Search This Blog

Tuesday 12 November 2013

கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லாத காரணம் !


ஆல்ஃபிரட் நோபல் விரும்பிய பெண், மிடாஸ் லெஃப்பர்
என்ற கணித மேதையைத் திருமணம் செய்து கொண்டு
போய் விட்டாள். மனம் கசந்து போனார் நோபல்.


      அதனால்தான் நோபல் பரிசை உருவாக்க வேண்டும்
என்று உயில் எழுதி வைத்த போது,அதில் கணிதத்தை சேர்க்கவில்லை என்கிறார்கள்.


      முதல் நோபல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது.




யூடியூப்பை சிறப்பாக பயன்படுத்த சில வழிகள்!

வீடியோ பகிர்வு சேவையான யுடியூப் தளத்திற்கு அறிமுகமே தேவையில்லை.யூடியூப்பை பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கவும்,நகைச்சுவை வீடடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் நீங்கள் பயன்படுத்தி வரலாம்.பிரப்லமான செய்தி கிளிப்களை பார்க்க, திரைப்பட டிரைலர்களை காண என மேலும் பலவழிகளில் யூடியூப்பை பயன்படுத்தலாம்.

யூடியூப் சார்ந்த பல்வேறு சேவைகளும் இருக்கின்றன. யூடியுப்பிலே கூட பலவேறு வசதிகள் இருக்கின்றன.யூடியூப்பில் உள்ள எல்லா வசதிகளையும் எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இப்படி பரவலாக அறியப்படாத ஆனால் பயனுள்ள யூடியூப் வசதிகள் சிலவற்றை பார்க்கலாம்.

யூடியூப்பில் பாட்டு கேட்பது சுலபமானது. பிடித்த பாடலை வீடியோவோடு பார்த்து ரசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.ஆனால் யூடியூப்பில் பாடல கேட்பதில் உள்ள ஒரே சங்கடம் ஒவ்வொரு பாடல் முடிந்த பிறகும் அடுத்த பாடலை தேர்வு செய்து கொன்டிருக்க வேண்டும். இசைவானில் மிதக்க விரும்பும் போது இப்படி ஒவ்வொரு பாடலாக தேர்வு செய்ய வேண்டியிருப்பது அந்த அனுபவத்தையே பாழாக்கி விடும்.

இதற்கு மாறாக விருப்பமான பாடல்கள் அடுத்தடுத்து ஒலிபரப்பாக கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.சுகமாக தான இருக்கும் இல்லையா? இப்படி யூடியூப்பிலேயே பாடல்களை வரிசையாக கேட்டு மகிழலாம்.இதற்கான பிலேலிஸ்டை உருவாக்கி கொள்ளும் வசதியை யூடியூப் டிஸ்கோ  http://www.youtube.com/disco  தருகிறது.இந்த சேவையில் உங்களுக்கு பிடித்தமான பாடகர் அல்லது பாடலை சமர்பித்தால அதனடிப்படையில் பிலேலிஸ்ட்டை உருவாக்கி தருகிறது. அதில் உள்ள பாடல்களை ஆனந்தமாக கேட்டு ரசிக்கலாம். பாப் பிரியர்கள் என்றால் இந்த சேவை பரிந்துரைக்கும் பிரப்லமான பாடல்கள் அல்லது பிரபலமான பாடகர்கள் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

இதே போல யூடியூப்பில் உள்ள மற்றொரு பயனுள்ள வசதி யூடியூப் லைவ்.http://www.youtube.com/live இது நேரடி ஒளிபரப்புக்கான சேவை. இதன் மூலம் தற்போது இணையத்தில் காணகிடைக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தேடாமலே தேடி பார்த்து ரசிக்கலாம். அமெரிக்க அதிபர் மாளிகை ஒளிபர‌ப்பு, விளையாடு நிகழ்ச்சிகள் என் பலவற்றை பார்க்க முடியும்.குறிப்பிட்ட நேரத்தில் நேரடி ஒளிபர்ப்பு நிகழ்ச்சிகள் எவை என்பதை இதன் முகப்பு பக்கத்திலேயே பார்த்து தெரிந்து கொள்லலாம்.அவற்றில் உங்களை கவரும் சேவைக்கு உறுப்பினாராகும் வசதியும் இருக்கிற‌து.இந்திய நிழச்சிகளில் துவங்கி பிரபலமான அல்ஜசிரா டிவி  உட்பட உலக‌ம் ம்ழுவதும் உள்ள பல நிகழ்ச்சிகளை பார்கலாம். இத்த்னை நேரடி ஒளிபரப்புகளா என வியந்டு போவீர்கள்.

அது மட்டுமா இந்த வசதியை வீடியோ உரையாடலுக்கான கூகுல் ஹாங்க் அவுட வசதியுடன் இணைத்து கொள்ளலாம். அப்போது ஹாங்க் அவுட்டில் பங்கேற்காதவர்கள் கூட இதை நேரடி ஒளிபர‌ப்பாக பார்க்க முடியும்.

நீங்கள் எடுக்கும் வீடியோக்களையும் யூடியூப்பில் பதிவேற்றலாம். அந்த வீடியோ நேரத்தியாக இருக்க வேண்டும் என்றால் அது அழகாக எடிட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.இதற்கான வசதியும் யூடியூப்பில் இருக்கிறது. யூடியூப் வீடியோ எடிட்டர் http://www.youtube.com/editor   மூலம் உங்கள் வீடியோக்களை அழகாக எடிட் செய்து பலரும் பார்த்து ரசிக்க செய்யலாம்.பல காட்சிகளை சேர்ப்ப‌து,பின்னணி இசை சேர்ப்பது, எடிட் செய்வது, உப‌ தலைப்புகள் கொடுப்பது என பல‌விதங்களில் வீடியோக்களை மெருகேற்ற‌லாம்.எதையும் தரவிறக்கம் செய்யாமல் உங்கள் பிரவுசரிலேயே இவற்றை மேற்கொள்ளலாம்.

யூடியுப் வழங்கும் மற்றொரு பயனுள்ள சேவை வீடியோக்களின் தரவிறக்க வேகத்தை அறிந்து கொள்வது. சில நேரங்களில் வீடியோ கோப்புகள் கிளிக் செய்தவுடன் தரவிறக்கம் ஆகாமல் தாமதாமாகலாம். இது போன்ற நேரங்களில் என்ன யூடியூப் மை ஸ்பீடு   http://www.youtube.com/my_speed    பக்கத்திற்கு சென்றால் என்ன பிரச்ச்னை என்று தெரிந்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் வீடியோ தரவிறக்கம் ஆகும் வேகம் தொடர்பான விவரங்கள் இதன் மூல தெரிந்து கொண்டு செயல்படலாம்.உங்கள் இணைய வேகம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள இணைய வேகம் ஆகிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தூக்கமின்மையும் அதற்கான தீர்வும்!

 ‘மெத்தைய வாங்கினேன்
  தூக்கத்தை வாங்கலை’

என்ற பாடல் நம் காதுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. இதற்கு அர்த்தம்தான் என்ன? தூக்கமின்மைக்கு என்ன காரணம். தூக்கத்தின் அளவு மனிதனுக்கு அவரவர் வயதிற்கேற்ப மாறுபடுகிறது. பிறந்த குழந்தைக்கு 16 மணியிலிருந்து 20 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.வயது வந்தவர்களுக்கு 7 மணி முதல் 9 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. வயதானவர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.

பொதுவாக இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு என்கிறார்கள் மருத்துவர்கள் .அதிலும் சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால் கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும். ஆனால் 30 வயதுக்கு மேல்தான் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது.

உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும்.

தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை துவங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது.

குழந்தைகளுக்கு சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், குழந்தைகள் பயங்கரமான கனவுகளால் விழிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கனவு பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மரபு ரீதியான இரவு நேர பய உணர்வும் தூக்கத்தின் எதிரியே. தூக்கத்தில் எழுந்து நடப்பது, தானாகப் பேசுவது போன்ற குறைபாடுகளும் குழந்தைகளிடம் காணப்படலாம். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகள் நிம்மதியான தூக்கம் பெற முடியும். பாதுகாப்பு முறை: தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித் தால் நன்றாக தூக்கம் வரும். தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இன்றி இருத்தல், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தவிர்த்தல், மனக்கவலைகளை ஓரம் கட்டுதல் வேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகள் செய்வதைத் தவிர்க்கவும்.

இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும். இரவில் மது அருந்தும் பழக்கத்தை கைவிடவும். மூளையைத் தூண்டும் மருந்துகளைத் தவிர்க்கவும். புகை பிடிப்பதும் நல்லதல்ல. பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொள்ளவும். மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.

புரோகிராம்களை முறையாக மூடிட புதிய மென்பொருள்!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.



சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், ""அனைத்து புரோகிராம்களையும் மூடிவிடவும்'' என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.


இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம்.


இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது.


"x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் "கொல்லப் (kill) படுகின்றன”.


இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும். ஆனால் அது முறையாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை



என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

உயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்!

இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை. புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்ற 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவை, பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, தன் சேவைகள் , ஜிமெயில், யு ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில், கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.

ஆனால், பயனாளர்களுக்கு இந்த கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. இக்காலத்தில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் பால் மக்கள் அதிக ஆர்வம் கொண்டு பயன்படுத்தி வந்தனர். ஆனால், தொடர்ந்த காலத்தில், பயனாளர்கள் கூகுள் ப்ளஸ் பக்கம் தங்களை இணைத்துக் கொண்டு, அதன் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், ட்விட்டர் தளத்தினை கூகுள் ப்ளஸ் மிஞ்சிவிட்டது.

இருப்பினும் ட்விட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் இணைந்த எண்ணிக்கை, பேஸ்புக் எண்ணிக்கையை எட்ட இயலவில்லை. ட்விட்டரிடம் 23 கோடி பயனாளர்கள் உள்ளனர். கூகுள் ப்ளஸ், தன்னிடம் 30 கோடி பதிவாளர்களைக் கொண்டுள்ளது.

பேஸ்புக்  பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது.
கூகுள் ப்ளஸ் தளத்தின் அதீத வளர்ச்சி, சென்ற மே மாதத்திற்குப் பின்னரே ஏற்பட்டது. மே மாதம் இதன் வாடிக்கையாளர்கள் 20 கோடியாக இருந்தனர். (பார்க்க: usatoday.com) கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் நோக்கம், பேஸ்புக் தளத்தினை

வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வெற்றி கொள்வதல்ல. கூகுள் நிறுவனம் இயக்கும் தளங்கள் வழியாக, அதன் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து மேம்படுத்தவே கூகுள் திட்டமிடுகிறது. மிக எளிய சேவைகளை வழங்குவதிலிருந்து, மக்களின் வாழ்க்கைச் சிறப்புகளைப் பதிவு செய்திடும் தளங்களாக, கூகுள் தன் தளங்களை அமைக்க விரும்புகிறது. இதற்காகக் கீழ்க்காணும் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

* புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் மூலம் தேடுதலை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள உதவுதல்.

* சமூக இணைய தளங்களில் அப்லோட் செய்யப்படும் படங்களை மேம்படுத்தி பதித்து வைத்திட வசதி செய்து கொடுத்தல். பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் படங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்தல்.

* வீடியோ பயன்பாட்டிலும் புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. அண்மையில், கூகுள் Auto Awesome Movie என்னும் டூலை வழங்கி உள்ளது. இதன் மூலம் கூகுள் ப்ளஸ் தளத்திற்கு அப்லோட் செய்யப்பட்ட வீடியோ கிளிப் பைல்களைக் கொண்டு, ஒருவர் தன் கற்பனைத் திறனுக்கேற்ப வீடியோ படங்களைத் தயாரிக்க முடியும்.

மேலே கூறப்பட்ட தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே, கூகுள் நிறுவனத்தின் பங்குகள் விலை வேகமாக உயர்ந்து 1000 டாலர் என்ற இலக்கை எட்டியது, மக்கள் இந்நிறுவனத்தின் திட்டங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

கூகுள் ஒதுக்கித் தள்ளியவை!

கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும். ஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும். 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை இங்கு பார்க்கலாம்.

1. கூகுள் ரீடர் (Google Reader RSS reader): சென்ற ஜூலை மாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், கூகுள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது. இதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர். சிலர், கூகுள் நிறுவனம் தன் கூகுள் ப்ளஸ் மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள். ஆனால், கூகுள் தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை கூகுள் அல்லது வேறு யாரும் தரவில்லை.

2. ஐகூகுள் (iGoogle): இந்த தனி நபர் ஹோம் பேஜ் தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நவம்பர் 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, ஜூலை 2012 லேயே அறிவிக்கப்பட்டது. குரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற சிஸ்டங்களில் இயங்கும் புதிய வகை அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், ஐகூகுள் டூலினை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று கூகுள் கருதியது. எனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது.

3. லேட்டிட்யூட் (Latitude): ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படும் டூலாக இது வெளியானது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது. மேப்பில் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் அட்சரேகை (Latitude) கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த டூல் தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய மேப் களிலிருந்து எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை கூகுள் தன் கூகுள் ப்ளஸ் இல் தந்து வருகிறது.

4. சொந்த ஆய்வுக்கு 20 சதவீத நேரம் (Google 20% Time): கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள். கூகுள் இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது.

5. பில்டிங் மேக்கர் (BUILDING MAKER): கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் ஆகிய அப்ளிகேஷன் புரோகிராம்களில், முப்பரிமாண மாடல்களை உருவாக்க இந்த டூல் பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற ஜூன் 1 முதல் விலக்கிக் கொண்டது கூகுள். இருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் அப்ளிகேஷன்களில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, டூல்கள் தரப்பட்டுள்ளன.

6. க்ளவ்ட் கனெக்ட் (CLOUD CONNECT): இது ஒரு ப்ளக் இன் புரோகிராமாக, கூகுளால் தரப்பட்டது. கூகுள் ட்ரைவில், நாம் உருவாக்கும் பைல்கள் தாமாக சேவ் செய்யப்பட இந்த டூல் பயன்பட்டது. பின்னர், கூகுள் ட்ரைவினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், கூகுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற ஏப்ரல் 30 முதல் நிறுத்தப்பட்டது.

7. பிளாக்பெரிக்கான கூகுள் வாய்ஸ் (GOOGLE VOICE APP FOR BLACKBERRY): ஏற்கனவே பிளாக் பெரி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த டூலை, கூகுள் வாபஸ் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கான தன் சப்போர்ட்டினை தரப்போவதில்லை என கூகுள் அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்திய பிளாக்பெரி வாடிக்கையாளர்களை, கூகுள், எச்.டி.எம்.எல். 5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.

8. கூகுள் சிங்க் (GOOGLE SYNC (Consumer version): இதனைப் பயன்படுத்தி, கூகுள் மெயில், கூகுள் காலண்டர் மற்றும் காண்டாக்ட்ஸ் தொடர்புகளை, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ் சிங்க் ப்ரோடோகால் மூலம் பயன்படுத்தும் வகையில், கூகுள் வடிவமைத்துத் தந்தது. ஆனால், பின்னர் கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்பமான CardDAV வந்த பின்னர், கூகுள் சிங்க் நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும். மேலும் வர்த்தக ரீதியான இதன் தனி டூல் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த டூலைப் பொறுத்தவரை, கூகுள் இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான டூல்கள், வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அவற்றில் சில வசதிகள், சில நாட்டு வாடிக்கையாளர்களுடன் மட்டுமே தொடர்புள்ளவை என்பதால், இங்கு பட்டியல் இடப்படவில்லை.

மங்கல்யான் வெற்றிகரமாக 1.20 லட்சம் கி.மீ உயரத்தில் நிறுத்தம்...


செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக  1,20,000 கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன்பின் கர்நாடக மாநிலம் ஹசனை அடுத்த பையலாலு என்ற கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, தொலையுணர்வு சாதனங்கள் மூலம் மங்கல்யான்  விண்கலத்தின் மோட்டார் 3 முறை இயக்கப்பட்டது. இதனையடுத்து நீள்வட்ட சுற்றுபாதையில் 71,636 கி.மீட்டர் உயரத்திலும் பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 269 கி.மீட்டர் உயரத்திலும் பறந்தவாறு மங்கல்யான் சுற்றி வந்தது.

இந்நிலையில் 4வது முறையாக மங்கல்யான் விண்கலத்தை உயர்த்தும் முயற்சி தொழில்நுட்ப காரணங்களால் நேற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை 5 மணி 3 வினாடிக்கு மங்கல்யானில் உள்ள லேம் மோட்டாரை 303 வினாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி பின்னர் நிறுத்தினர். இதன் மூலம் ஏற்கனவே திட்டிமிட்டப்படி பூமியிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் மங்கல்யான் நிறுத்தப்பட்டது. இறுதியாக 30ம் தேதி மங்கல்யானை இரண்டரை லட்சம் கிலோ மீட்டர் உயரத்திற்கு எட்ட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் மங்கல்யான் விண்கலம் ஒரு கிரகத்தை போல சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றியவாறு தனது விண் பயணத்தை தொடங்கும். விண்பயணத்தின் 300வது நாளை எட்டியபின்னரே செவ்வாய் கிரகத்தை மங்கல்யான் நெருங்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் நட்சத்திர பலன்கள்!

ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும்.

1.அசுவினி: கவர்ச்சியானவர்கள். கனிவானவர்கள். சுத்தமானவர்கள். காம வேட்கை, கடவுள் பக்தி அதிகமிருக்கும்.

2.பரணி: சுத்தமில்லாதவர்கள். சண்டைகளை விரும்புபவர்கள். வஞ்சகம் மிக்கவர்கள். திரை மறைவில் தீமை புரிபவர்கள்.

3.கிருத்திகை: கொள்கைப் பிடிப்பற்றவர். கோபம் அதிகமிருக்கும். சண்டை போடுபவர்கள். சுற்றத்தை வெறுப்பவர்கள்.

4.ரோகிணி: செல்வம் படைத்தவர்கள். அழகானவர்கள். மூத்தோரை மதிப்பவர்கள்.

5.மிருகசிரிடம்: சுகாதாரமானவர்கள். அழகானவர்கள். ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள். தரும காரியங்களில் ஈடு பாடு உடையவர்.

6.திருவாதிரை: குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள். ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.

7.புனர்பூசம்: பண்பானவர்கள். அடக்க மானவர்கள். அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கவுரவம் படைத்தவர்கள்.

8.பூசம்: வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.

9 ஆயில்யம்: அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர். விசுவாசமில்லாதவர்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.

10.பூரம்: சந்தோஷ சல்லாபம் மிக்கவர். செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பவர். தைரியமானவர்கள்.

11.உத்திரம்: சரச சல்லாபத்தை அனுபவிப்பவர். ஒழுக்கமானவர்கள்.

12.அஸ்தம்: சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். நுண்கலை வல்லுநர்கள்.

13.சித்திரை: வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அழகானவர்கள்.

14.சுவாதி: ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.

15.விசாகம்: சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப் பவர். அறிவாற்றல் மிக்கவர்கள்.

16.அனுஷம்: தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.

17.கேட்டை: சத்திய நெறி காப்பவர். சந்தோஷமானவர்கள். சுற்றத்தாரை நேசிப்பவர்.

18.மூலம்: குரோதமானவர்கள். வெறுப்பும், விகற்பமும் மிக்கவர்கள்.

19.பூராடம்: குடும்பத்தில் சிறந்தவர்கள். அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.

20.உத்திராடம்: பேரும், புகழும் மிக்கவர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகள்.

21.திருவோணம்: பிறருக்குச் சேவை செய்பவர்கள். நம்பிக் கையும், நேர்மையும் மிக்கவர்கள். இரக்க மனம் படைத்தவர்கள்.

22.அவிட்டம்: சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள். பெருந் தன்மையானவர்கள். கருணை மிக்கவர்கள். நேர்மையானவர்கள்.

23.சதயம்: பிற பெண்களை நேசிப்பவர்கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். கலகலப் பாக இருப்பவர்கள்.

24.பூரட்டாதி: சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். அறிவானவர்கள். கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.

25.உத்திரட்டாதி: பாசமானவர்கள். அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள். உண்மையை விரும்புபவர்கள்.

26.ரேவதி: சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நேசம் மிக்கவர்கள்.

27.மகம்: ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள். பாசம் மிக்கவர்கள்

64 கலைகள்!

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை….!! அவசியம் படிக்க வேண்டும்!!

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப
 திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…

என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய
 வந்து பார்த்தா அந்த நாய் வாயில
 ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த
 சீட்டை எடுத்து அதில் உள்ள
 சாமான்களை போட்டு, மீதி பணத்தையும்
 அதே பையில் நாய் கழுத்தில்
 மாட்டிவிட்டார். ..

நாய் திரும்பி நடக்க
 ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய்
 பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின்
 ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்..

அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது…

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை…

அது பின்னாலே அதன் வீடு செல்ல
 முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில்
 நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய்
 பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த
 பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட்
 கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய்
 பேருந்தில் இருந்து இறங்கியது…

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்…

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன்
 நின்று கதவை தட்டியது…

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்…

நாயின் கழுத்தில் உள்ள
 பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்….
கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன்
 அடிக்கறீங்க??

அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு,
சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட்
 எடுத்துகிட்டு வருது அதை போய்
 அடிக்கறீங்களே …???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய
 எடுத்துட்டு போகாம வந்து கதவ
 தட்டுது பாருங்க..

நாய்க்கு கொஞ்சம் கூட
 பொறுப்பே இல்லன்னு….

# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான்
 பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல
 பெயரே கிடைக்காது.

எலெக்ஷன் பூத்துக்கும், ஏடி.எம்.பூத்துக்கும் என்ன வித்தியாசம்?

ரயில்ல டிக்கெட் எடுக்காம வந்துட்டு தேவையில்லாததை
 எல்லாம் பேசறான் சார் இவன்…!
-
அப்படி என்ன பேசறான்?
-
ஓட்டல்ல டிபன் சாப்பிட்டு, காசு இல்லேன்னா,
மாவாட்டற மாதிரி, இங்கே டிக்கெட் இல்லாததுக்கு
 ஒரு மணி நேரம் டிரெயின் ஓட்டறேன்னு சொல்றான்…!
-
——————————————————————————-
 -
யோவ்…படம் ஓடிட்டிருக்கும்போது தொண
 தொணன்னு பேசறீங்களே…எதுவும் புரியலே…!
-
இது எங்க பெர்சனல் மேட்டர்…உனக்கு ஏன் புரியணும்..!
-
———————————————————————————

-
எலெக்ஷன் பூத்துக்கும், ஏடி.எம்.பூத்துக்கும் என்ன வித்தியாசம்?
-
எலெக்ஷன் பூத்துல போறதுக்கு முன்னாடி பணம்
 கிடைக்கும், ஏடி.எம்.பூத்துல போன அப்புறமாத்தான்
 பணம் கிடைக்கும்…!

நடிகர் விஜய், அஜீத் முட்டாள்களா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது!

 நடிகர் விஜய், அஜீத் முட்டாள்களா? கூகிள் டிரான்ஸ்லேட்டரில் காண்பிக்கிறது

do not see idiots movie என்று கூகிள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "விஜய் படம் பார்க்க வேண்டாம்" என்று காண்பிக்கிறது.


idiots movie என்று டிரான்ஸ்லேட்டரில் போட்டு தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய சொன்னால் "அஜித் படம்" என்று காண்பிக்கிறது.

http://translate.google.com/ என்பதில் நீங்கள் do not see idiots movie என்று அடித்துவிட்டு அதை தமிழுக்கு டிரான்ஸ்லேட் செய்யுங்கள், என்ன வருகிறது என்று பாருங்கள்.

கூகிள் டிரான்ஸ்லேஷனில் சஜஷன்ஸ் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் எதிர்ப்பாளர்கள் யாரோ விளையாடி விட்டார்கள் போல.

உங்கள் Mobile Phoneல் இருந்து Computerயை இயங்க வைப்பது எப்படி?

அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.

இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.

Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.

Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.

left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.

Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.

இதை தரவிறக்கம் செய்ய...

https://play.google.com/store/apps/details?id=com.teamviewer.teamviewer.market.mobile

கடவுசொல் இல்லாமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தலாம்!!

 ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம்.

அப்போது இன்னும் பலருக்கு கணக்கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு. இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை Access செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா?


இதை ஜிமெயில் மூலம் செய்ய முடியும். இதன் மிகப் பெரிய பலன் நீங்கள் Access கொடுக்கும் நபருக்கு உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரியாது. செட்டிங்க்ஸ் எதையும் மாற்ற இயலாது, சாட் செய்ய இயலாது. மாறாக அந்த கணக்கிற்கு வரும் மின்னஞ்சல்களை படிக்க முடியும், படித்ததை நீக்க முடியும். உங்கள் கணக்கில் இருந்து மின்னஞ்சல் அனுப்ப முடியும். இதை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும்.வரும் பகுதியில் “Accounts and Import” என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் “Grant access to your account” என்பதற்கு வரவும். அதில் “Add another account” என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகி மின்னஞ்சல் முகவரி கேட்கும். யாருக்கு Access தருகிறீர்களோ அவர் மின்னஞ்சல் முகவரி தந்து விடவும். அடுத்த பக்கத்தில் “Send Email to Grand Access” என்பதை கொடுத்து விடவும்.
இப்போது உங்கள் நண்பரிடம் சொல்லி அவருக்கு வந்துள்ள மின்னஞ்சலை Accept செய்ய சொல்ல வேண்டும்.

இதை கிளிக் செய்த அரை மணி நேரத்தில் Access வசதி கிடைத்து விடும். Access பெற்ற நபர், அவர் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் மூலையில் அவர் பெயர் மீது கிளிக் செய்தால் அதற்கு கீழே Access பெற்ற மின்னஞ்சல் கணக்குக்கு செல்வதற்கான வழி இருக்கும்.

இதில் இரண்டாவதாக மின்னஞ்சல் முகவரி உடன் Delegated என்று உள்ளது தான் Access கிடைத்துள்ள மின்னஞ்சல் முகவரி. இதை கிளிக் செய்தால் அவர் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து விடலாம். பாஸ்வேர்ட் தேவை இல்லை.

உங்கள் கணக்கில் இருந்து அவர் மின்னஞ்சல் அனுப்பும் போது, அதை பெறுபவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி உடன், அவரது மின்னஞ்சல் முவரியும் சேர்ந்து செல்லும்.

மேலே படத்தில் From, Sent By என்று இரு பகுதிகள் இருப்பதை காணலாம். இதன் மூலம் அவர் மின்னஞ்சல் கணக்கை தவறாக கையாள முடியாது.
இதில் ஜிமெயில் கணக்கு உள்ள இன்னொரு நண்பரை மட்டுமே சேர்க்க முடியும். யாஹூ, ஹாட்மெயில் மற்றும் இதர எதையும் பயன்படுத்தும் நண்பர்களையும் சேர்க்க முடியாது.


இப்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கில் “You have granted access to your account toxxxxxxx @gmail.com. This notice will end in 7 days.” என்று இருக்கும்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும்.

ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்….

மெழுகு பூசப்பட்ட “கப்’ – விழிப்புணர்வுக்காக...!

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.

அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’ களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.

இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.

அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
“டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்’ என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

கேள்விப்பட்ட தகவல்!


1) மனித கண்கள் ஒரு டிஜிட்டல் கேமிராவாக இருந்தால் அது 576 மெகா பிக்சலுக்கும் அதிகமாக செயல்படும்!.

2)கொட்டாவி வரும்போது நாக்க தொட்டிங்கன்னா கொட்டாவி சட்டுன்னு நின்னுரும்!!

3) பிரபல பொழுதுபோக்கு தளமான டிஸ்னிலாண்ட் 17 நாடுகளை விடப் பெரியது!
...
4) பேஸ்புக்க விட ட்விட்டர் பக்கம் எடுத்துக்கொள்ளும் டேட்டா யூஸ்சேஜ் அளவு குறைவு

5) முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில் போட்டோ எடுக்க எட்டுமணிநேரம் உட்கார்ந்தே இருக்கணுமாம்!!

6) மூளையிலிருந்து மற்ற இடங்களுக்கும் மற்ற இடங்களிலிருந்து மூளைக்கும் செல்லும் கட்டளைகள் சுமார் 274கி.மீ வேகத்தில் அனுப்படுகின்றன!.

7) ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர் லேரி!! டிவிட்டரின் டிபால்ட் புரொபைல் பிக்ச்சராக முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர் பறவையின் குஞ்சுகளாம்! நம்ம ஹோம் பேஜ் ஒரு குருவிக்கூடு

மாரடைப்பு ஏற்படுவதை முன்னரே கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன் தொழில்நுட்பம்!

நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று நினைக்கும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

nov 12 - tec heart

அதை விடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இருக்க கூடும்.இந்த நிலையில் மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்து சொல்லக்கூடிய ஒரு வழியை ஏற்கனவே புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ஸ்கேனிங் முறையின் மூலம் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கதிரியக்கத்தை வைத்துக் கண்டறியும் இந்த தொழில்நுட்பம், இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஆபத்தான பொருட்கள் அடைந்து கிடந்தால் அவற்றை ஒளிர வைத்து அதிகக் கூர்மையுள்ள ஸ்கான்களின் மூலம் அவைகளை மருத்துவர்கள் பார்க்க உதவுகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.மாரடைப்பு ஏற்பட்ட 40 பேர்கள் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகளில் , இந்த ஸ்கேன், 37 நோயாளிகளின் இதயத்தில் சேதம் ஏற்பட்டிருந்ததைக் காட்டியது குறிப்பிடத்தக்கது .

Heart disease health centre

**********************************************


1th November 2013 – University of Edinburgh researchers have developed a new scanning technique that could help identify people who are at a high risk of having a heart attack.A PET- CT scan is used along with a radioactive tracer called 18F- sodium fluoride or 18F-NaF. This is already in use for bone scans, but is now showing promising results for heart patients after a small study.