Search This Blog

Monday 14 October 2013

கதவு எங்க போச்சு! நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் பரபரப்பு!

அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தின் கதவு திடீரென கழன்று விழுந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டரி விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது. 


இதையடுத்து திரும்பி பார்த்த விமானி விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார். 


விமானத்தை தாழ்வாக பறக்க செய்து கதவு எங்கே விழுந்திருக்கிறது என்று தேடினார். 


இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். 


இந்நிலையில், அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் தன்னுடைய ஹோட்டல் மீது விமானத்தின் கதவு விழுந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தார். 


எனினும் இந்த சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை சரியில்லாதபோது ஒதுக்க வேண்டிய உணவுகள்!

விடுமுறை நேரம், ஓய்வு நேரம் போன்ற நேரங்களில் நமக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்தோ அல்லது வெளியில் வாங்கியோ தருவார்கள்.நாமும் வஞ்சனை இல்லாமல் அனைத்தையும் ஒரு கட்டு கட்டுவோம். அதனால் பெரும்பாலும் இக்காலத்தில் அடிக்கடி வந்து போகும் சளியும், காய்ச்சலும் உங்களை பிடித்து கொள்ளும் காலம் இது.


இந்த சளியை போக்க பூண்டு, இஞ்சி, நீர் சேர்த்தல் என பல இயற்கை சிகிச்சைகள் இருக்கத் தான் செய்கிறது.


இருப்பினும் எந்த உணவு வகையை தவிர்த்தால் இப்படி நோய்வாய் படாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டால் இவ்வகை உணவுகளை கண்டுபிடித்து அவைகளை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் உணவுகளை உட்கொண்டு வந்தால் வெகு விரைவிலேயே குணம் அடையலாம்.


சாதாரண நேரத்தை விட நோய்வாய் பட்டிருக்கும் போது இதனை தவிர்க்க சொல்வதால் அந்நேரத்தில் அதனை சுவைக்க அதிக ஆவல் ஏற்படுவது மனித இயல்பு தான்.


ஆனால் நாவை கட்டுப்படுத்தி தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்தால் தான், சீக்கிரமே குணம் அடைய முடியும். சரி, இப்போது நோய்வாய்பட்டிருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று பார்ப்போம்.


இனிப்புகள்

நோய்வாய் பட்டிருக்கும் காலத்தில் கண்டிப்பாக சாக்லெட் அல்லது பிஸ்கட்களை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் இனிப்புகளில் அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. இது செரிமான அமைப்பில் இறுக்கத்தை ஏற்படுத்தும். சில நேரம் டெசெர்ட் கூட நோய்வாய் படச் செய்யும்.

பதப்படுத்திய இறைச்சி

பதப்படுத்திய இறைச்சி என்றால் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியாகும். இதனை உப்புக்கண்டம் என்று நாம் சொல்வோம்.

இப்படி உப்புக்கண்டம் செய்யப்பட்ட இறைச்சியில் உள்ள நைட்ரேட்ஸ் நைட்ரைட்ஸாக மாறிவிடும். இது புற்றுநோய் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். மேலும் நோய்வாய் பட்டிருக்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நேரத்தில் இந்த நைட்ரைட்ஸின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் 

ஆரோக்கியத்தை புதுப்பிக்க ஆரஞ்சு ஜூஸ் பெரிதும் உதவுகிறது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் நுண் ஊட்டப்பொருள் இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் அதனை ஜூஸாக மாற்றும் போது, சோடாவை போல அதிலும் அதிக அளவில் சர்க்கரை வந்துவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. நோய்வாய் பட்டிருக்கும் போது இனிப்புகளை போல சர்க்கரையும் தவிர்க்க வேண்டும். மேலும் இந்நேரத்தில் ஆரஞ்சில் உள்ள அமிலமும் வயிற்றை பாதிக்கலாம்.

நட்ஸ்

நோய்வாய் பட்டிருக்கும் போது பல வகையான நட்ஸ்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வேர்க்கடலைப் பருப்புகள் அளவுக்கு அதிகமான சளியை உண்டாக்கிவிடும்.

ஏற்கனவே சளியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது, இது கூடுதல் அவஸ்தையாக மாறிவிடலாம் அல்லவா? மேலும் நட்ஸ் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மாட்டிறைச்சி

நட்ஸை போலவே மாட்டிறைச்சியும் உடலை பாதிக்கும். சளி இருக்கும் போது பர்கர் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படியானால் சளியானது, மூக்கு மற்றும் நெஞ்சை விட்டு செல்ல மனமில்லாமல் இன்னும் தங்கிவிடும்.
மேலும் மாட்டிறைச்சியில் கெட்டியான கொழுப்பு இருப்பதால், அதனை கரைத்து செரிமானம் செய்வதற்கு, உடல் சிரமப்படும். உடல்நலம் சரியில்லாத போது, உடல் ஏற்கனவே கடினமாக உழைத்து கொண்டிருக்கும். இந்நேரத்தில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

மதுபானம்

மதுபானம் என்பது இரசாயன மூளைத்திறன் குறைப்பு மருந்து. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உண்ணும் அனைத்து மருந்தையும் செயலிழக்க செய்துவிடும். மேலும் பல மதுபானம் அமிலத்தன்மை கொண்டவையாகும். இது வயிற்றையும் பாதிப்படையச் செய்யும்.

காப்ஃபைன்

செரிமானத்திற்காக காப்ஃபைனை உடைத்தெறியவும் உடல் கஷ்டப்படும். சோடா, காபி மற்றும் சாக்லெட் உட்கொள்ளுதலை குறைத்துக் கொண்டால், உடல் விரைவிலேயே குணமடையும். காப்ஃபைன் கலந்த பொருட்களில் சர்க்கரையும் கலந்துள்ளதால், கண்டிப்பாக அவைகளை தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகள்

நோய்வாய் பட்டிருக்கும் போது, உங்களுக்கு காரசாரமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. ஆனால் அதையும் மீறி, அதனை உட்கொண்டால் சளி இன்னும் மோசமடையத் தான் செய்யும். அதிலும் சளி இருக்கும் போது, வாய்வு அல்லது வயிற்று பிரச்சனை இருந்தாலே ஒழிய அவைகளை எடுத்துக் கொள்ள கூடாது.

பச்சை உணவுகள்

உடல்நிலை முன்னேறுவதற்கு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நல்ல யோசனையாகத் தான் தோன்றும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அந்த காய்கறிகள் சமைக்கப்பட்டிருக்க வேண்டும். காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொண்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். இதனால் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும்.

பால் பொருட்கள்

பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் தான் அதிக அளவிலான கொழுப்புகள் உள்ளது. அதனால் அவை செரிமானத்திற்கு கஷ்டத்தை தருவதோடு நிற்காமல், நோய்வாய் பட்டிருக்கும் சிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்திவிடும்.


எல்.ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தும் வளைமேற்பரப்பினைக் கொண்ட G-Flex!

எல்.ஜி நிறுவனமானது வளைந்த மேற்பரப்பினை உடைய தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்துகின்றது.


6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 0.44 மில்லி மீற்றர்கள் தடிப்பையும், 7.2 கிராம் நிறையையும் கொண்டதாகக் காணப்படுகின்றன. 


இதற்கிடையில் சம்சுங் நிறுவனமும் தனது வளைந்த மேற்பரப்பினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது என்று தெரியுமா?

கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம்(Operating System) என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.


நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான எம்.எஸ். ஆபீஸ்(M.S.Office), பேஜ்மேக்கர்(Pagemaker), கோரல் டிரா(Corel Draw), ஆட்டோகேட்(Autocat) போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.


ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.


கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம்(Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை

1. உள்ளீடு/வெளியீடு(Input/ Output).

2. நினைவக(Memory) மேலாண்மை.

3. பணி(Task) மேலாண்மை.

4. பைல்(File) மேலாண்மை.


கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே.
எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.


உங்கள் கணினியில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும்.
நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.


பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும்.   இதனை Multitask என அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. 



ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம்(CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.


நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள்கிறது.


பைலைச் சேமிக்கும் பொழுது அதன் நேரம், தேதி ஆகியவற்றைக் குறிக்கிறது. பைலைப் படிக்க/மட்டும்(Read only), மறைக்க(Hidden), சிஸ்டம் என்ற பண்புகளை(Attributes) பைல்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்கொள்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. 


படிக்க/மட்டும் என ஒதுக்கிய பைலில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு பைலைச் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேலை தான்.

நம்பினார் கெடுவதில்லை (நீதிக்கதை )!


கந்தனின் தந்தையிடம் நூறு ஆடுகள் இருந்தன.தினமும் காலையில் அவர் அவற்றை மேய்க்க ஓட்டிக்கொண்டு காட்டிற்கு செல்வார்.....  மாலை ஆறு மணிக்கு பிறகு அவற்றை திரும்ப வீட்டிற்கு ஓட்டி வந்துவிடுவார்.


 அப்படி செல்கையில் ஒரு நாள் மாலை மேய்ந்துவிட்டு வந்ததும் அவற்றை பட்டியலில் அடைக்கு முன் எண்ணிப் பார்த்தார்.  99 ஆடுகளே இருந்தன.ஒரு ஆடு குறைந்தது.


எல்லா ஆடுகளையும் அடைத்துவிட்டு காணாமல் போன அந்த ஒரு ஆட்டைத் தேடி மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றார்
.கந்தனின் தாயோ ' இரவு நேரத்தில் காட்டிற்குள் செல்லவேண்டாம்...ஒரு ஆடு தானே காணும் .... பரவாயில்லை... மீதி 99 ஆடுகள் இருக்கிறதே என்றாள்.'


 ஆனாலும் கந்தனின் தந்தை அந்த ஒரு ஆட்டைத் தேடிச் சென்றார்.  காட்டிலும் மேட்டிலும் அந்த ஆட்டைத் தேடினார்.நீண்ட நேரத்திற்கு பின் ஒரு பாறையின் உச்சியில் கீழே இறங்க வழி தெரியாது அந்த ஆடு திணறிக்கொண்டிருப்பதை பார்த்தார்.


மெல்ல அந்த ஆட்டை பிடித்துக்கொண்டு திரும்பினார. அந்த ஆடு நன்றியுடன் அவரைப் பார்த்தது.அதன் கண்களில் கண்ணீர் நன்றிப் பெருக்கில். பின் அவர் கந்தனின் தாயிடம்..".  

நீ ஒரு ஆடு தானே .... தேடப் போகவேண்டாம் என்றாய்...  நான் அப்படிச் செல்லாதிருந்தால் இந்த ஒரு ஆட்டை இழந்திருப்போம்..". என்றார்.
 


கந்தனும் ...'.. ஆமாம் அம்மா' என்றான்.


மேலும் அவனது தந்தைக் கூறினார்,  'எண்ணிக்கை முக்கியமில்லை.. காணாமல் போன அந்த ஆடும் என்னை நம்பியே மேய வந்தது.என்னை நம்பி வந்தது வழிதவறி தடுமாறி..திரும்பமுடியவில்லை.ஆயினும் நம்பிய அதை காக்க வேண்டியது என் கடமை.இது ஆட்டிற்கு மட்டுமல்ல.. அனைவருக்குமே பொருந்தும்.  


நம்மை நம்பியவரை நாம் என்றும் கைவிடக்கூடாது.'

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை - 3...!

பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம். ஒரு வித்தியாசமான உலக வரைபடம், இதில் இந்தியா, ஆப்ரிக்கா, அரேபியா, ஐரோப்பா போன்ற நாடுகளின் அமைவிடங்களை காணலாம். நவீன உலக வரைபடங்களை பார்த்த நமக்கு இந்த வரைபடம் சற்று நகைச்சுவையாக தான் தெரியும்.




 

துருக்கியர்களால் பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது போன்று இது வரையப்பட்டிருகிறது




 


                       கி.பி 1040 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்




 

Isidorean mappamundi,11th century 

 

 

Y-O map, from Macrobius' Commentarium in somnium, 11th century.

 

 

 

T-O map, from 11th century MS. edition of Beatus' Commentary

 

 

St. Sever world map after Beatus, 1030 A.D.

 

 

al-Biruni world map of the distribution of land and sea, 1029 A.D.

 

 

Ibn al-Wardi world map, 1001 A.D.

 


பன்னிரெண்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:




 


                                  கி பி 1192 இல் வரையப்பட்ட உலக வரைபடம்




 


      12 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆசிய கண்டத்தின் வரைபடம்


 

             ஜெர்மானியர்களால் கி.பி 1190 இல் வரையப்பட்ட உலக வரைபடம்




 
இத்தாலியர்களால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் 
 


Abu Abd Allah Muhammad al-Idrisi என்னும் அரபியரால் கி பி 1154 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம் 
 

Macrobian World Map from a French MS, 12th century

 

 

Map of Jerusalem, 12th century

 

 

Beatus world map, London copy, 1109 A.D.

 

 

Beatus world map, Turin copy, 1150 A. D.

 

 

Beatus world map, Altamira copy, 12 th century.
(oriented with East at the top)

 

 

zonal world map, Lambert of St. Omer, Martianus Capella,Ghent copy,1120 A.D.

 



[Map of China and the Barbarian Countries]
.1137 A.D.

தொடரும்...

நாகப்பட்டினம் மாவட்டத்தின் வரலாறு!



சோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு இந்தப் பட்டினத்துக்கு உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.


நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகபட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.



கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.



நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது 'நாவல் பட்டிணம்' -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.

பொருளாதாரத்துக்கான நோபல்பரிசு : 3 பேர் அறிவிப்பு!



2013-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் கூட்டாக பெறுகின்றனர். யூஜின் பாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென், மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். சொத்துமதிப்பை நிர்ணயிக்கும் கொள்கையை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நோபல் பரிசு ஸ்விடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இருந்து அறிவிக்கப்பட்டது.

வெற்றித்திருநகர் ஹம்பி - சுற்றுலாத்தலங்கள்!

    வெற்றித்திருநகர் ஹம்பி
ர்நாடக மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமம் ஹம்பி. விஜயநகரப்பேரரசின் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் ஓர் அங்கம். பிரசித்தி பெற்ற சிவாலயமான விரூபாக்ஷா கோவில், ஹம்பியின் இன்னொரு அடையாளம். இன்னும் பல அடையாளச் சின்னங்கள் ஹம்பியில் உண்டு.
ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள குரங்குகளின் ராஜ்ஜியமான கிஷ்கிந்தாவுக்கும் ஹம்பிக்கும் தொடர்பு உண்டாம். ஹம்பியில் மக்கள் குடியேற்றம் கி.பி.முதலாம் ஆண்டில் தொடங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் ஹம்பியில் பெரிய கட்டிடங்கள், பிரம்மாண்டமான விக்ரகங்கள் எழுப்பப்பட்டன. தொலைதூரத்தில் இருந்து பார்த்தாலும் அவற்றைக் காணமுடியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இப்போது இல்லை.
 
ஹம்பியின் தெய்வீக அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் விரூபாக்ஷா கோவில் மிகவும் பழமையானது. மூன்று கோபுரங்களைக் கொண்டது. கோவிலை சீரமைத்து மண்டபம் கட்டியவர் கிருஷ்ணதேவராயர். விஜயநகர மன்னர்களின் குலதெய்வம் விரூபாக்ஷர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹம்பியில் உள்ள விட்டல் கோவிலும் கிருஷ்ணதேவராயர் கட்டியதே. கலைநுணுக்கத்துடன் கூடிய சிற்பங்கள் இங்குள்ளன. இதே போல கோதண்டராமர் கோவில், தாமரை கோவில் போன்றவையும் சிறப்பு வாய்ந்தது. ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
 
எப்போது போகலாம்? எப்படிப் போகலாம்?
 
ஹம்பியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கர்நாடக அரசு சார்பில் விஜயநகர விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அக்டோபர் - மார்ச் மாதங்கள் வரை சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் ஹம்பி அமைந்துள்ளது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவின் முக்கிய நகரங்களான ஹாசன்,  மைசூர் போன்ற இடங்களில் இருந்தும் ஹம்பிக்கு நல்ல சாலைவசதி இருக்கிறது. ஹம்பியில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவில் உள்ள ஹோஸ்பேட் வரை ரயில்வசதி உண்டு. பெங்களூருவில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.