயை மருந்தாகவும், தோல் பராமரிப்பிற்கும் பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத சிகிச்சையில் முதன்மையான இடத்தைப் பெற்றதாகவும் மற்றும் நெடுங்காலமாகவே தோல் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுவதாகவும் வேப்ப எண்ணெய் உள்ளது. சொரியாஸிஸ், எக்ஸீமா, அரிப்பு போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இது உள்ளது.

ஆலிவ் எண்ணெய்

 தோலின் ஈரப்பதம் குறைவதை தடுக்கவும் மற்றும் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதில் திறன் மிக்க பொருளாகவும் ஆலிவ் எண்ணெய் உள்ளது. இது தோலை மென்மையான, மிருதுவான மற்றும் பளபளப்பாக மாற்றும் எண்ணெயாக உள்ளது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால் உங்களுடைய வயது சற்றே குறைந்து காணப்படுவீர்கள். இந்த எண்ணெயை தலைமுடி பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.

திராட்சை விதை எண்ணெய் (Grapeseed oil)

எண்ணெயை தடவினால் சருமம் வழுக்கும் என்று நீங்கள் எண்ணினால், கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கிறது திராட்சை விதை எண்ணெய். இது தோலினால் உடனடியாக கிரகித்துக் கொள்ளப்படும் தன்மையைக் கொண்ட எண்ணெயாகும். உங்கள் தோலை எப்படி மின்னச் செய்வது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், உடனடியாக திராட்சை விதை எண்ணெயை பயன்படுத்துங்கள்.

கேரட் வேர் எண்ணெய் (Carrot root oil)

சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை குணப்படுத்த கேரட் வேர் எண்ணெய் உதவுகிறது. இது வலியை குணப்படுத்தும் சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தலைமுடி பராமரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டு, உங்கள் முடியை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. முயற்சித்துப் பாருங்களேன்!

கறிவேப்பிலை ஜூஸ் - சமையல்!



கறிவேப்பிலை ஜூஸ்


 என்னென்ன தேவை?

தளிர் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,


பச்சை மிளகாய் - 1/2,


உப்பு - தேவைக்கேற்ப,


சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,


எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?


கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை இவற்றுடன் சேர்த்து மையாக அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.


அதனுடன் பாதி அளவு தண்ணீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஐஸ் கட்டி சேர்த்துப் பருகவும். சுவையான புத்துணர்ச்சி பானம்...

7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்!


வாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர் உடல் நலனில் காய்கறிகளின் பங்கு பற்றி விரிவாக ஆராய்ந்தனர்.

அதற்காக ஒரு குழுவை தேர்வு செய்து அவர்களை கோயில் ஒன்றில் தங்க வைத்தனர். அவர்களுக்கு சைவ உணவை வழங்கப்பட்டது.. இந்த ஆய்வுக்கு முன்பும் அவர்களின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் 5 நாட்களுக்கு பிறகும் குழுவினரின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. கோயிலில் தங்கி சைவ உணவை மட்டுமே சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது தெரிய வந்தது.

வாரத்தின் மீதி நாட்களில் அசைவ உணவுகள், கொறிக்கும் வகையில், சாப்பிட அனுமதிக்கப்பட்டது. அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது தெரியவந்தது. எனவே வாரத்ததில் குறைந்தபட்சம் 5நாட்கள் காய்கறிகள் சேர்ந்த சைவ உணவு அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சிக்குழு ஆய்வாளர் கூறுகையில் சைவ அசைவ உணவுகளால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் சிறுநீர் பரிசோதனையில் உடனுக்குடன் தெரிகின்றது. ரசாயன சுரப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தை காக்க வாரத்தில் 5நாட்கள் காய்கறிகள் கலந்த சைவ உணவு அவசியம் என்கின்றனர்.

ஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை...?

இணையத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்த கொள்ளவேண்டிய முக்கியமான் விசயம், Hacking, Hackers, நாம் எவ்வாறு ஹாக் செய்ய படுகிறோம், நம்மை எவ்வாறு தற்காத்து கொல்வது, எந்த விட தடயமும் இல்லாமல் எப்படி மற்றவர்கள் சிஸ்டம்ஸ் ஹாக் செய்யவது என்பது பற்றி இந்த தொடரில் பார்க்கலாம்....



Hacking என்று சொன்ன உடன் மனதில் hacker, Swordfish, Die hard -4 என்ற படத்தில் வருவது போல ஹக்கர் அக வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் அணுகினால் உங்களுக்கு உற்படியாக ஒன்றும் கிடைக்காது. முதலில் இந்த கான்செப்ட் நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். “ Dont Learn To Hack, But Hack To Learn:

நான் நிறைய பேரை இணையத்தில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் Over nite il Obama அக வேண்டும் என்று தான் நினைகிறர்களே தவிர, கற்று கொள்ள நினைப்பது இல்லை.



Dont Search in Google by, “ How do hack gmail / facebook / twitter”

எவனோ ஓருவன் ஒரு Opensource Software செய்து அதை உங்களுக்கு இணையம் முலம இலவசமாக வழங்கி, அதில் யாருடைய password உங்களுக்கு வேண்டுமோ அதில் User ID எண்டர் செய்தால் தரும் அளவுக்கு எந்த Automated Software உம் கிடையாது,

மேலும் இது போன்ற ஒரு automated Software முலம தனது Server il Vulnerability இருக்கும் அளவுக்கு எந்த நிறுவனமும் Server Maintences பண்ண மாட்டார்கள்.

என்னவே கூகிள் இல் இது போன்று தேடுவதை நிறுத்துங்கள். ஆனால் உண்மையுள் Google is the best application to steal infromation from websites. but you have to use your KEYWORDS properly. இதை பற்றி பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம். ஏன் என்றால் இதை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு போடலாம். அந்த அளவுக்கு Google Hacking பற்றி இருக்கிறது.

இணையத்தில் நமது பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு என்று Anti-Virus Software மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தால் உங்களை போன்று ஒரு முட்டாள் கிடையாது. Anti-virus Software என்பது உங்களது கணினியில் இருக்கும் அல்லது பாதிப்பு உண்டாக்கும் மென்பொருள் பதிவிறக்கும் பொது அலெர்ட செய்யும், மற்றும் அதை தடுக்க உங்களுக்கு ஒரு அலெர்ட் குடுக்கும், அவள்ளுவே....

அனால் Hacker’s என்பவர்கள் இது தெரியாதே மூடர்கள் அல்ல. ஹாக்கிங் என்பது ஒரு Default Systemஇல் அதன் போக்கில் சென்று அதில் உள்ள Loop-Holes என்பதை அறிந்து, அதன் முலம அந்த System மை தகர்பவர்கள்.

உங்களுக்கு புரிவது போல சில எ.கா: •
  • Ctrl+C குடுத்து நீங்கள் copy பண்ணி வைத்து இருக்கும் தகவல்களை பெறுவதற்கு சில Script Lang போதும். எதைவாது நீங்கள் காப்பி செய்து விட்டு இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் காப்பி செய்து வைத்து இருக்கும் தகவல் அந்த இணையத்தில் O/P அக கிடைக்கும், இதை எல்லாம் எந்த Anti-virus Software உம் தடுக்காது. இதுபோன்று சில Cookie-Stealing Programmes இருக்கின்றேன...நீங்கள் உங்களுது browser இல் Auto-Login குடுத்து வைத்து இருந்திர்கள் என்றால், I’m Sorry Bro, உங்கள் Browser, உங்களுது User-Id, & Password ai Save செய்து வைத்து இருக்கும். இது ஹாக்கர் களுக்கு மிகவும் எளிதாக உங்கள் User-Id, & Password ஐ எடுத்து கொள்ளுவார்கள்.

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது FB & Twitter இல் Unknown Persons குடுக்கும் Link ஐ நீங்கள் Click செய்தாலே போதுமானது, அவர்களுக்கு உங்கள் தகவல் அணைத்து சென்று விடும்.

மேலும் நீங்கள் இலவச மென்பொருள் பயன்பட்துவோரக இருபிர்கள் என்றால், அது browser il automatic அஹ சில tool-box இன்ஸ்டால் பண்ணி இருந்தால் அவற்றையும் முதலில் நிக்கி விடுங்கள்.....


  • சில மாதங்களுக்கு முன்பு FB il கிட்டதிட்ட அணைத்து User ID களும் Tag செய்ய பட்டு ஒரு காணொளி வெளியானது, An Women With An Axe, நியாபகம் இருக்கிறதா... அது இது போன்ற ஒரு Cookie-Stealing Programme தான், 
  • மேலும் Twitter இல் நீங்கள் எந்த DM மும் அனுபாமல் அனால் உங்கள் followers அனைவர்க்கும் உங்களுது பெயரில் ஒரு DM சென்று இருக்கும். அதில் ஒரு விளம்பரமும், ஒரு link உம் இருந்து இருக்கும், அதை கிளிக் செய்த அனைவருது Data வும் திருட்டு போய் விடேன்.

An Unconfirmed News that, HAckers had Stealed more then 500 million FB, Twitter Accounts with that link’s.

எனவே நீங்கள் உங்களது பாஸ்வார்டு ஐ மாற்றி 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் ஆயின் முதலில் மாற்றி விடுங்கள்.

FB & Twitter இல் கண்டகண்ட appஐ use பன்னுபவராக இருந்தால் முதலில் உங்கள் செட்டிங்க சென்று எண்ணென APP பயன்பாட்டில் இருக்கின்றேனே, எவை எவை தேவை இல்லை என்று கண்டோறிந்து அவற்றை முதலில் Delete செய்யுங்கள்.

முதலில் நீங்கள் எவ்வாறு எல்லாம் தாக்க படலாம் என்று அறிந்து கொண்டால், நம்மை தற்காத்துக்கொள்ளவும் முடியும், அதே முறையில் மற்றவர்களை தாக்கவும் முடியும்.