Search This Blog

Saturday 26 October 2013

BMW 2 Series Coupe கார்கள் விற்பனைக்கு தயாராகின!

கார் பாவனையாளர்களின் மனங்களை வென்ற BMW நிறுவனத்தின் புதிய அறிமுகமாக BMW 2 Series Coupe கார்கள் சந்தைக்கு வரவுள்ளன.
அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இக்கார்கள் 228i, M235i மொடல்களை கொண்டுள்ளன.


இதில் BMW 228i கார் ஆனது 240 குதிரை வலு உடையதாகவும் 5.4 செக்கன்களில் 155 mph எனும் வேகத்தை பெறக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை BMW M235i கார் 322 குதிரை வலு உடையதாகக் காணப்படுவதுடன் 4.8 செக்கன்களில் 155 mph எனும் வேகத்தை பெறக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


BMW 228i காரின் விலையானது 33,025 டொலர்கள் எனவும், BMW M235i காரின் விலையானது 44,025 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..! - சுற்றுலாத்தலங்கள்!

   முதல் ரயில்... முதல் ஸ்டேஷன்..!
 
த்ரபதி சிவாஜி டெர்மினஸ்!. முன்பு விக்டோரியா டெர்மினஸ். சுருக்கமாக மும்பை சி.எஸ்.டி (CST) அல்லது மும்பை VT. இப்படி குறிப்பிடப்படும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் வரலாற்று சிறப்பு மிக்கது. 
இந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை-  தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துநான்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.

மும்பை கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது, போரி பந்தர்.  ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக இந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இதற்காக ரயில் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்தனர். கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வே என்ற அமைப்பினை ஏற்படுத்தி 1850ம் ஆண்டில் இங்கு ரயில்நிலையம் அமைத்தனர். அது போரி பந்தர் டெர்மினஸ் என அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவைகருதி ரயில்நிலைய கட்டடத்தை பிரம்மாண்டமாக கட்ட ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
கட்டடத்தை வடிவமைக்க அப்போது பிரபல நிபுணராக இருந்த பிரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் பணிக்கப்பட்டார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 16.14 லட்சம்!. புதிய கட்டட மாடல் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஸ்டீவன்ஸ் சுமார் 10மாதங்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாராம்.

அதில் மத்திய லண்டனின் செயின்ட் பாங்கிராஸ் ரயில் நிலையக் கட்டட வடிவமைப்பு பிடித்துப் போக அதுபோலவே மும்பை ரயில்நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளார். கட்டடப் பணிகள் தொடங்கின. இந்திய, இத்தாலிய, கோதிக் கட்டடக்கலைகளின் கலவையாக, ஆங்கிலேய நிபுணர்களும் இந்தியக் கைவினைஞர்களும் இணைந்து தீட்டிய அழகு ஓவியமாக உருவாக்கப்பட்டது மும்பை ரயில்நிலையம்.
மரவேலைப்பாடு, டைல்ஸ் பதிப்பு, அலங்கார இரும்பு வேலைப்பாடு என அனைத்திலும் கலைநயம் மிளிர அமைத்தனர். உள் அலங்கார வேலைப்பாடுகளில் பாம்பே ஸ்கூல் ஆப் ஆர்ட் (சர் ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்) மாணவர்களும் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். இப்படி பிரம்மாண்டமாக உருவான ரயில்நிலையம் 1888ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியை பெருமைப்படுத்தும் வகையில் விக்டோரியா டெர்மினஸ் என பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வேயின் தலைமையகமாக விக்டோரியா டெர்மினஸ் திகழ்ந்து வந்துள்ளது. ரயில் டிக்கெட்டு-களையும் இங்கேயே அச்சடித்து வந்துள்ளனர்.
இப்படி சிறப்புமிக்க ரயில்-நிலையத்துக்கு 1996ம் ஆண்டில் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை உலக பண்பாட்டுச் சின்னமாக 2004ல் யுனெஸ்கோ அறிவித்தது. மத்திய ரயில்வேயின் தலைமையக-மாகவும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிர்வாக கட்டடம் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.

' உணவை வீணாக்கக்கூடாது ' (நீதிக்கதை)


வீட்டில் அரிசி தீர்ந்து விட்டது என்றும் வாங்கி வரும்படியும் அம்மா சொன்னார்.

அப்பா அரிசி வாங்கக் கடைக்குச் சென்றபோது குட்டிக்கண்ணனும் சென்றான்.

அப்பா கடையிலிருந்து அரிசியை பையில் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்க....அம்மா அதை அரிசி டப்பாவில் கொட்டினார்.

அப்போது சில அரிசி மணிகள் கீழே சிந்தின.அம்மா பையை மடித்து வைத்து..அதற்குரிய இடத்தில் வைக்கச்சென்றார்.

அம்மாவுக்கு உதவி செய்ய நினைத்த குட்டிக்கண்ணன் துடைப்பத்தை எடுத்து சிந்திய அரிசியை குப்பையில் தள்ள பெருக்கினான்.

வேகமாக ஓடி வந்த அம்மா...அவனிடமிருந்த துடைப்பத்தை வாங்கிப்போட்டுவிட்டு அரிசி மணிகளை பொறுக்கினாள்.

' அப்பா.. அவ்வளவு அரிசி வாங்கி வந்திருக்கிறார்....நீ சில அரிசிகள் சிந்தியதை பொறுக்குகிறாயே' என்றான் குட்டிக்கண்ணன்.

அதற்கு அம்மா ' கண்ணா ...இந்த அரிசியை கடவுள் பூமியில் நம்மை போன்றவர்கள் உயிர் வாழ படைத்திருக்கிறார்.
அதனால் அதை சிறிதளவும் வீணாக்கக்கூடாது....கீழே விழுந்த அரிசி நமக்கு வேண்டாமென்றால் அதை எடுத்து பறவைகளுக்கும்,எறும்புகளுக்கும் போடலாமே.
அவை அதை உண்ணும்.நாமும் எப்பொழுதும் எங்கும் உணவை வீணாக்ககூடாது என்றாள்.


குட்டிக்கண்ணனும் அது முதல் ஒழுங்காக வீணாக்காமல் உணவை உண்ணத்தொடங்கினான்.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-06


 குருஷேத்ர போரில் பாண்டவர்களின் படை தளபதிகளுள்  ஒருவரான திருஷ்டகேது சேதி நாட்டை சேர்ந்தவன். மேலும் இவன் சிசுபாலனின் மகன் ஆவான்.



வத்ஷம்:

         இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் கோசம் என்ற சிறிய  நகரமே அன்றைய வத்ச நாடு ஆகும். குசம்பி இதன் தலைநகரம்.

        மகாபாரதத்தில் பல இடங்களில் வத்ச பூமி என்று வத்ச நாடு  பற்றி பல குறிப்புகள் வருகின்றன. மகாபாரதம் (I:188) திருச்டதும்ணன் பாஞ்சாலியை பார்த்து அவளை மணக்க காத்திருக்கும் மன்னர்களின் பெயரை வாசிக்கும் பொழுது  ஸ்ருடயு, உலுக, கிட்டவ, சிற்றங்கட மற்றும் சுவங்கட , வத்சராஜா(King of Vatsa Kingdom) என்று குறிப்பிடுகிறான்.


குரு:

      குரு நாடு இன்றைய ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்திரபிரதேஷ பகுதிகளை கொண்டது. ரிக்வேதத்தில் உள்ள குறிப்புகளின் படி சப்த சிந்து (ஏழு நதிகளின் பகுதி) பகுதியில்  முதன் முதலில் ஆரியர்கள் குடியேறினர். ஆரியர்கள் முதலில் குடியேறியது குரு நாடு.

        குரு நாட்டின் தலைநகரம் ஹஸ்தினாபுரம். ஒரு சமயம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஹஸ்தினாபுரம் அழிந்ததால் அதன் தலைநகரம் கௌஷம்பிக்கு மாற்றப்பட்டது. இதன் காலம் கி.மு 1200–கி.மு800 என வரையருக்கபடுகிறது .

பாஞ்சாலம்:



            பாஞ்சால நாடு இன்றைய  உத்தர்கந்த், உத்திரபிரதேஷ சில பகுதிகளை கொண்டது. இதன் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டு. பாஞ்சால நாடு வேதகாலத்தில் ஒரு சிறப்பான நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடாகும். கி.மு 4 ஆம் நூற்றாண்டு அளவில் அது மகத நாட்டுடன் இணைக்கப்பட்டது.


மத்சம்:

       மத்ச நாடு இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரம் ஆகும். இதன் தலைநகரம் விரடநகர (இன்றைய பிராத்). மிக சிறந்த தேசமாக விளங்கிய மத்ஸ்ய ராஜ்ஜியம் புத்தரின் மறைவுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அண்டை நாட்டு மன்னர்களால் கைப்பற்றப்பட்டது

சூரசேனம்:


       கி.மு 6 ஆம் நூற்றாண்டில் மகாஜன்பதங்களில் ஒன்று. இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் பராஜ் பகுதியை  கொண்டது. மெதோர இதன் தலைநகரம்.


அஷ்மகம்:


 கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த ராஜ்ஜியம். கோதாவரி, மஞ்சிற நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை கொண்டது. 16 மகாஜனபதன்களுள் இது ஒன்றே தென்இந்திய பகுதியை  கொண்டது. விந்திய மலை பகுதியில் இது அமைந்துள்ளது. இன்றைய நிசாமாபாத், அடிலாபாத் பகுதிகள். வானவியல் அறிஞரான ஆரியபட்டா அஷ்மகம் பகுதியில் பிறந்தவர் என கூறப்படுகிறது.




 


அவந்தி:


         அவந்தி இன்றைய மல்வ பகுதியை சேர்ந்தது. மகாபாரத, விஷ்ணு புராணம், பிரமபுராணம் போன்ற பல நூல்களில் அவந்தி  பற்றிய குறிப்புகள் வருகின்றன. மகாபாரதத்தில் அவந்தி சேர்ந்த மக்கள் மிகவும் பலசாலிகள்(மகாவாலா) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


காந்தாரம்:

         இன்றைய வடக்கு பாகிஸ்தான், கிழக்கு ஆப்கானிஸ்தான்  பகுதியில் காந்தாரம் அமைந்திருந்தது. மிகவும் பழமையான நகரமான இதன் காலம் 15,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். புருஷபுரம் (இன்றைய பெஷாவர்) இதன் முக்கிய நகரமாகும்.

         மகாபாரதத்தில் காந்தாரம் பல இடங்களில் வருகிறது கந்தரி ஹஸ்தினபுரத்தின் அரசரான திருதிராச்டிறரை மணக்கிறாள், மேலும் காந்தரத்தை சேர்ந்த சகுனி பாண்டவர்கள் மீது கொண்ட கோபத்தால் கௌரவர்கள் பக்கம் இருந்து பாண்டவர்களை காட்டுக்கு அனுப்பியது நாம் அறிந்ததே.


 


காம்போஜம்:


             காம்போஜம் 16 மகாஜனபதங்களில் ஒன்று. கிழக்கு காந்தரத்தை ஒட்டி உள்ள பகுதி இது. மகாபாரதத்தின் பல இடங்களில் காம்போஜம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இங்கு இந்தோ ஈரானிய கலாச்சாரம் வளர்ந்த இடம் ஆகும். தற்போது அங்கு ஈரானிய கலாச்சாரமே பெரும்பாலும் உள்ளது.


மகாஜனபதங்களை தொடர்ந்து ஹிந்து மதத்தின் வேறாக கருதப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...

வீடு கட்ட ப்ளான் பண்ணுபவர்களுக்கு உதவும் இலவச மென்பொருள்!

நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D (http://www.sweethome3d.com/index.jsp)மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். மேலும் இது இலவசமாக கிடைக்கும் என்பதை நோட பண்ணிக் கொள்ளவும்

26 - tec SweetHome3D

இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென் பொருளின் சிறப்பாக சொல்லலாம்.

கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்த வித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் சென்டி மீட்டரில் உள்ளீடு செய்ய வேண்டும். 10 அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செ.மீ.க்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செ.மீ.

மேல் வரிசையில் plan மெனுவில் create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள். இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம். எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றும் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம்.

லிங்க் ::http://www.sweethome3d.com/index.jsp

‘யூ டியூபால் பிசியான பாடகி யாகி விட்ட இல்லத்தரசி!





இபபோதெல்லாம் யூ டியூப்-பில் குறும்படம் எடுத்தவர்கள் டாப் டைரக்டர்களாக வருவது அதிகரித்துக் கொண்டே போவது தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையில் கேரளாவைச் சேர்ந்த இளம் இல்லத்தரசி ஒருவர் தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல் ‘யூடியூபில்’ வெளியானதைத் தொடர்ந்து பிசியான சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளாராம்.இப்படி ‘யூடியூபால்,’ பிரபலமடைந்துள்ள அம்மணிக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை என்பதுடன் மின்னஞ்சல் முகவரி கூட இல்லை என்பது விசேஷ தகவல்.


கேரளாவைச் சேர்ந்தவ சந்திரலேகா.இவர் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக உயர் கல்வி எல்லாம் கற்க முடியவில்லை. ஆயினும் இவருக்கு இளம் வயதிலேயே நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும் முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு இவருக்கு பொருளாதார வசதி இல்லை. எனவே பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் மடடும் பங்கேற்று பல முறை பரிசுகளை பெற்றார்.


இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு தன் கைக் குழந்தையை தூங்க வைப்பதற்காக பழைய மலையாள சினிமாவில் இடம் பெற்ற தாலாட்டு பாடலை பாடினார். அப்படி குழந்தையை கையில் தூக்கி வைத்தபடி அவர் பாடியதை குடும்ப நண்பர் ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார். மூன்று நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோ கடந்த மாதம் ‘யூடியூபில்’ வெளியானது.

 
ஒரே மாதத்தில் ஏழு லட்சம் பேர் பாக்கும் அளவுக்கு இந்த வீடியோ பிரபலமானது. இப்படி சந்திரலேகா இனிமையான குரலில் பாடுவதை பார்த்த- கேட்ட மலையாள சினிமா இயக்குனர்கள் இப்போது தங்கள் படத்தில் அவரை பாட வைப்பதற்கு அவரின் வீட்டு கதவைத் தட்டிக் கொண்டு நிற்கின்றார்களாம்.


பிரபல் மலையாள இசையமைப்பாளர் டேவிட் ஜான் தான் இசையமைக்கும் புதிய படத்துக்கு பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பாட வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் சந்திரலேகாவின் பாடலை ‘யூடியூபில்’ பார்த்த பின் தன் முடிவை மாற்றி அவரையே தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என்று பார்த்துக் கொள்ளுங்களேன். மேலும் சில இசையமைப்பாளர்களும், சந்திரலேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.


இதற்கிடையே பிரபல பின்னணி பாடகி சித்ரா போனில் தொடர்பு கொண்டு சந்திரலேகாவை பாராட்டியுள்ளார். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பாராட்டியுள்ளார். இத்தனைக்கும் ‘யூடியூபால்,’ இவ்வளவு பிரபலமடைந்துள்ள சந்திரலேகாவுக்கு பேஸ்புக் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத் தளத்திலும் கணக்கு இல்லை; மின்னஞ்சல் முகவரியும் இல்லை என்பது விசேஷ தகவலாக்கும்!.

Kerala homemaker turns playback singer after viral YouTube video



 26 - lady singer Chandralekha-


**************************************************

 Till the other day, Chandralekha was just another housewife living in a tiny, unplastered house in Pathanamtitta, taking care of her three-year-old son Sreehari and her husband Raghunath, a temporary staffer with LIC. A song that she casually sang, carrying Sreehari on her hip, was recorded by her husband’s brother Darshan and shared on YouTube. Since then, the song Rajahamsame, originally sung by K.S. Chitra, has gone viral, attracting Mala­yalis far and wide, be it Australia, Middle East or Britain. The video carried her mobile phone number and since then, it hasn’t stopped ringing.

உணவு ::: கொஞ்சம் உண்மைகள் + தெளிவுகள் !

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்சியாக வாழ முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தம்மை நேசிப்பவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றார்.

இன்றைய நவ‌நாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை காரணம், நாளும் ப‌ல்கிப்பெருகி வரும் எண்ணற்ற நோய்கள், (பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப்போல அல்லவா விஞ்ஞானிகள், நாளும் ஒரு நோயைக் கண்டுபிடித்து புதிது புதிதாய் அவற்றுக்கு பெயர் வைத்துக் கொண்டு வருகின்றனர்) !!?

26 - health food


இதற்கிடையில் பெரும்பாலானோருக்கு அவர்களின் உணவால்தான் பெரும் வியாதிகள் வருகிற்து. பொதுவாக ஒவ்வொருவரும் பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்.*உண்பதற்கு அரைமணி நேரம் முன்பும்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍பின்பும் நீர் அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு அருந்தலாம்.*உண்ணும் பொழுது கண்களை மூடி, இதழ்களை மூடி, இதழ் பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.*தொலைகாட்சி பார்த்தல், புத்தகம் படித்தல், செல்போன் பேசுதல், கால்களை தொங்க விடுதல் ஆகிய கவனச் சிதறல்கள் உண்ணும் நேரத்தில் கூடாது.*முடிந்தவரை வீட்டு உணவு ( நம்மேல் அக்கரை கொண்டவர்கள் சமைத்த உணவை ) உட்கொள்ளவும். 

அதே சமயம் உணவுகளில் பல வகைகள் உள்ளன. இருந்தாலும் சுலபமாகப் புரிந்துகொள்வதற்காக நாம் சில வகைகளாகப் பிரித்துள்ளோம்.

முதல் வகை:

இயற்கையாக, சுவையாக இருக்கும், சமைக்காத உணவுகள், அனைத்துப் பழங்கள், தேங்காய், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை சமைக்காமல் அதே சமயம் சுவையாக இருக்கும் உணவுகள் இவை அனைத்தும் முதல் வகை உணவுகள். இவற்றில் சுவை 100%இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராண சக்தி 100% இருக்கும். எனவே மேலும் 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள் 100% இருக்கும். எனவே மீண்டும் 100 மதிப்பெண்கள். ஆக மொத்தம் முதல்வகை உணவுக்கு 300 மதிப்பெண்கள். எந்த உணவைச் சமைக்காமலும், அதே சமயத்தில் சுவையாக பச்சையாகச் சாப்பிட முடியுமோ, அவையனைத்தும் முதல் வகை உணவுகளில் வரும்.

இரண்டாவது வகை:

சமைக்காத ஆனால் சுவையில்லாத உணவுகள் இந்த வகையில் சேரும். உதாரணமாக முளை கட்டிய தானியங்கள், சுவையில்லா பழங்களும், காய்கறி வகைகளும். இந்த இரண்டாம் வகை உணவுகளில் பிராணன் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள்கள் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். ஆனால் சுவை இருக்காது. எனவே அதற்கு 0.மதிப்பெண்கள். எனவே இந்த வகை உணவுகளுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். எனவே இவை இரண்டாம் தர உணவுகள் என நாம் பிரிக்கலாம். உதாரணம் முளை கட்டிய தானியங்கள்.

மூன்றாம் வகை:

சமைத்த காய்கறிகள், கீரைகள், தானியங்கள் அனைத்தும் இந்த மூன்றாவது வகை உணவுகளாம். ஓர் உணவை சமைப்பதால் (வேக வைப்பதால்) அந்த உணவிலுள்ள சுவை 50% குறைகிறது. எனவே சுவைக்கு 50 மதிப்பெண்கள். மேலும் சத்துப்பொருள் பாதி குறைந்து விடுகிறது. எனவே மீண்டும் 50 மதிப்பெண்கள். பிராணசக்தியும் பாதி குறைந்து விடுகிறது. எனவே மேலும் ஒரு 50 மதிப்பெண்கள். ஆக மொத்தம் இவ்வகை உணவுகளுக்கு 150 மதிப்பெண்கள் தரலாம். உதாரணம், இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், சாப்பாடு, சப்பாத்தி ஆகிய நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அனைத்து சமைத்த உணவுகளும்
.
நான்காவது வகை:

அசைவ உணவுகள் இந்த நான்காவது வகையில் வரும். அசைவ உணவில் சத்துப் பொருள்100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராணன் ஒன்றுமே இருக்காது. எனவே 0மதிப்பெண். சுவை இருக்காது. எனவே 0.மதிப்பெண். ஆக மொத்தம் அசைவ உணவுகளுக்கு 100மதிப்பெண்கள். எனவே அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. ஆனால் சில நாடுகளில், பாலைவனப் பிரதேசங்களில், வெப்பம் அதிகமுள்ள நாடுகளில், தாவரவகை உணவுகள் கிடைக்காத காரணத்தினால் அசைவ உணவுகள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. உடல் ரீதியாக அசைவ உணவைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆன்மிக ரீதியாக ஓர் உயிரைக் கொல்வது பாபம் என்ற அடிப்படையில் நம் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றிய பிறகு நாம் சாப்பிட்டால் அந்த எண்ணம் நோயை உண்டாக்கும். எனவே அசைவ உணவைச் சாப்பிடுபவர்கள் இதைச் சாப்பிட்டால் பாபமில்லை என்ற எண்ணத்துடன் மனத்திலே எந்தவொரு குழப்பமும் இல்லாமல் சாப்பிடும் பொழுது சரியாக ஜீரணமாகிறது.

அதே சமயம் மனத்தில் 50/50 சாப்பிடலாமா? வேண்டாமா? அல்லது சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்ற எண்ணத்துடன் குழப்பத்துடன் சாப்பிடும் பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இஃது அசைவத்திற்கு மட்டுமன்று. எந்த ஓர் உணவைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஆரோக்கியமென்ற தெளிவான திடமான நம்பிக்கையுடன் சாப்பிடும்பொழுது அது மருந்தாக வேலை செய்கிறது. அந்த உணவு நமக்கு நோய் ஏற்படுத்துமோ என்ற எண்ணத்துடன் சாப்பிடும்பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இறுதியாக அசைவ உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இது நான்காவது வகை உணவு.

ஐந்தாவது வகை:

போதைப் பொருள்கள் (லாகிரி வஸ்துகள்) இவை உணவே அல்ல. சில பொருள்களை நாம் உணவுபோல் சாப்பிடுகிறோம். ஆனால் அவை உணவல்ல. போதைப்பொருள்கள். உதாரணமாக டீ, காபி, பீடி, சிகரெட், சாராயம், பீடா, கஞ்சா, அபின், பாக்கு ஆகியவை அனைத்தும் உணவுப் பொருள்களே அல்ல. அவை போதைப் பொருள்கள். உணவுப் பொருளுக்கும், போதைப் பொருளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பதென்றால் எந்தவொரு பொருளை மூன்று நேரமும் சாப்பிட்டு நம்மால் உயிரோடு இருக்க முடியுமோ இவையனைத்தும் உணவுப் பொருள்கள். எந்தப் பொருளை மூன்று நேரமும் அது மட்டும் சாப்பிட்டு உயிரோடு இருக்க முடியாதோ, அவை போதைப் பொருள்கள். தேங்காயை மட்டும் சாப்பிட்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும்; அஃது உணவு. சிகரெட் மட்டும் புகைத்துக் கொண்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியுமா? அது போதைப் பொருள். அசைவம் சாப்பிட்டு ஒருவர் உயிரோடு இருக்க முடியும். எனவே அசைவம் என்பது ஓர் உணவு. கஞ்சா குடித்துக்கொண்டே ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா? இருக்க முடியாது. எனவே அது போதைப் பொருள். உணவு என்பது நம் உடலில் வெளியிலிருந்து சத்துப் பொருள்களை உடலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பொருள். போதைப் பொருள் என்பது உடலிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சத்துப் பொருள்களை எடுத்துச் செலவு செய்யும் ஒரு பொருள்.

எனவே போதைப் பொருளைப் பயன்படுத்தும் பொழுது சில குறிப்பட்ட நேரம் மட்டும் உடலில் அதிகமான தெம்பு இருக்கும். பிறகு நாம் வலுவிழந்து காணப்படுவோம். ஏனென்றால் நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். சில சத்துப்பொருள்களை இந்தப் போதைப்பொருள் எடுத்துச் செலவு செய்து நம்மை வீரியமாக இருக்கச் செய்கிறது. ஆனால் அது நம் உடம்பிற்கு உணவை ஒரு போதும் கொடுப்பதில்லை. எனவே தயவு செய்து போதைப் பொருள்களைச் சாப்பிடக் கூடவே கூடாது. “நான் பல மருத்துவரிடம் சென்றேன். பல வருடங்களாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் எந்த நோயும் குணமாகவில்லை” என்று மருத்துவத்தையும், மருத்துவர்களையும் குறை சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் போதைப் பொருள்களைப் பற்றி அவர்கள் வெளியே சொல்வதே கிடையாது. எனவே அசைவம் சாப்பிடுவதை விட டீத்தூள், காபித்தூள் சாப்பிடுவது கெடுதல் அதிகம்.

மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் எந்தவகை சாப்பிடுகிறீர்கள்? என்று புரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை முதல் வகை உணவை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும். சில இயற்கை மருத்துவர்கள் மூன்று நேரமும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். இஃது எல்லாராலும் கடைப்பிடிக்க முடியாது. நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து மூன்று வேளையும் இயற்கை உணவு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதம் முடிந்தவுடன் இட்லியைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். என்ன செய்வீர்கள்? எனவே நம் சிகிச்சையில் ஒரு சிறிய யோசனை உங்களுக்குத் தருகிறோம்.

காலையில் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடலுக்குத் தேவையான பிராண சக்தியும், தாது உப்புகளும் இயற்கையான முறையில் காலையில் உணவு மூலமாக நம் உடலுக்குச் சென்று விடும். பகல் உணவு சமைத்த உணவு. ஆசை தீர எது எதுவெல்லாம் பிடித்ததோ அனைத்தையும் சாப்பிடுங்கள். இது நம் மனத்திற்கு ருசிக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காக அரிசிக் கஞ்சி, கோதுமைக் கஞ்சி போன்ற கஞ்சி, ஏதாவது ஒரு காய்கறி பொரியலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் சாப்பிடுவதால் இயற்கை உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். ஆசை தீர சமைத்த உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். கஞ்சி என்ற நோயைக் குணப்படுத்தும் மருந்தைச் சாப்பிட்டது போலவும் இருக்கும். நமக்கு எல்லா வகையிலும் சத்துப்பொருள்கள் உள்ளே சென்று நாம் என்றும் ஆரோக்கியமாக இருக்கவும், சிறந்த வழியையும் கொடுக்கும்.

காலையில் இராஜா போல சாப்பிட வேண்டும். பகலில் மந்திரி போல சாப்பிட வேண்டும். இரவு பிச்சைக்காரனைப் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தான் ஆரோக்கியத்திற்கான சரியான வழி. ஆனால் நாம் காலையில் பிச்சைக்காரனைப் போல இரண்டு தோசை, இரண்டு இட்லி என்று அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு ஓடுகிறோம். பகலில் மந்திரியைப் போல அளவாக சாப்பிடுகிறோம். இரவு இராஜாவைப் போல அனைத்து உணவுகளையும் மொத்தமாக அள்ளிச் சாப்பிடுகிறோம். நமக்கு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமே இரவு அதிகமாக சாப்பிடுவதுதான். எனவே காலை நேரங்களில் நம் வயிற்றில் ஜீரணசக்தி அதிகமாக இருக்கும்,

எனவே காலை உணவை தயவு செய்து திருப்தியாக, நிறை அமைதியாக, ஆசை தீர சாப்பிடுங்கள். பகல் உணவு அளவாக இருக்கட்டும். இரவு முடிந்தவரை அளவைக் குறையுங்கள். ஏனென்றால் இரவில் நமக்கு உழைப்பு குறைவு. சூரியனும் கிடையாது. நம் உடலில் ஜீரணம் ஆக வேண்டுமென்றால் வெப்பம் இருக்க வேண்டும். பகலில் நாம் உழைக்கிறோம், நடக்கிறோம், ஓடுகிறோம், வேலை செய்கிறோம், எனவே உழைப்பு மூலமாக உடலுக்கு உஷ்ணம் கிடைக்கிறது. மேலும் சூரியன் இருக்கும்பொழுது இயல்பாகவே வெப்ப சக்தி நம் உடலுக்குள் புகுகிறது. அதனால் பகலில் அதிகமாக சாப்பிடுங்கள். இரவில் குறைவாக சாப்பிடுங்கள்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

பலருக்கு இந்த விஷயத்தில் மிகப்பெரும் சந்தேகம் எப்பொழுதுமே இருக்கும். காலையில் எவ்வளவு சாப்பிட வேண்டும், பகலில் எவ்வளவு சாப்பிட வேண்டும், இரவில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று இந்த அளவில் குழப்பம் ஏற்படும்பொழுது நாம் ஒரு மருத்துவரிடம் செல்கிறோம். குறிப்பாக டயட்டீசியனிடம் சென்றால் அவர் நமக்கு அறிவுரை கூறுவார். காலையில் நான்கு சப்பாத்தியும், ஒரு கப் தயிரும் சாப்பிடுங்கள். இரவு ஐந்து இட்லி சாப்பிடுங்கள், பகலில் 750 மி.கி. சாதமும் 350 மி.லி. குழம்பும் சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுப்பார். சாப்பிடும்பொழுது மி.கி., மி.லி. பார்த்தா சாப்பிட முடியும்? சாப்பிடும்பொழுது நாம் பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ள முடியுமா? ஒன்று செய்யுங்கள், இனிமேல் பகலில் சாப்பிடும்பொழுது பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ளுங்கள். 750 மி.கி. சாப்பாட்டை அளந்து தட்டில் போடுங்கள். இது சாத்தியமாகுமா?

மருத்துவர்கள் காலையில் 4 சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்களே, நீங்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்யும் பெண்மணியா? அல்லது எல்லா வேலைக்கும் ஆள் வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் பெண்மணியா என்று கேட்டார்களா? டயட் எழுதித் தருவதற்கு முன்பாக நீங்கள் கூலி வேலை செய்யும் நபரா? அல்லது கம்ப்யூட்டர் என்ஜினியரா என்று கேட்டார்களா? ஒவ்வொரு மனிதனுக்கும் வேலையின் அளவு, உடல் எடை, மனத்தில் தெம்பு, சுபாவம், கிளைமேட், இயற்கையின் அளவு முறை, நாடு, வயது, இடம், ஊர், ஆகியவற்றைப் பொருத்து உணவின் அளவு மாறும். ஒரு நாள் கட்டடவேலைக்குச் சென்று நாள் முழுவதும் கற்களைத் தூக்கும் ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யோசியுங்கள். அதே நபர் அடுத்த நாள் தன் நண்பரின் ஏசி காரில் பயணம் செய்யும்பொழுது அவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? உலகத்தில் யாருமே இன்று செய்வதைப் போல அடுத்த நாள் வேலை செய்வது கிடையாது. அப்படி இருக்கும்பொழுது ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டுமென்பதை முதலிலேயே எழுதிக் கொடுக்க முடியுமா?

உலகத்தில் எவ்வளவு பெரிய சயன்டிஸ்ட்டாக இருந்தாலும் எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் அடுத்த வேளை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அவருக்கு அவரே எழுதிக் கொடுக்க முடியாது. இப்படி நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நமக்கே கூற முடியாத நிலையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி கூற முடியும்? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவை உலகத்தில் வேறு யாராலும் கொடுக்க முடியாது. ஏன்? உங்களுக்கே தெரியாது.

மருத்துவர்கள் காலையில் 4 சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே உங்கள் வீட்டுச் சப்பாத்தி எந்த அளவு இருக்குமென்று கேட்டார்களா? சிலரின் வீட்டுச் சப்பாத்தி கெட்டியாக, பெரியதாக இருக்கும். ஒன்று சாப்பிட்டாலே போதும். சில சப்பாத்தி அப்பளம் போல இருக்கும். பத்து சாப்பிட்டாலும் வயிறு நிறையாது. இப்படி இருக்கையில் எப்படி நான்கு சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்க முடியும்? ஒரு கப் தயிர் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே, உங்கள் வீட்டு கப் எத்தனை பெரிய சைஸ் உள்ளது என்று அவர்களுக்குத் தெரியுமா? சற்று சிந்தியுங்கள், இரவு 5 இட்லி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்களே, உங்கள் வீட்டு இட்லி எடை அவருக்குத் தெரியுமா? தயவு செய்து மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் அளவு முறையில் தயவு செய்து சாப்பிட வேண்டாம். இது நோயைப் பெரிது படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்தாது.

சரி எவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற அளவை எப்படி கண்டுபிடிப்பது. அதற்கு சுலபமாக வழிமுறை இருக்கிறது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைத்துச் சுவையை ரசித்து, ருசித்து சாப்பிட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நமக்கு சாப்பிடப் பிடிக்காது. முதல் முறை வாயில் எடுத்து வைக்கும் பொழுது பிடித்த அதே உணவு எப்பொழுது நமக்குப் பிடிக்கவில்லையோ, போதும் என்று அர்த்தம். வழக்கமாக நீங்கள் காலையில் 10 இட்லி சாப்பிடும் நபராக இருந்தால் கவனத்தை இட்லியின் மீதும், இட்லியிலுள்ள சுவையின் மீதும் கவனம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள், நான்கு இட்லி சாப்பிட்ட பிறகு ஐந்தாவது இட்லியைப் பார்த்தால் உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. எப்பொழுது பிடிக்கவில்லையோ உங்கள் அளவு முடிந்து விட்டது என்று அர்த்தம்.
கவனத்தை உணவில் வைத்துச் சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரியும். கவனத்தை செல்போனிலோ, ட.வி.யிலோ அல்லது பேச்சிலோ வைத்துச் சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரிவதில்லை. எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது கவனத்தை உணவிலும், சுவையிலும் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது.

எனவே நம் சிகிச்சையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கு மி.கி., கி.கி., தராசு போன்ற அளவு முறைகள் தேவையில்லை. பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ருசித்து சாப்பிட வேண்டும். மனத்திற்கு எப்பொழுது போதுமென்று எண்ணம் ஏற்படுகிறதோ அப்பொழுது நிறுத்த வேண்டும். எனவே ஆசை தீர சாப்பிடுங்கள். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. பசி கொஞ்சம் தள்ளிப் போகும். அவ்வளவுதான். குறைவாகச் சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. நமக்கு சீக்கிரமாகப் பசித்து விடும். எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது அளவு பார்க்காதீர்கள். உங்கள் மனத்திற்குப் பிடித்த அளவு ஆசை தீரச் சாப்பிடுங்கள். ஆனால் ஒரேயொரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பசி எடுக்கும் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது.

எனக்குக் கண்டிப்பாக சாப்பிடுவதற்கு அளவு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரு வழிமுறையைச் சொல்கிறேன். உங்கள் வீட்டிலுள்ள நாய்க்கு ஒரு கப் சாதம் கொடுங்கள். அது சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் வேண்டுமென்று வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். மீண்டும் ஒரு கப் சாப்பாடு கொடுங்கள். மீண்டும் கேட்கும். மூன்றாவது கப் சாப்பாடு கொடுத்தால் அதில் பாதியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே விட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்கும். அந்த நாயை “வா வந்து சாப்பிடு, என்னிடம் இன்னும் ஏழு கப் சாப்பாடு உள்ளது” என்று நீங்கள் கொட்டினாலும் அது சாப்பிடாது. ஏனென்றால் ஒரு நாய்க்குத் தெரியும். நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நாய் பசித்து, ருசித்து சாப்பிடுகிறது. மனிதன் பசிக்காமல், ருசிக்காமல் சாப்பிடுகிறான்.

எனவே  நம் சிகிச்சை முறையில் பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ரசித்து, ருசித்து ஆசை தீர சாப்பிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். யார் யார் வீட்டில் 80 வயதிற்கு மேல் தாத்தா, பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக எந்த உணவையும், எந்தச் சுவையையும் வேண்டாமென்று ஒதுக்கியிருக்க மாட்டார்கள். சுவை, சுவையாக வித விதமாக மனத்திற்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமே தவிர நோய்கள் வராது. எனவே சுவையைப் பற்றியும், உணவைப் பற்றியும் தெரியாத சில மருத்துவர்கள் கூறும் தவறான விதிகளை தயவு செய்து கடைப் பிடிக்க வேண்டாம்.

நாம் சொல்லும் எட்டு விதப் பொய்கள்!

பொய் பேசுவது அன்றாட வாழ்க்கையில் இணை ந்துள்ள ஒரு பகுதி யாகி விட்டது. தங்கள் குழந் தைகளை மிகப் புத்தி சாலிகள் என்று சொல்வ திலிருந்து அது தொடங் குகிறது. நமது வாழ்க்கை யே உண்மைகளும், பொய் களும் கலந்து பின்னப்பட்டவை. அதே வேளையில் உண் மைகளைப் பொய்யிலிருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் நேரும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

“பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்”

என்ற குறள் மூலம் “குற்ற மில்லாத நன்மை விளை விக்கும் எனில், பொய் யான சொல்லும் உண்மை என்றே கருதப்படும்” என் று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். இதைச் சொ ன்னபின், எந்தக் குறிப்பி ட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லப்படலாம் என்ப தற்குரிய நியாயங்களையும் அறிய வேண்டிய அவசியம் ஏற்படு கிறது.

ஹிப்போ அகஸ்டின் பொய்களை எட்டு விதமாக வகைப்படுத்து கிறார்.       1. மதபோதனையின் போது சொல் லப்படும் பொய்கள்.

2. யாருக்கும் உதவிடாமல் மற்றவ ர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பொய்கள்

3. மற்றவர்களுக்குத் தீங்கு விளை வித்து, ஒரு சிலருக்கு உதவிடும் பொய்கள்.

4. பொய் சொல்வதில் கிடைக்கும் மனமகிழ்ச்சிக்காகக் கூற்படும் பொய்கள்.

5. மற்றவர்களின் திருப்திக்கா கக் சொல்லப்படும் பொய்கள்.

6. யாருக்கும் தீங்கிழைக்காத, ஆனால் யாருக்கோ உதவி டும் பொய்கள்.

7. யாருக்கும் தீங்கிழைக்காது ஆனால் யாரையோ காப்பாற் றுவதற்காகச் சொல்லப்படும் பொய்கள்.

8. யாருக்கும் தீங்கிழைக்காத ஆனால் யாருடைய தூய்மையை யோ பாதுகாக்கச் சொல்லப்படும் பொய்கள்       பொய் என்ற வார்த்தை ஒரு சமூக ஆர்வல ரைப் பொறுத்த வரை, “மிகைப் படுத்தப்பட்ட நோக்கத்தைக்” குறிக்கிறது. ஒரு அரசியல் வாதியைப் பொறுத்தவரை, அவர் “தனது கனவுகளை, விற்பனை செய்வதைக்” குறிக்கிறது. சாதார ண மனிதனுக்கு, அது சந்தர்ப்பத்தின் தேவையைப் பொறுத்ததாக இருக்கிறது.

யாரும் பொய் சொல்லவே கூ டாது எனத் தடை விதிக்கப்பட் டால் நமது அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும். ஊடகங் களில் நாம் காணும் ஆபூர்வ விளம்பரங் களிலிருந்து, நமது சினிமா நட்சத்திரங்கள், அதிகா ரிகள், அரசியல்வாதிகளுக்குச் சூட்டப்படும் புகழ் மாலைகள், பாராட்டுக்கள் எல்லாம் மாயமாகிவிடும்.   இலக்கியங்கள், மதங்கள், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல்வாதி கள் தீட்டும் சொற் சித்திரங்கள் எல்லாம் வறட்சியைச் சந்திக் கும். இதனால் வாழ்க்கையே, சுவையும் சுறுசுறுப்பும் இல்லா மல் போய்விடும். ஆகவே, பொய் சொல்வது அல்ல பிரச் சினை. “எப்பொழுது, எந்த இடத்தில் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று வரையறை செய்து கொள்வதுதான் பிரச்சினை” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தனிமனிதனின் மூளை அமைப்பில் உள்ள ஒரு கூறு சரியாகச் செயல்படாமல் போனால், தன் னை அறியாமலே அவர் பொய் யுரைகள் கூறுவதற்கு அது வழி வகுக்கும். இப்படிப்பட்ட நிலை யை மருத்துவ அறிவியல் மைதோமேனியா Mythomania எனக் கூறுகிறது. அத்துடன் “ பொய் சொல்லும் ஒருவர் எப் பொழுதுமே பொய் சொல்லிக் கொண்டிருப்பாரா? என்ற கேள் வி எழுகிறது. அது அவசி யமில்லை.   பொய் சொல்வது ஒரு அறிவாற்றலின்படியான செயல். அதாவது ஒரு மனிதர் உணர்ந்தே அந்தப் பழக்கத்தை வைத்திருக்கிறார். அதன்படி அவர் எப்போது, எங்கே பொய் சொல்வது என்பதைத் தன் விருப்பத்திற்கேற்றபடி வைத்துக் கொள்கிறார். அது பெரும்பாலும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இருக்கும்.

ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

Page3b * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. இது ஒரு நல்ல பயிற்சி.

* கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன் றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

*தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப் படும்.

* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்துப் படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.
ஊஞ்சல்கள் பலவகை:

சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.

நவீன வகை ஊஞ்சல்கள் "சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.

தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.

கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.

Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிந்தன!

சம்சுங் நிறுவனமனது அண்மையில் Samsung Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசியினை வெளியிட்டிருந்தது.

இக்கைப்பேசி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்தும் தற்போது Samsung Galaxy S5 கைப்பேசி உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


இதன் உற்பத்தி தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாக தெரியவருவதுடன், இக்கைப்பேசி பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இதில் 64-bit Exynos 5430 Processor - இனை கொண்டுள்ளது எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் எனவும் தெரியவருகின்றது.






எப்படியெல்லாம் பேசக்கூடாது?

மனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி எங்கும் பேச்சு தான் நிறைந்து இருக்கிறது. வகுப்பறையில் வாத்தியார் பேசியே தூங்கவைக்கிறார். ஆபீஸில் மேலதிகாரி பேசி கடுப்பேத்துகிறார், இரவு மனைவி காதருகே கிசுகிசுத்து பட்டுப் புடவை சம்பாதித்து விடுகிறாள். காதலர்கள் கைப்பேசியில் பொய் பேசியே டைம் பாஸ் பண்ணுகிறார்கள். டிவியை போட்டால் அங்கேயும் பேச்சு தான். நாலு பேர் கூடினாலே நாக்குக்குத் தான் வேலை. எல்லோரும் அலட்சியமாகக் கொட்டும் வார்த்தைகளில் சில பேரழிவு ஏற்படுத்தும், சில ஆளை காலியாக்கும், சில வழி கெடுக்கும், சில வழி காட்டும், சில நன்மை தரும், சில நோய் வாய்ப்படுத்தும, சில குணமாக்கும். எனவே கம்யூட்டருக்கு உள்ளது போல் நம் மூளக்கும் ஒரு ஃபயர்வால் தேவை. இல்லாவிட்டால் நச்சு வார்த்தைகள் நம்மை நாசம் செய்து விடும்.

மனதை தகர்க்கும் பேச்சு:


குழந்தைகள் கேட்க நேரும் வார்த்தைகள் ,டிவி,சினிமாக்களின் வசனங்கள் அவனை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று யார் கவலைப்படுகிறார்கள்.


"என் மகன் சாப்பிடுவதே இல்லை" என்று சொல்லி கவலைப்படும் அன்னயின் சிம்பதியை பெற வேண்டி அவன் சாப்பிட அடம் பிடிப்பான்.



"உன் தம்பியப் பாரு எவ்வளவு நல்லா படிக்கிறான் நீ என்னடா மக்கு,

சோம்பேறி மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று ஒரு தாய் அடிக்கடி திட்டுவதே அவனை மக்கு பிள்ளையாக்கி விடும்.



"மூணு கண்ணன் வரான், பூச்சாண்டி வரான் சாப்பிடு" என்று பயப்படுத்துவது அவர்களை கோழையாக்கும்.


"அவன் பிடிவாதக்காரன்","தலை போனாலும் அவன் பால் சாப்பிட மாட்டான்","சோம்பேறி" ,"முட்டாள்,"தூங்கு மூஞ்சி" என்று திரும்பத் திரும்ப பிள்ளைகளை பார்த்து கூறினால். அவர்களும் அப்படியே ஆகி விடுவார்கள்.


எதிர் மறையான பேச்சுக்கள் தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும்.சுய மரியாதயை பலவீனமாக்கும்.


 நோயாளியை பார்க்கப் போகும் போது




"அட கடவுளே உனக்கா இப்படி வரவேண்டும்?"



"எதற்கும் ஸ்கேன் எடுத்துப் பாரு ப்ரெய்ன் ட்யூமராயிருக்கப் போகுது"


"இப்படித் தான் என் மாமனாரின் தம்பி பையனுக்கு லேசா வயித்து வலிதான் வந்தது, மூணாம் நாளே ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்து செத்துப் போனான், கேன்சராம்"


"நெஞ்சு வலி வந்தா இங்க்லீஸ் டாக்டரிடம் போனால் அறுத்து தைத்து விடுவான்.

பெரியப்பாவுக்கு அட்டாக் வந்தபோது நம்மூர் வைத்தியருகிட்ட ஒரு தடவை தான் கஷாயம் குடிச்சாரு அப்புறம் வரவே இல்லை"


தாயத்து கட்டிக்கோ, காத்து கருப்பு அடிச்சிருக்கும், சாமி குத்தம், அம்மன் விளையாட்டு என்று எத்தனையோ அபத்தங்களை உளறிக் கொட்டி நோயாளியின் BP எகிறச்செய்து குழியில் தள்ளி மண்ணை மூடுகிறார்கள்.


"என்ன உடம்புக்கு இளைச்சிருக்கே, அன்னிக்கு பாத்தப்போ நல்லாத் தானே இருந்தே"


"என்ன கலர் ட்ரெஸ் இது நல்லாவே இல்ல,எங்கெயிருந்து எடுத்தே விலை அதிகம்"

"இது பழைய மாடல் கார் உன் தலையிலே கட்டிட்டான்"


இனி தப்பாது , எழவு, நரகம், பிரயோஜனமில்லை, நடக்காது , சான்சே இல்லை. சுத்த வேஸ்ட். வீணா ட்ரை பண்றே ,அவளாவது உன்னப் பாக்கிறதாவது. இதப் பாருடா காமடியெ .பொளைக்கிறது கஸ்டம் தான். இது போன்ற வார்த்தைகள் முயற்சிக்கு முட்டுக் கட்டையிடும்.


 வளைந்த பேச்சுகள்:




என்னதான் நடுநிலை செய்தித் தாளானாலும் தொலைக் காட்சியானாலும் அதில் வரும் செய்திகள் பெரும்பாலும் மதம் அரசியல,மொழி இன சாயம் பூசித்தான் வரும். குறைந்த பட்சம் அந்த செய்தி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் தான் இருக்கும். செய்திகளில் அவர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளை வளைத்து எழுதுவார்கள.சாதகமானதை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்திலும் பாதகமானதை மூலையில் பொடி எழுத்திலும் போடுவார்கள்.


 சில செய்திகள் மத, இனக் கலவர நெருப்பை பற்ற வைக்கும், எண்ணெய் ஊற்றும். வளைத்து எழுதப்படும் வார்த்தைகளால் அரசியல்வாதிகள் தமக்குள் அடித்துக்கொள்ள நேரிடும். சில செய்திகள் பங்கு வர்த்தகத்தை பாதிக்கும். தவறான,கற்பனையான செய்திகள் உங்கள் நம்பிக்கைகளத் திசை திருப்பிவிடக் கூடும். கேட்கும் எதையும் அப்படியே நம்பி விடக்கூடாது. நாம் தான் அதன் உண்மையை சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
வானிலை அறிக்கை, தேர்தல் ஆரூடம், ராசிபலன் , வக்கீலின் வாதம் எல்லமே ரப்பர் பேச்சுகள் தான்.


 நெருப்புப் பொறிகள்:


சில மாமியார் மருமகள் பேச்சு, தொழிலாளி முதலாளி பேச்சு, எல்லை தகராறு பற்றிய பேச்சு வார்த்தை முள் மேல் சேலை தான்.


"நான் என்ன அவனப் போய் பாக்குறது, அவன் வேணுமின்னா என்ன வந்து பாக்கட்டும்""என் குடும்ப மென்ன பாரம்பரியமென்ன" "அவர் முதல்ல பேசட்டும் அப்புறம் நாம பேசலாம்" போன்ற ஈகோ பேச்சுகளால் இழப்புகள் தான் உண்டாகும்.



சின்ன சின்ன வார்த்தைகளுக்கு விபரீத அர்த்த்ங்கள் எடுத்துக்கொண்டு "என்னை பார்த்து எப்படி அவன் அந்த வார்த்தையை சொல்லலாம்"."இதை குத்திக் காட்டத்தான் அப்படி பேசினான்" என்று மல்லுக்கு போவது. இது போல சில தீப்பொறி வார்த்த்தைகளால் பஞ்சு பொதிகள் பற்றிக்கொண்டு வெட்டு குத்து, கொலை, கோர்ட், கேஸ், ஆயுள் தண்டனை வரை போய் கடைசியில் அன்று அப்படி பேசாதிருந்தால் இன்று இப்படி களி தின்ன வேண்டி வருமா என்று தாமதமாக யோசிப்பார்கள். சிலர் அலட்சியமாக சிந்தும் வார்த்தைகளால் அன்னியோனியமாக பல வருடம் குடும்பம் நடத்திய கணவனும் மனைவியும் டைவோர்ஸ் கேட்டு கோர்ட் வாசலில் ஏறி இறங்குவார்கள். பிள்ளைகள் அனாதைகளாகும்.



 பொறுப்பற்ற பேச்சு:




சில தலைவர்கள் விடும் பொறுப்பற்ற அறிக்கைகள் மக்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடும். அமெரிக்க அதிபரின் வார்த்தைகள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஒபாமாவின் அறிக்கையால் நம்மூர் சந்தையில் காய்கறி விலை எகிறக்கூடும் .இந்திய அரசியலில் பேசிப் பேசி நாட்டைக் கெடுத்தவர்களும், பேசாமலேயே நாட்டைக் கெடுத்தவர்களும் உண்டு. சில தலைவர்களின் திமிர் பேச்சால் போர் ஏற்பட்டு நாடு அழியும். அவர்களும் அழிவார்கள்..


 மோசடிப் பேச்சு:


சாமியார்கள்,மத குருக்கள, ஜோசியக்காரர்கள் சொல்வதை கண்னை மூடிக்கொண்டு கேட்கலாம் ஆனால் அறிவை மூடிகொண்டு அல்ல.இது தான் சத்தியத்தின் பாதை என்று தவறாக வழி காட்டும் போலி ஆன்மீக வாதிகளின் கவர்ச்சி பேச்சுகளில் கற்பழிப்பின் லட்சியங்கள் மறைந்திருக்கலாம்.
சமயவாதிகளின், அரசியல் வாதிகளின் சாதுரியப் பேச்சுகள் இளைய சமுதாயத்தை பலிகடாக்களாக மாற்றக்கூடும் .மதங்கள் உருவாக்கும் பயத்தையும், பக்தியையும், சற்று ஒதுக்கி வைத்து விட்டு தர்க்க அறிவின் ஒளியில் பார்த்தால் எல்லா மதத்திலும் அடியில் பெரும் ஓட்டை தான் தெரியும்.


மந்திரவாதி "உனக்கு பக்கத்து வீட்டுக்காரன் சூனியம் வைத்திருக்கிறான் நாற்பது நாளில் கை கால் விளங்காமல் போவாய் ’என்று சொல்வதை நீங்கள் நம்பினால் உங்கள் மனம் அதை உண்மயாக்கும.


குடுகுடுப்பைக்காரன் " நீ ரத்தம் கககி சாவாய்" என்று சொன்னால் அவன் சொல்லுக்கு அந்த பவர் உண்டு என்று மனம் நம்பி விட்டால் பயத்தில் உடனே அட்ரீனலின் சுரக்கும் இதயத்துடிப்பு தாறு மாறாகும், இரத்த அழுத்தம் கூடும்,தாக்குப் பிடிக்காமல் ஏதோ ரத்தக்குழாய் வாய் பிளக்க அவன் வார்த்தை பலித்து விடும்.


சின்ன காஸ் ட்ரபுளை பல மருத்துவ வார்த்தைகளை சொல்லி பயமுறுத்தி ஹார்ட் அட்டாக்காக நம்ப வைத்து பணம் கறக்கும ஒருசில மருத்துவர்களின் வார்த்தைகள் அது போன்றது. ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு வாழ்கையை பாழக்குபவர்கள் எத்தனை பேர்கள். நம்பிக்கையை சிறிது மாற்றி வைத்து விட்டு சிறிது சிந்தித்துப் பார்த்தாலே தெரியும் அவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே உங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று்.



 நீர் குமிழிகள்:


குடிகாரன் பேச்சு, கடன் கேட்பவர்கள் பேச்சு, காதலன் பேச்சு, அரசியல்வாதியின் வாக்குறுதி, சீட்டுக்கம்பனி வாக்குறுதி எல்லாவற்றுக்கும் அற்ப அயுள் தான்.


உயர்வு நவிற்சி:


கல்யாணத் தரகரின் பேச்சு, வியாபாரியின் பேச்சு, சேல்ஸ் ரெப்பின் பேச்சு, ரசிகர்கள் பேச்சு, முகஸ்துதி பேச்சு, அடிவருடி பேச்சு ,மாப்பிள்ளை தந்தையின் பேச்சு ,பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்களின் பேச்சு, ரியல் எஸ்டேட் காரர்கள் பேச்சு எல்லாமே 70 mm ல் DTS effect உடன் இருக்கும். அப்படியே நம்புவோர்க்கு நாமம் தான்.

வஞ்சப் புகழ்சி: 


சிலர் தமாஷ் பண்ணுகிறேன் என்று கூட இருப்பவர்களையே குத்திக் காட்டுவார்கள். நையாண்டி அடிப்பார்கள் இந்த நகைச்சுவைத் திலகங்கள் நளை வாழ்வின் சறுக்குப்பாதையில் சறுக்கி கீழே போகும் போது அனாதைகளாக மற்றவர்களின் நைய்யாண்டிகளுக்கு கதா பாத்திரமாவார்கள்.



மூடப் பேச்சுகள்:
 

பூனை குறுக்கே போனால்,விதவை எதிரே வந்தால் சகுனம் சரியில்லை.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.போன்ற மூட நம்பிக்கைகளை தனிப் பதிவுதான் போட வேண்டும்.முன்னோர்களின் சாத்திர சம்பபிரதாயாங்கள் அவர்கள் காலத்தில் எதோ ஒரு தேவைக்கு உருவாக்கப்பட்டது,அதை கண்மூடி பின் பற்றாமல் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டு இப்போதும் அந்த தேவை உண்டா என் ஆய்ந்து அவற்றின் உண்மையான நோக்கமறிந்து செயல் படவேண்டும்.


காதல் பேச்சு:காதலிப்பதை சொல்லி கெட்டவர்களை விட சொல்லாமலேயே கெட்டவர்கள் அனேகம் ."உன்னை விட அழகி யாரும் இல்லை", "நீ தான் நான் பார்த்த முதல் பெண்", "உனக்காக உயிரையும் தருவேன்", நீயின்றி நான் இல்லை" இப்படி எத்தனை பொய்களில் காதலை கட்டி எழுப்புவார்கள், கல்யாணம் என்றால் காணாமல் போவார்கள். அப்படியே கல்யாணம் செய்து கொண்டால் பொய்கள் எல்லாம் சாயம் வெளுக்கும் போது காலம் கடந்திருக்கும்.


குதர்க்கப் பேச்சு: தர்க்கம் ஆரோக்கியமானது,ஆனால் முயலுக்கு மூணுகால் பார்ட்டிகளின் "அதான் அந்த இன்னொரு வாழைப்பழம்" டைப் குதர்கங்களை விட்டு விலகுவது நேரம் மிச்சப்படுத்தும்.


 

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!




Cloud-Convert


மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம்.


இமெயிலில் ஒரு கோப்பு இணைப்பாக வரும். அந்த கோப்பு ஜிப் பைல் வடிவில் இருக்கலாம். அதை கிளிக் செய்யும் போது உடனே ஒபன் ஆகாமல் மேலே சொன்ன வாசகத்தை எதிர் கொள்ளலாம். பிடிஎப் கோப்புகள், ஒலி வடிவிலான கோப்புகள் , புகைப்பட கோப்புகள் என பலவகையான கோப்புகளை டவுண்லோடு செய்ய முயலும் போது இத்தகைய சோதனையான அனுபவம் ஏற்படலாம்.




இது போன்ற நேரங்களில் எல்லாம் குறிப்பிட்ட வடிவிலான அந்த கோப்பை பொருத்தமான வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்னும் எளிமையான இணைய நடைமுறையை நீங்களும் கற்று கொண்டிருக்கலாம்.


இதற்கு தேவையான மென்பொருள்களும் இணையத்தில் இருக்கின்றன என்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.



மென்பொருள் கூட தேவையில்லை, கோப்புகளை மாற்றித்தரும் இணையதளங்களும் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்கலாம்.




கிளவுகன்வர்ட்.ஆர்ஜி தளமும் இதே வகையான சேவையை வழங்குகிறது.பெரும்பாலான கோப்பு மாற்று சேவை போல இந்த தளத்திலும் எதையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை. மாற்ற வேண்டிய கோப்பை பதிவேற்றினால் போதுமானது.கிளவுட் முறையில் செயல்படும் சேவை இது.


இப்படி 148 வகையான கோப்புகளை இந்த சேவை விரும்பிய கோப்பு வடிவில் மாற்றித்தருகிறது. எந்த வகையான கோப்புகளை எல்லாம் மாற்ற முடியும் என்பதற்கான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பொதுவாக இல்லாமல் , எந்த எந்த பிரிவில் என்ன வகையான கோப்புகளை மாற்றலாம் என அழகாக துணைத்ததலைப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒலி கோப்பு என்றால் எம்பி3 , எம்4ஏ, எ.எ.சி என வரிசையாக ஒரு சின்ன பட்டியல் வருகிறது.



கோப்புகளை கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது கூகுல் டிரைவி இருந்தோ பதிவேற்றலாம். மாற்ற வேண்டிய கோப்பு எந்த வடிவில் ,எப்படி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடும் வசதி இருக்கிறது. மாறிய் கோப்பை இமெயில் பெறலாம். அல்லது கூகுல் டிரைவில் வந்து உட்கார செய்யலாம்.டிராப் பாக்சிலும் தான்.



ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம் .எனவே மெயிலில் பார்க்க முடியாத கோப்பு வந்தால் இந்த சேவை மூலம் மாற்றி கம்ப்யூட்டரில் பார்த்து கொள்ளலாம்.



சாதாரண பயனாளிகள் நாள் ஒன்றுக்கு 5 கோப்பு வரை மாற்றிகொள்ளலாம். பதிவு செய்து உறுப்பினரானால் கூடுதல் வசதி உண்டு.


பதிவேற்றப்படும் எந்த கோப்பையும் சேமித்து வைப்பதில்லை என்று உறுதிமொழி தருகிறது.இணைய கண்காணிப்பு யுகத்தில் இது மிகவும் முக்கியம்.


இணைய முகவரி:     https://cloudconvert.org/

ஜமைக்காவும், கீரிப்பிள்ளையும்...














நாம் கீரிப்பிள்ளை என்று சொல்லும் உயிரினம் இந்தியாவைத்தவிர மற்ற நாடுகளில் இல்லை. கீரிக்கும் பாம்புக்கும் ஒத்துவராது என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஒரு சமயம் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் ‘‘பெரிதிலேன்ஸ்’’ என்று அழைக்கப்படும் விஷப்பாம்புகள் அதிகம் இருந்தன. அவற்றால் கடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பெருகி வந்த அந்த பாம்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று அங்கு வசித்தவர்கள் தவித்தனர்.



அப்போதுதான் இந்தியாவில் கீரிப்பிள்ளை என்ற உரியினம் இருப்பதும், அதற்கு பாம்புகள்தான் பிடித்தமான உணவு என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இந்தியாவை தொடர்பு கொண்டார்கள். இங்கிருந்து நூற்றுக்கணக்கான கீரிப்பிள்ளைகள் கப்பலில் அனுப்பப்பட்டன. அங்கு இறங்கிய கீரிப்பிள்ளைகளுக்கு அந்த நாடு மிகவும் பிடித்துப்போனது. காரணம் எங்கு பார்த்தாலும் அவற்றுக்கு பிடித்த உணவான பாம்புகள் சுற்றிவந்ததுதான்.



வயிறு நிறைய பாம்புகளை பிடித்துச்சாப்பிட்ட அவை காடு நிறைய குட்டிகளையும் போட்டது. இதனால் ஒரு சில ஆண்டுகளில் ஜமைக்கா முழுவதும் கீரிப்பிள்ளைகள் அதிகரித்து பாம்புகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் மிகவும் சந்தோஷப்பட்ட அங்குள்ள மக்கள் கீரிகளை தங்கள் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கத் தொடங்கினர். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது காலத்திற்குத்தான் நீடித்தது.



காரணம் பாம்புகளை ஒட்டுமொத்தமாக அழித்த கீரிப்பிள்ளைகள் உணவின்றி தவித்தன. இதனால் வீடுகளில் மக்கள் வளர்த்த கோழி, வாத்துகளை பிடித்து சாப்பிடத்தொடங்கின. இதுதொடர்ந்த நிலையில் அவற்றிடம் இருந்த தங்கள் வளர்ப்பு பறவைகளை காப்பாற்றுவது அங்கிருந்தவர்களுக்குபெரிய வேலையாகிப்போனது.



பாம்பை எப்படி ஒழிப்பது என்று யோசித்து கீரிப்பிள்ளைகளை நாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள், பின்னர் கீரியை எப்படி ஒழிப்பது என்று யோசிக்கும் நிலை உருவானது. இதன் மூலம் ஒன்று மட்டும் அந்த நாட்டு மக்களுக்கு தெளிவாக புரிந்தது. பாம்புகளை ஒழிப்பது சுலபம்...ஆனால் கீரிகளை அதுபோல ஒழிக்க முடியாது என்பதுதான் அது.

அவ்வையின் நையாண்டி !


நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம். தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடிய ஒரு வசைப்பாட்டை இப்போது பார்ப்போம்.


எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே,  முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!


இதில் முதல் வரியில் வரும் “ எட்டேகால்“ என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும்.


அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் “ அ“ அதே போல் கால் 1/4  என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் “ வ “ . எட்டேகால் = எட்டு + கால் அதாவது அ + வ = அவ


அந்த பாடலின் முதல் வரியை படியுங்கள். ‘அவ‘ லட்சணமே என்று பொருள் வருகிறதா?


அடுத்த வரி, எமனேறும் பரியே - எருமை மாடே



3-வது வரி 'மட்டில் பெரியம்மை வாகனமே'  மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே



'முட்டமேல் கூரையில்லா வீடே'  மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே




'குலராமன் தூதுவனே' - ராமன் தூதுவனே - அதாவது  குரங்கே



கடைசி சொல்லான ‘ஆரையடா சொன்னாயடா ‘ என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.




“ நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! “ என்பது ஒரு பொருள்.



இதில் இப்போது ‘சொன்னாய்‘ என்பதை மட்டும் பிரித்தால்



‘சொன்னாய்‘ = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும்


அல்லது




யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.




எப்படி இருக்கிறது பாருங்கள், நம் புலவர்களின் நையாண்டி!

இடது பக்க போக்குவரத்து!














ந்தியாவின் சாலை போக்குவரத்தில், வாகனங்கள் சாலையின் இடது புறம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும், ஒரு சில நாடுகளைத் தவிர சாலைப் போக்குவரத்து இடது புறமாகவே உள்ளது. இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்த்தால் நாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி போக வேண்டும்.


இங்கிலாந்தின் முதல் விக்டோரியா மகாராணி காலத்தில் இந்த பழக்கம் வந்தது. அப்போது அரச குடும்பத்தினரும், நிலச்சுவான்தாரர்களும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளில் போவது வழக்கம். இந்த வண்டிகளில் குதிரை ஓட்டுபவர் வண்டியின் வலது புறம் உட்கார்ந்திருப்பார். இது குதிரைகளை கையாளுவதற்கு வசதியாகவும், சுலபமாகவும் இருந்தது. மேலும் அதுவே ஒரு பாரம்பரிய மரபாகவும் மாறியது.



குதிரைகளை அதட்டி ஓட்டுவதற்கு கையில் உள்ள நீளமான சவுக்கை சுழற்றும் போது, அது சாலை ஓரத்தில் உள்ள மரக்கிளையில் சிக்கி சிறு சிறு விபத்துகள் ஏற்படுவதுண்டு. மேலும் அரச குடும்பத்தினர் பயணம் செய்யும் போது சவுக்கு சிக்கிக் கொண்டால், கால தாமதத்திற்கும், அரசரின் கோபத்திற்கும் ஆளாக நேரிட்டது. இதனால் சவுக்கு, சிக்காத அளவுக்கு வலது புறம் இடம் விட்டு சாலையில் இடது புறம் வண்டியை செலுத்தினார்கள்.
பின்பு பல ஆண்டுகள் கழித்து மோட்டார் வாகனங்கள் அறிமுகப்படுத்தபட்டவுடன், இதே முறை நடைமுறை படுத்தப்பட்டது. இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளில் இதே சாலை விதிமுறை கடைபிடிக்கப்பட்டது.



இப்போது உலகில் பெரும்பான்மையான நாடுகளில் இந்த முறைதான் நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டுமே வலது புறத்தில் வாகனங்கள் செல்லும் விதி இருக்கிறது. அதனால் தான் அமெரிக்க வாகனங்களில் டிரைவர்களின் இருக்கை வலது புறத்தில் உள்ளது.
இந்தியாவில் இருந்து செல்பவர்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே அமெரிக்காவில் வாகனங்கள் ஓட்ட முடியும். ஏனென்றால் இடது புறம் ஓட்டி பழக்கப்பட்டவர்கள் வலது புறம் ஓட்டுவது சிரமம்.

ஆயுர்வேதம் கற்றுத்தரும் பாடம்!















மனிதனிடம் தோன்றும் இயற்கையான உணர்வுகளை வேகம் என்று அழைக்கிறது ஆயுர்வேதம். இந்த வேகம் உடல் சம்மந்தமாகவோ அல்லது மனம் சம்மந்தமாகவோ இருக்கலாம்.


வேகத்தை தாரணீய வேகம் என்றும் அதாரணீய வேகம் என்றும் பிரிக்கிறார்கள். தாரணீய வேகம் என்றால் அடக்க வேண்டிய உணர்வுகள் என்றுபொருள். உதாரணமாக கோபம், போட்டி, பொறாமை, வஞ்சகம், காமம் போன்றவை அடக்கி நெறிமுறைப்படுத்த வேண்டியவை. அதாரணீய வேகம் என்றால் தடுக்கக்கூடாத உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்று பொருள். பசி, தும்மல், தண்ணீர் தாகம், அபான வாயு, மலம், சிறுநீர், இருமல், தூக்கம், மேல்மூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, சுக்லம் ஆகியவையாகும்.


அபான வாயுவையும், மலத்தையும் அடக்கினால் வயிற்றுவலி, பசியின்மை, பார்வைக்குறைவு, இருதய நோய்கள், தலைவலி போன்றவை ஏற்படும். மலத்தை அடக்குவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சிறுநீரை அடக்கினால் நீர்க்கடுப்பு, எரிச்சல், வலி, சக்தியின்மை போன்றவை ஏற்படும். அவ்வாறு அடக்க நேர்ந்தால் உடனடி பாதிப்பு தெரியாவிட்டாலும் நிறைய நோய்கள் வந்தடையும். ஏப்பம், தும்மல் அடக்கினால் தலைவலி, கழுத்துவலி போன்றவை ஏற்படும். தலைவலி, ஜலதோஷம், மூச்சு முட்டு, ஆசனக்கடுப்பு, நெஞ்சுவலி போன்றவை படையெடுக்கும்.


தண்ணீர் தாகத்தை அடக்க பழகிவிட்டால் நாவறட்சி ஏற்பட்டு ‘டீஹைட்ரேஷன்’ உண்டாகும். தலைசுற்றல், மயக்கம் வரும். தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்தின் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. தூக்கம் வரும்போது உடனே தூங்கிவிடுவது நல்லது. இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி விடியற்காலை குறிப்பிட்ட நேரத்தில் எழுந்தரிக்க பழகுவது சிறப்பானது. வேலைக்காக இரவில் விழித்திருப்பது பின்னாளில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.


இதைத்தான் தலாய்லாமா மனிதனின் விசித்திர பழக்கம் என்று குறிப்பிட்டார். இளமையில் இரவு பகல் பாராமல் உழைத்து பணத்தை சேர்க்கிறான். சரியான தூக்கம், ஓய்வு இல்லாததால் விரைவிலேயே உடல்நலத்தை கெடுத்துக்கொள்கிறான். பின் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவு செய்து தொலைந்த உடல்நலத்தை மீட்கிறான் என்றார். உண்மைதான். மனிதன் சரியான ஓய்வு, சரியான தூக்கம் போன்றவற்றை இளமையில் இருந்தே கடைபிடித்தால் பின்னாளில் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டியதில்லை. கூட்டிக்கழித்துபார்த்தால் உடலை கெடுத்து இளமையில் சம்பாதிக்கும் பணம் பின்னாளில் அந்த உடல் ஆரோக்கியத்திற்கு செலவாகிறது. அதனால் தேவையான அளவு உழைத்து ஆரோக்கியத்தை காப்போம் என்கிறது ஆயுர்வேதம்.

பாலைவனங்கள்!















செடிகளோ, உயிரினங்களோ வளர முடியாத பாலைவனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலில் வருவது வெப்பப் பாலைவனங்கள். இவை வெப்ப மண்டலத்தில் காணப்படும். ஆப்பிரிக்காவில் அரேபியன், நமீப், காலஹாரி போன்ற பாலைவனங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.



இரண்டாவதாக குளிர் பாலைவனங்கள். இவை கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பவை. மலைத்தொடர்களின் அடிவாரங்களில் உருவாகும் இதுபோன்ற பாலைவனங்களில் பகலில் அதிக வெப்பம் காணப்பட்டாலும், இரவில் கடும் குளிர் வாட்டும். ஆண்டுக்கு 25 செ.மீ. மழை பெய்யும். இந்த காலநிலை காரணமாக ஏராளமான செடி, கொடிகள் இங்கே வளர்கின்றன. மத்திய ஆசியாவில் சோபி, தென்அமெரிக்காவில் பட்டகோனியன் போன்றவை சில குளிர் பாலைவனங்கள்.



துருவப் பாலைவனங்கள் மூன்றாவது வகை. அண்டார்டிகா, யூரேஷ்யா, வட அமெரிக்காவின் வடபகுதி, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனி நிறைந்த பாலைவனங்களைப் போல அதிக அளவில் மணல் காணப்படாவிட்டாலும் பாறைகள் இருக்கும். மிகக் குறைந்த அளவில் உயிரினங்கள் காணப்படும்.



உலகிலேயே சகாரா பாலைவனத்தை விட வறண்ட பகுதி அண்டார்டிகா. பாலைவனங்களில் உயர்ந்த பட்ச வெப்பநிலை 58 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லும். குளிர் மைனஸ் 88 டிகிரி. அதற்கு கீழேயும் சென்று விடும். பாலைவனங்களில் 259 மி.மீக்கு மேல் மழை பெய்வதில்லை.


பாலைவன மேகங்களை அவற்றின் தோற்ற வடிவிற்கு ஏற்ப பலவாறாகப் பிரிக்கலாம். சிரஸ் வகை மேகங்கள் வளையல் பூச்சிகள் வடிவில் சுருண்ட வடிவில் காணப்படும். இவை சுமார் 12 கி.மீ. உயரம் வரை பரவி நிற்கும்.
‘குமுலஸ்’ வகை மேகங்கள் வட்டவடிவக் குவியல்களாய் உருண்டு திரண்டு நிற்கும். ‘ஸ்ட்ராயஸ்’ வகை மேகங்கள் ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் பஞ்சுகள் போல் காணப்படும். ‘நிம்பஸ்’ வகை மேகங்கள் பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய கார்மேகங்களாகும்.

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட்!

கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும் Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep என்ற வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த வசதிகள், லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு, மின் சக்தி மிச்சப்படுத்துவதில் அதிக உதவி செய்கின்றன. லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக நம் மாணவர்களுக்கு இந்த தகவல்கள், முதல் முதலாகப் பெறுபவையாக இருக்கும். இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 



1. ஸ்லீப் மோட் (Sleep mode):


 இது மின்சக்தியை மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த வழி. டிவிடியைப் பயன்படுத்தி திரைப்படங்களைப் பார்க்கையில், வேறு ஒரு சிறிய வேலைக்குச் செல்ல வேண்டும் என எண்ணினால், pause பட்டன் போட்டு நிறுத்துவது போல இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இதனை இயக்குகையில், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. திறந்து வைத்து செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்கள், இயங்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் மெமரியில் வைக்கப்படுகின்றன. இவற்றை மீண்டும் கொண்டு வர விரும்பினால், அவை சில நொடிகளில் இயக்கத்திற்குக் கிடைக்கும். இது ஏறத்தாழ "Standby” என்பது போலத்தான். சிறிய காலப் பொழுதிற்கு நம் கம்ப்யூட்டர் வேலையை நிறுத்த வேண்டும் எனில், இந்த வழியை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் (Sleep mode) கம்ப்யூட்டர் அவ்வளவாக, மின் சக்தியைப் பயன்படுத்துவதில்லை.



2. ஹைபர்னேட் (Hibernate):


இந்த நிலையில், திறந்து வைத்து நாம் பயன்படுத்தும் டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும், ஹார்ட் டிஸ்க்கிலேயே சேவ் செய்யப்படுகின்றன. மின்சக்தி பயன்படுத்துவது அறவே நிறுத்தப்படுகிறது. மீண்டும் சக்தி அளிக்கப்படுகையில், செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்தும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு கிடைக் கின்றன. அதிக நேரம் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையிலும், அதே நேரத்தில், பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்தி மூடி வைக்கும் எண்ணம் இல்லை என்றாலும், இந்த நிலையையே பயன்படுத்த வேண்டும்.



3. ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep):


மேலே 1 மற்றும் 2 நிலைகளில் சொல்லப்பட்ட ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இரண்டும் இணைந்த நிலையே இது. இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானது. இந்த நிலையை மேற்கொள்ளும் போது, திறந்திருக்கும் டாகுமெண்ட் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும், மெமரியிலும் ஹார்ட் டிஸ்க்கிலும் சேவ் செய்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் மிகவும் குறைவான மின்சக்தி செயல்பாட்டில் வைக்கப்படுகிறது. இதன் மூலம், மீண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்கு வர, மிக மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் சிஸ்டத்தில், மாறா நிலையில் செயல்பாட்டு நிலையில் அமைக்கப் படுகிறது. லேப்டாப் கம்ப்யூட்டரில், இது செயல்பாடு இல்லா நிலையில் உள்ளது. இதனை இயக்கியவுடன், இது உங்கள் கம்ப்யூட்டரைத் தானாகவே, ஹைப்ரிட் ஸ்லீப் நிலையில் வைக்கிறது.

இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், மின்சக்தி பிரச்னை ஏற்பட்டால் உதவியாய் இருக்கும். மின்சக்தி மீண்டும் கிடைக்கும் போது, மெமரியிலிருந்து பைல்கள் கிடைக்காத நிலையில், விண்டோஸ், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அவற்றை எடுத்து இயக்குகிறது.


4. எப்படி பெறுவது?:

Sleep மற்றும் Hibernate நிலைகளை, ஷட் டவுண் பட்டன் அருகே உள்ள ஆரோ பட்டனை அழுத்தி, ஆப்ஷன் மெனுவில் பெறலாம்.இவை காணப்படவில்லை என்றால், அதற்கான காரணங்கள் கீழே குறிப்பிட்டவற்றில் ஒன்றாக இருக்கலாம்.


1. உங்களுடைய வீடியோ கார்ட், ஸ்லீப் நிலையை சப்போர்ட் செய்திடாமல் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், வீடியோ கார்ட் நிறுவன இணைய தளத்தில், இதனை சப்போர்ட் செய்திடும் ட்ரைவர் புரோகிராமை இறக்கி இயக்கவும்.



2. உங்கள் கம்ப்யூட்டரில், உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமை இல்லாத பயனாளராக நீங்கள் செயல்பட்டாலும், இந்நிலை உங்களுக்குக் கிடைக்காது.


3. மின்சக்தி மிச்சப்படுத்தும் வழிகள் (powersaving modes), கம்ப்யூட்டரின் பயாஸ் சிஸ்டத்தால், இயக்கவும் மூடவும் செய்யப்படு கின்றன. இவற்றை இயக்கத்திற்குக் கொண்டு வர, உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். அடுத்து பயாஸ் செட் அப் புரோகிராம் செல்லுங்கள். ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இதற்கான கீ வேறுபடும். எனவே, எந்தக் கீயை அழுத்தினால், பயாஸ் புரோகிராமிற்குச் செல்ல முடியும் என்பதனை அறிந்து செல்லவும். பொதுவாக, கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையிலேயே, பயாஸ் புரோகிராம் செல்ல என்ன செய்திட வேண்டும் என்பதற்கான வழிமுறை காட்டப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, கம்ப்யூட்டருடன் வந்த குறிப்பு ஏட்டினைப் பார்க்கவும். அல்லது கம்ப்யூட்டரைத் தயார் செய்த நிறுவனத்தின் இணைய தளம் செல்லவும்.


4. கம்ப்யூட்டரை எழுப்புதல்: இந்த செயல்படா நிலையிலிருந்து எந்த வழிகளில், கம்ப்யூட்டரைச் செயல்படும் நிலைக்குக் கொண்டு வரலாம்? பெரும்பாலான கம்ப்யூட்டர்களில், பவர் பட்டனை அழுத்துவதன் மூலம், செயல்படும் நிலைக்குக் கொண்டு வரலாம். சிலவற்றில், கீ போர்டில் ஏதேனும் ஒரு கீ அல்லது மவுஸ் பட்டன் அழுத்துவதன் மூலம் இயக்க நிலைக்குக் கொண்டு வரலாம். சில லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதன் மூடியைத் திறந்தாலே, செயல்நிலைக்குக் கம்ப்யூட்டர் மாறிவிடும். இந்த வழியையும், கம்ப்யூட்டர் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அறியலாம்.


5. ஹைப்ரிட் ஸ்லீப் நிலையை அமைத்தலும் நீக்கலும்:


ஹைப்ரிட் ஸ்லீப் நிலையை கம்ப்யூட்டர் ஒன்றில் அமைத்திட, ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் செல்லவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் Power Options என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில், Power Options காணப்படவில்லை என்றால், கண்ட்ரோல் பேனல் மேலாக வலது பக்கம் உள்ள வியூ (View) என்பதில் உள்ள கீழ் விரி மெனுவினைத் திறக்கவும். இதில் Large icons அல்லது Small icons என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். கேடகிரி (Category) வியூவில், System and Security என்பதில் கிளிக் செய்து, இதில் Power Options என்ற தலைப்பில் கிளிக் செய்திடவும்.


இங்கு Select a power plan என்ற பகுதி காட்டப்படும். இதில் அப்போதைய மின்சக்தி கட்டுப்பாடு குறித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் அருகே, Change plan settings என்பதற்கான லிங்க் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இங்கு Change advanced power settings என்ற லிங்க்கும் கிடைக்கும். Sleep என்பதில் உள்ள ப்ளஸ் அடையாளத்தில் கிளிக் செய்தால், அனைத்து ஆப்ஷன்களும் காட்டப்படும்.
ஏற்கனவே, விரிக்கப்பட்டிருந்தால், அப்படியே அதில் உள்ள ஆப்ஷன்களைக் காணவும். Allow hybrid sleep என்பதன் அருகே உள்ள ப்ளஸ் அடையாளத்தினைக் கிளிக் செய்திடவும்.



பொதுவாக, பவர் சேவிங் திட்டத்தில், கம்ப்யூட்டர் தூங்கும் போது, அதனை இயக்கத்தில் கொண்டு வர முயற்சிக்கையில், விண்டோஸ் சிஸ்டம் பாஸ்வேர்ட் ஒன்றைக் கேட்கும். இது தேவை இல்லை என எண்ணினால், பவர் ஆப்ஷன் டயலாக் பாக்ஸில், இதனை நீக்குவதற்கான வழி கிடைக்கும். அதனைச் செயல்படுத்தவும்.



அனைத்தையும் அமைத்த பின்னர், சேவ் பட்டனில் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து வெளியேறவும்.


6. கம்ப்யூட்டர் தானாக இந்த நிலைகளை எடுப்பதனை எப்படி தடுப்பது? 


முன்பு கூறியபடி, கம்ப்யூட்டர் இந்த நிலைகளில் இருந்து மீள்கையில், பாஸ்வேர்ட் கேட்பதனை நாம் தடுக்கும் வகையில் செட் செய்திட முடியும். ஆனால், பேட்டரியில் இயங்கக் கூடிய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இதில் ஒரு பிரச்னை உள்ளது. இத்தகைய கம்ப்யூட்டர்களில், ஸ்லீப் அல்லது ஹைபர்னேட் நிலையை முடிக்கையில், கவனமாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணியாற்றுகின்ற வேளையின் நடுவே, பேட்டரி முழுவதுமாகத் தன் சக்தியை இழப்பதாக இருந்தால், நாம் பயன்படுத்திய அல்லது உருவாக்கிய டேட்டாவினை இழந்துவிடுவோம்.



கம்ப்யூட்டர் ஸ்லீப் அல்லது ஹைபர்னேட் நிலைக்குச் செல்லுவதற்கான நேரத்தினை மாற்றலாம். கீழ்க்குறித்தபடி செயல்பட்டு மாற்றலாம்.
கண்ட்ரோல் பேனலில், Power Options என்ற பிரிவிற்குச் செல்லவும். Select a power plan திரையில், தற்போதைய பவர் ஆப்ஷன்ஸ் நிலைக்கு அருகே உள்ள Change plan settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.


On the Change settings for the plan என்ற விண்டோவில், Change advanced power settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு Sleep என்ற தலைப்பில் டபுள் கிளிக் செய்திடவும். நீங்கள் லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், On battery or Plugged in என்பதில் கிளிக் செய்திடவும். இதனால், எடிட் பாக்ஸ் இயக்கப்படும். இங்கு கிடைக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியை, Never என்பது தேர்ந்தெடுக்கப்படும் வரை அழுத்தவும்.


குறிப்பு:

  நீங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால், Setting கிளிக் செய்து, Never என்பது தேர்ந்தெடுக்கப்படும் வரை, இங்கு கிடைக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தவும். பின்னர், ஓகே கிளிக் செய்து, நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் அனைத்தையும் சேவ் செய்திடவும். பின்னர், முன்பு கூறியபடி கண்ட்ரோல் பேனல் விண்டோவையும் மூடவும்.
நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு Hibernate நிலைதான் மிகச் சரியான தேர்வாக அமையும். ஏனென்றால், மற்ற இரு நிலைகளுடன் ஒப்பிடுகையில், இதுவே, அதிகமான மின் சக்தியை மிச்சம் செய்திடும்.

நோபல் பரிசு!

டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு  தினமான டிசம்பர் 10-ஆம்  தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசுத்தொகையாக தலா ரூ. 7 கோடியே 75 லட்சம் வழங்கப்படுகிறது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு

 பிரிட்டனைச் சேர்ந்த பீ ட்டர் ஹிக்ஸ் (84 வயது), பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிராங்கா எங்க்லர்ட் (80 வயது) ஆகியோர் இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத 16 துகள்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் 17-ஆவதாக மேலும் ஒரு துகள் இருந்தாக வேண்டும் என்று 1964-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கோட்பாட்டு ரீதியில் கண்டறிந்தனர். இது ‘ஹிக்ஸ் போஸான்’ அல்லது ‘கடவுள் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாடு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சிஇஆர்என் பரிசோதனைக்கூடத்தில் கடந்த ஆண்டு நிரூபிக்கப்பட்டது. இந்தத் துகள் இன்றி மனிதர்கள் உள்பட எவரும் வாழ முடியாது. இந்தத் துகளுடன் தொடர்பு இருப்பதால்தான், அ னைத்துப் பொருள்களுக்கும் எடை கிடைக்கின்றன. இந்த ஆராய்ச்சிக்காக இவர்கள் இருவரும் நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பீட்டர் ஹிக்ஸ், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை கௌரவப் பேராசிரியர்.    பெல்ஜியத்தில் உள்ள லைப்ரி டி பிரக்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் எங்க்லர்ட்.     

மருத்துவத்துக்கான முதல் நோபல் பரிசு

அமெரிக்கப் பேராசிரியர்கள் ஜேம்ஸ் இராத்மேன், ரேண்டி டபிள்யூ.சேக்மேன், ஜெர்மன் பேராசிரியர் தாமஸ் சி.சூடாஃப் ஆகியோர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டலின் செல்களுக்கு இடையே நடைபெறும் மூலக்கூறு பரிமாற்றத் தன்மையை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து நோய்த் தடுப்புக்கு உரிய மருத்துவ வழிமுறைகளை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சர்க்கரை நோய்,  நரம்பியல் தொடர்பான உடல் நலப் பிரச்சினைகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் இவர்களின் செல் ஆராய்ச்சி இருந்தது.

ஜேம்ஸ் இ.ராத்மேன் (62 வயது), மெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் செல் உயிரியல் துறைத் தலைவர். ரே‘ண்டி டபிள்யூ.சேக்மேன் (64 வயது),  அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழக செல் உயிரியல் துறைப் பேராசிரியர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தாமஸ் சி.சூடாஃப் (57 வயது), அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரி-வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

வேதியியலுக்கான நோபல் பரிசு

அமெரிக்காவைச் சேர்ந்த  மைக்கேல் லெவிட், மார்ட்டின் கார்ப்ளஸ், ரீக் வார்ஷெல் ஆகியோர் இந்த ஆண்டு  வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேதியியல் செய்முறைகளை கம்ப்யூட்டர் மாதிரிகள் மூலம் உருவாக்குவதற்கு அடித்தளமிட்டதற்காக இவர்கள் இந்த  விருது பெறுகிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு ஸ்கூல் ஆஃப் மெடிசினில் பணியாற்றி வரும்  மைக்கேல் லெவிட், இங்கிலாந்து, இஸ்ரேலிய, அமெரிக்கா  குடியுரிமை பெற்றவர். ஸ்ட்ராஸ்போர்க்  பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மார்ட்டின்  கார்ப்ளஸ், மெரிக்காவில் வசிக்கும் ஆஸ்திரியர். தெற்கு கலிபோர்னியா  பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ரீக்  வார்ஷெல்,  அமெரிக்காவில் வசிக்கும் இஸ்ரேலியர்.

இயற்பியலில் முதல்  நோபல் பரிசு பெற்றவர்
வில்ஹம் கான்ட்ராட் ராண்டஜன்
ஜெர்மன்
கண்டுபிடிப்பு: எக்ஸ்ரே
விருது ஆண்டு:  1901


இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
மேரி கியூரி
திருமணத்திற்கு முன்பு: போலந்து
திருமணத்திற்குப் பின்பு: பிரான்ஸ்
கண்டுபிடிப்பு: கதிர்வீச்சு
விருது ஆண்டு: 1903
வேதியியலுக்காக 1911இல் நோபல் பரிசு பெற்றவர்.


இயற்பியலில் மிகக்குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர்
லாரன்ஸ் பிராக் -  25 வயது
பிரிட்டன்
கண்டுபிடிப்பு: எக்ஸ்ரேக்களுக்குப் பயன்படும் கிரிஸ்டல் அமைப்பு.
மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவரும் இவர்தான்.
விருது ஆண்டு: 1915


இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற அதிக வயதானவர்
ரேமண்ட் டேவிஸ் ஜூனியர்
அமெரிக்கா
88 வயது
கண்டுபிடிப்பு:  காஸ்மிக் நியூட்ரினோஸ்
விருது ஆண்டு: 2002
 
மருத்துவத்துக்காக  முதல் நோபல் பரிசு  பெற்றவர்
எமில் டாலப் வான் பெங்ரிங்
ஜெர்மனி
கண்டுபிடிப்பு : சீரம் தெரபி
விருது ஆண்டு: 1901


மருத்துவத்துக்காக  நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
ஜெர்ட்டி கோரி
அமெரிக்கா  
கண்டுபிடிப்பு: கிளைக்கோஜன் குறித்த ஆய்வு
விருது ஆண்டு : 1947


மருத்துவத்துக்காக  மிகக் குறைந்த வயதில்  நோபல் பரிசு பெற்றவர்
பிரெடரிக் பாண்டிங்
கனடா
வயது :32  
கண்டுபிடிப்பு: இன்சுலின்
விருது ஆண்டு: 1923


மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்றஅதிக வயதானவர்
பெடன் ரூஸ்
அமெரிக்கா
87 வயது
கண்டுபிடிப்பு: வைரஸை தூண்டும் கட்டி குறித்த ஆய்வு
விருது ஆண்டு: 1966


இயற்பியலில் இதுவைரை நோபல் பரிசு பெற்றவர்கள்  107 பேர்.
அதில் பெண்கள் 2 பேர்  
இயற்பியலுக்காக 2 முறை நோபல் பரிசு பெற்றவர்   ஜான் பர்டீன்
மருத்துவத்துக்காக இதுவைரை நோபல் பரிசு பெற்றவர்கள்  105 பேர்
அதில்  பெண்கள்  10 பேர்
 

போய் வா தலைவா!


24 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் இணையற்ற நட்சத்திரமாக ஒளிர்ந்த  சச்சின் தெண்டுல்கர், விரைவில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போகிறார்.  அவரது பயணத்தின் சில தடங்கள்

துவங்கியது டென்னிஸ் பந்தில்

மும்பையின் முன்னணி கோச்  அச்ரேக்கரிடம் கிரிக்கெட் பயிற்சியில் குட்டிப்பையன்  சச்சினை சேர்த்துவிட அழைத்துச்சென்றார் அண்ணன் அஜித். பவ்யமாக கையைக் கட்டிக்கொண்டு பம்மிப் பம்மி நின்ற சச்சினிடம் அச்ரேக்கர் கேட்ட முதல் கேள்வி. ‘நீ கிரிக்கெட் பால்ல விளையாடிருக்கியா பையா?’

‘விளையாடியதில்லை சார். டென்னிஸ் பந்தில் மட்டும்தான் தெருவோரம் விளையாடியிருக்கேன்’ என்றான் குட்டிப்பையன். அவ்வளவுதான் போச்சு என அண்ணன் உள்ளுக்குள் உதறிக் கொண்டிருக்க
‘அப்படீனா நாளைலருந்து பயிற்சிக்கு வந்துடு’ என்றார் அச்ரேக்கர்.

அடுத்த நாள்...

அச்ரேக்கரை அசத்த வேண்டும், அதற்கு  எப்படியெல்லாம் ஷாட்கள் அடிக்க வேண்டும் என்று இரவெல்லாம் தூங்காமல் யோசித்துக்கொண்டிருந்தான் குட்டிப்பையன் சச்சின். முதன்முதலாக பயிற்சிக்குச் செல்லும்போது அண்ணன் அஜித்திடம் ‘அண்ணா! அச்ரேக்கர் சாருக்கு எந்த ஷாட் ரொம்பப் பிடிக்கும், நான் தூக்கி அடிக்கவா... ஸ்ட்ரைட்டா அடிக்கவா?’ எனக் கேட்டுக் கேட்டு ஒரே தொல்லை.

முதல் நாள் பயிற்சி தொடங்கியது. சச்சினால் சரியாக பேட் பண்ண முடியவில்லை. சச்சினுக்கு கண்ணீரே வந்துவிட்டது. அச்ரேக்கர், ‘இந்தப் பையன் சரியா வரமாட்டானு தோணுதேப்பா’ என்று அண்ணன் அஜித்திடம் தயங்கித் தயங்கிக் கூறினார்.

ஆனால் அண்ணன் அஜித்தோ, ‘சார்! நிச்சயமா அவன் நல்லா விளையாடுவான்.  ப்ளீஸ்!  அவனுக்கு இன்னொரு வாய்ப்புக் குடுங்க. ஏதோ பதட்டம் ப்ளீஸ் ப்ளீஸ்’ எனக் கெஞ்சினார். மீண்டும் சச்சினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இம்முறை பட்டையைக் கிளப்பினான் பையன். சச்சின் ஆடிய விதம் அச்ரேக்கருக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது. சச்சின், அச்ரேக்கரின் ஆஸ்தான சிஷ்யனானான்.

அதுவரை பொழுதுபோக்கு விஷயமாக இருந்த கிரிக்கெட், சச்சினுக்கு முழுநேர விஷயமாக மாறியது.

படிப்பா? பயிற்சியா?

தினமும் காலை ஆறு மணிமுதல் எட்டு வரை கிரிக்கெட் வலைப்பயிற்சி. பிறகு பள்ளி. மீண்டும் மூன்று முதல் ஏழு வரை பயிற்சி. பிஞ்சுக் கால்கள் சோர்வடைந்து எட்டு மணிக்கே உணவுகூட எடுத்துக்கொள்ளாமல் உறங்கிவிடுவான் சிறுவன் சச்சின். அதோடு தினமும் வெகுதூரத்தில் இருந்த பள்ளிக்குச் சென்று திரும்புவது வேறு பிரச்சினையாக இருந்தது. அது மட்டுமன்றி,  பயிற்சிபெறும் கிரிக்கெட் மைதானத்திலிருந்து பள்ளி வெகுதொலைவில் இருந்தது. எத்தனை அலைச்சல்?

அதனால் அப்போது படித்துக்கொண்டிருந்த பாந்த்ரா பள்ளியை விட்டு  சாராதாஷ்ரமம் பள்ளியில் சேரும் யோசனை தோன்றியது சச்சினுக்கு. சாராதாஷ்ரமம் பள்ளி, கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் பள்ளியாக வேறு இருந்தது. ஆனால் சச்சினின் தந்தை ரமேஷுக்கோ சச்சின் என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆகவேண்டும் என்பதே ஆசை. பாந்த்ரா பள்ளியே அதற்கேற்ற தரமான கல்வியை அளித்து வந்தது. கிரிக்கெட்டா, படிப்பா என்பதை சச்சினும் அவனுடைய தந்தையும் முடிவுசெய்ய வேண்டிய இக்கட்டான தருணம்.

தன்னுடைய ஆசையைவிட கிரிக்கெட் வீரனாக ஆகவேண்டும் என்கிற மகனுடைய கனவே அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அதனால் சச்சின் விருப்பப்படியே சாராதாஷ்ரமம் பள்ளியில் சேர ஏற்பாடு செய்தார். சிக்கல் அத்தோடு தீரவில்லை. சாராதாஷ்ரமம் பள்ளியோ சச்சினின் வீட்டிலிருந்து வெகுதொலைவில் இருந்தது. தினமும் அங்கே போய்வருவது சிரமம் என்பதால் அண்ணன் அஜித் ஒரு ஏற்பாடு பண்ணினார். சச்சின், பள்ளிக்கு அருகில் இருக்கிற மாமா ஒருவரின் வீட்டில் தங்கிப் படிப்பது. விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவது, இதன்மூலம் ஏரியா நண்பர்களோடு சேர்ந்து வெட்டித் தனமாக சுட்டித்தனம் பண்ணாமல் இருப்பான். அதோடு, கிரிக்கெட் மற்றும் படிப்பிலும் ஆர்வம் செலுத்துவான் என்பது அவருடைய திட்டம். அது ஒரு சரித்திரத்தின் ஆரம்பம்.

பட்டம் பணால்

பாகிஸ்தானில் விளையாட இருந்த பத்தொன்பது வயதுக்கு உட்பட் டோருக்கான அணியில் தானும் இடம்பெறுவோம் என்று ஆர்வமாகக் காத்திருந்தார் சச்சின். பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் அதே தேதியில் சச்சினுக்கு பத்தாம்வகுப்பு இறுதித் தேர்வும் நடைபெற இருந்தது. படிப்பா, விளையாட்டா என்று மீண்டும் ஒருமுறை முடிவெடுக்க வேண்டிய நிலை. என்னதான் மகன் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரனாக வரவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் தந்தை ரமேஷூக்கும் அம்மா ரஜினிக்கும் பையன் பரீட்சையை விட்டுவிட்டு பாகிஸ்தானில் போய் கிரிக்கெட் ஆடுவதில் விருப்பமில்லை. காரணம், கல்லூரிப்  பேராசிரியரான ரமேஷுக்கு தன்னுடைய மகன் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவன் என்கிற அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற பயம். குழப்பமான மனநிலையில் இருந்த அவர், இறுதியாக மகனுடைய விருப்பமே தன் விருப்பம் என்று சச்சின் பாகிஸ்தான் செல்ல  சம்மதித்தார். அந்தப் பத்தாம் வகுப்புத் தேர்வில் மற்ற எல்லாப் பாடங்களிலும் பாஸ் செய்த சச்சின், ஆங்கிலத் தேர்வில், ‘கோட்’ அடித்தார். பின் தனித் தேர்வராக எழுதி அதிலும் தேறினார். ஆனால்  இன்றுவரை அவரது அப்பாவின் ஆசையான பட்டப் படிப்பை முடிக்கவே இல்லை.

அப்பா,  ஆட்டோ கிராஃப் போடுங்க

மிகக் குறைந்த வயதில் (16) டெஸ்ட் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட வீரர் சச்சின். இதற்கான பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டி இருந்தபோது சச்சினால் கையெழுத்திட முடியாத சூழல். ஏனெனில், இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டுமென்றால் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஆனால் சச்சினுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான பாகிஸ்தான் சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் சச்சினுடைய அப்பா ரமேஷ்தான் கையெழுத்திட்டார்.

மூக்கு உடைந்தாலும்...

 1989-ஆம் ஆண்டு, சியால்கோட்டில் பாகிஸ்தானுடனான நான்காவது டெஸ்ட் போட்டி. இந்தியாவின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டுபோல சரிந்துகொண்டிருந்தது. ஆக்ரோஷமாக பந்து வீசிக்கொண்டிருந்தனர் புயல்வேகப் பந்துவீச்சாளர்களான இம்ரான்கான், வாக்கர் யூனுஸ் மற்றும் வாசிம் அக்ரம். ஸ்கோர் 38 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள். பரிதாப நிலை. 16 வயதுப் பையன் சச்சினும் கொஞ்சம் அனுபவம் வாய்ந்த நவ்ஜோத் சிங் சித்துவும் நிலைத்து நின்று ஆடி ஸ்கோரை 104-க்கு உயர்த்தினர். அந்த நேரத்தில் வக்கார் யூனிஸ் வீசிய பந்து, சச்சினின் முகத்தை பதம் பார்த்தது (அந்தக் காலத்தில் ஹெல்மெட்டில் முகத்தை மூடும் வலைக்கம்பி பயன்படுத்துவது அரிது). பலமான அடி. மூக்கிலிருந்து கொடகொடவென ரத்தம் கொட்டுகிறது. மைதானத்தில் அப்படியே தடுமாறி விழுகிறார் சச்சின். ஸ்ட்ரெச்சர் வந்தது. முதலுதவி அளிக்கப்பட்டது. ‘நீ பெவிலியனுக்குப் போ’ என்றார்கள் டாக்டர்கள். அணி தள்ளாடிக் கொண்டிருந்தாலும் கேப்டனாக இருந்த ஸ்ரீகாந்த்தும் அதையே கூறினார். ஆனால் சச்சின் மறுத்துவிட்டார். விளையாடியே தீருவேன் என்று,  ஒரு கர்ச்சீப்பை நனைத்து மூக்கில் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார்.  ‘ஐயாம் ஆல்ரைட் ஐகேன் ப்ளே’ என்று சொல்லிவிட்டு அடுத்த பந்தை எதிர்கொள்ள ஆயத்தமானார். வந்தது பந்து... மீண்டும் வாக்கார் யூனூஸ்... எதிரில் நிற்கும் சிறுவன் அடிபட்டதைக் கண்டும் அவருக்கு இரக்கம் தோன்றவில்லை. இரக்கப்படும் இடமும் நேரமும் அதுவல்ல. சீற்றம் குறையாமல் பாய்ந்து வந்தது பந்து.  அற்புதமான ஒரு ஸ்கொயர் ட்ரைவ். பவுண்ட்ரி! அடுத்த பந்து இம்முறை இலக்கணமாக எழுதி வைக்கப்பட வேண்டிய கவர் ட்ரைவ். இன்னொரு பவுண்ட்ரி... அதற்குப் பிறகு அற்புதமாக ஆடி 57 ரன்களை எடுத்துவிட்டுத்தான் அவுட்டானார் சச்சின்.

காதல் ரோஜா

அப்போது சச்சினுக்கு 19 வயது. சச்சினின் உருவமும் புகழும் அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகளை பெற்றுத் தந்திருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இளம் பெண்கள் ரகசியமாக இதயத்திற்குள் சச்சினை ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்த காலம்.

ஆனால் விழாவொன்றில் ஏதேச்சையாகப் பார்த்த அஞ்சலி மீது சச்சினுக்கு காதல் அரும்பியது. சச்சின் கல்லூரிப் படிப்பைக் காணாதவர். அஞ்சலி மும்பை மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அதுவும் போக. அஞ்சலிக்கு சச்சினைவிட நான்கு வயது அதிகம்! தேசம் முழுக்க தொலைக்காட்சியில் பார்த்த முகம் என்பதால் எங்கே போனாலும் யாராவது ஐந்து பேர் ஆட்டோகிராஃப் நோட்டை நீட்டிக்கொண்டு நிற்பார்கள். பிரைவசி என்பதே கிடையாது. இதில் எப்படி சந்தித்துக் கொள்வது? தலையில் தொப்பி போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் காதலியோடு வீட்டுக்குத் தெரியாமல், ‘ரோஜா’ படம் பார்த்ததை பேட்டிகளில் குறிப்பிடுகிறார் சச்சின். தொப்பி மட்டுமல்ல, கறுப்புக் கண்ணாடி, விக் என்று மாறுவேடங்கள் போட்டுக்கொண்டு அஞ்சலியைப் பார்க்கப் போவார். 1995-இல் இருவீட்டாரும் பச்சைச்கொடி காட்ட... 22 வயதேயான சச்சினுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

ஐஸ்கட்டிகளோடு ஆட்டம்

1999. சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான  டெஸ்ட் போட்டி. இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. சச்சின் மட்டும் தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் வீழ்ந்தால் ஆட்டம் குளோஸ். அந்த நேரம் பார்த்து பல நாட்களாக தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்த முதுகு வலி உச்சமடைகிறது. நிற்கக்கூட முடியவில்லை.

ஆனாலும் முதுகில் ஐஸ்கட்டிகளை கட்டிக்கொண்டு ஆட ஆரம்பித்தார். 273 பந்துகள், 407 நிமிடங்கள் தாக்குப்பிடித்து விளையாடி சதமடித்தார். சதமல்ல முக்கியம்,  இந்திய அணியை எப்படியாவது தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்கிற வேகமே அவரை வலியையும் பொறுத்துக்கொண்டு களத்தில் நிற்க வைத்தது. இறுதியில் வலி வென்றது. இந்தியா தோற்றது. ஒரு கட்டத்தில் தவறான ஷாட் அடித்து அவுட்ஆனார்.  சச்சினின் அர்ப்பணிப்பை பாகிஸ்தான் பத்திரிகைகளே பாராட்டின. இரண்டு முறை காயங்களால் அவதிப்பட்டபோதும் ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து மீண்டும் மீண்டும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் சச்சின்.

தந்தையா? தாய்நாடா?

 1999 மே மாதம். இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாம் உலகக் கோப்பையை வென்று 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்தியா மீண்டும் வெல்ல வேண்டும் என்று நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நேரம். அந்தப் பதினாறு ஆண்டு காலத்தில் மற்ற நாடுகளும் வலுவடைந்திருந்தன. குறிப்பாக ஸ்ரீலங்கா. தகுதிப் போட்டிகளிலேயே அழுத்தம் ஆரம்பித்து விட்டது. சச்சின் களம் இறங்க வேண்டிய வேளை.  சச்சினின் அப்பா ரமேஷ் டெண்டுல்கர்,  மும்பையில் ஹார்ட் அட்டாக்கில் காலமாகிவிட்டார் எனச் செய்தி வருகிறது. அவர் சச்சினுக்கு அப்பா மட்டுமல்ல, நண்பரும் கூட. சச்சினுடைய அப்பாவிற்கு கிரிக்கெட் மீது பெரிய ஆர்வம் கிடையாது. அவர் கவிஞர். ஆனாலும் தன் கனவுகளை முறித்துப் போடாமல் அதற்கு உரமிட்டு வளர்த்தவரின் நினைவுகளால் நெஞ்சம் கனமேற கண்ணீரை விழுங்கிக்கொண்டு ஆடுகிறார் சச்சின். காரணம், தேசத்தின் மானம் அவர் கைகளில். பத்து மணி நேரப் பயணத்திற்குப் பின் இந்தியா வருகிறார். பயணக் களைப்பு. துக்கம். விதவையாகிவிட்ட  தாயைப் பார்க்கும்போது மனம் ரணமாகிறது. வாய்விட்டு அழக்கூட முடியாமல் மீடியா துரத்துகிறது. அப்போது சச்சினுக்கு வயது 26.

இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்கிறார். அடுத்த போட்டி இரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது. இரண்டே நாட்கள் இருந்து விட்டு  அடுத்த போட்டியில் ஆட வந்து விடுகிறார். அந்தப் போட்டியில் இந்தியா எதிர்கொள்ள இருந்த அணி கென்யா. அப்படி ஒன்றும் வலுவான அணி அல்ல. ஆனால் தகுதிப் போட்டியில் ஒவ்வொரு வெற்றியும் முக்கியம். அப்பாவின் நினைவுகளோடு ஆடினார் சச்சின். அன்று அவர் எடுத்த ரன்கள் 140 (101 பந்துகளில்) .

அதைப் பற்றி பின்னாளில் சச்சின் ஒருமுறை சொன்னார்: ‘அம்மா சொன்னார்... போ, போய் விளையாடு. தாய் முக்கியம்தான். ஆனால் தாய்நாடு அதைவிடப் பெரிது. அதைவிட முக்கியம்’.

தேசம் பெரிது. அதை மறக்காத அந்தக் குள்ள மனிதன் உண்மையில் உயரமானவன்.

இவை வெறும் எண்கள் அல்ல;24 ஆண்டுகால உழைப்பு

50024    எல்லாவித உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அடித்த ரன்கள்
 
34273    எல்லாவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அடித்த ரன்கள்

18426    ஒருநாள்  போட்டிகளில் அடித்தவை (உலகிலேயே இதுதான் அதிகம்)
 
15837     டெஸ்ட் போட்டிகளில் அடித்த ரன்கள்

15310   ஒருநாள் போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அடித்த ரன்கள் (45 சதம் மற்றும் 75 அரைசதங்கள் இதில் அடங்கும்)
 
13408    டெஸ்ட் போட்டிகளில் 4-ஆவது ஆட்டக்காரராக களமிறங்கி விளாசியவை

  8705     வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அடித்தவை (உலகிலேயே அதிகம்)
 
  6707     ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே (ஒருநாள் மற்றும் டெஸ்ட்) அடித்த ரன்கள். சராசரி 49.68
 
  3113     இலங்கைக்கு எதிராக அடித்த ரன்கள்

  2278     உலகக் கோப்பை போட்டிகளில் குவித்த ரன்கள்

  1894     1998-ஆம் ஆண்டு மட்டுமே அடித்த ரன்களின் எண்ணிக்கை. இதுவரை ஒரே ஆண்டில் அடிக்கப்பட்டவற்றில் இதுவே அதிகம்

  1562     2010-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே   அடித்த ரன்கள்

    866     ஒருநாள் போட்டிகளில் சச்சினோடு விளையாடிய வீரர்களின் எண்ணிக்கை  (தன்னுடைய மற்றும் எதிரணி இரண்டும் சேர்த்து)
 
    673    2003 உலகக் கோப்பையில் குவித்த ரன்கள் (உலகக் கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச  ரன்கள் இதுவே)
 
    593    டெஸ்ட் போட்டிகளில் சச்சினோடு விளையாடிய வீரர்கள் எண்ணிக்கை (எதிரணி சேர்த்து)
 
    463     சச்சின் ஆடிய ஒருதினப் போட்டிகளின் எண்ணிக்கை

    264     சிக்ஸர்கள் எண்ணிக்கை

    185     ஏப்ரல் 1990 தொடங்கி ஏப்ரல் 1998 வரை ஓய்வின்றி தொடர்ச்சியாக கலந்துகொண்ட ஒருதினப்  போட்டிகளின் எண்ணிக்கை

    118     டெஸ்ட் போட்டிகளில் அடித்த 50 ப்ளஸ் ஸ்கோர்கள் (உலக சாதனை)
 
    100     அடித்த சதங்கள்

      96     ஒருதினப் போட்டிகளுக்காக ஆடிய மைதானங்களின் எண்ணிக்கை

      70     சச்சின் விளையாட இந்தியா வென்ற டெஸ்ட் வெற்றிகள்

      62     ஒருநாள் போட்டிகளில் பெற்ற ஆட்டநாயகன் விருதுகள்

      51     டெஸ்ட்போட்டிகளில் அடித்த சதங்கள்

      49     ஒரு நாள் போட்டிகளில் அடித்த சதங்கள்

      15     ஒரு நாள் போட்டிகளில் வென்ற தொடர் நாயகன் விருதுகள்
 
      14     டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஆட்ட நாயகன் விருதுகள்

      14     ஆஸ்திரேலியாவின் ப்ரெட்லீ சச்சினை அவுட்டாகியதன் எண்ணிக்கை

        7     நாடுகளுக்கு எதிராக சச்சின் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்

        6     முறை சிக்ஸ்ர்கள் அடித்து தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்துள்ளார்

        6     முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருமுறை வெற்றி.
 
        5     முறை ஒரு நாள் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்

        3     முறை 99 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்

        2     சதங்களாவது எல்லா டெஸ்ட் அந்தஸ்து பெற்ற எல்லா நாடுகளுடனும் அடித்துள்ளார்
 
        1     ஒரு நாள் போட்டிகளில் சதமடித்த முதல் வீரர்

       1     ரஞ்சிப் போட்டி, துலிப்ட் ராபி,ஈரானி டிராபி என மூன்றிலும் தன் முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை புரிந்தவர்

        0     தன்னுடைய  முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் எடுத்த ரன்கள்!