Search This Blog

Thursday 31 October 2013

இந்திய விஞ்ஞானியின் புது கண்டுபிடிப்பு!

India 
 
 
விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன.


விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஆல்பர்ட் ஈன்ஸ்டின் புவிஈர்ப்பு கோட்பாட்டுக்கும் இந்த கருங்குழிகளுக்கும் ஒரு வகையில் இயற்பியல் ரீதியாக ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று இந்தியா உட்பட பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.


கருங்குழி பற்றி முதன் முதலில் உண்மைகளை கண்டுபிடித்து சொன்னவரே, நம் நாட்டு தமிழ் விஞ்ஞானி சந்திரசேகர் தான். அதற்காகவே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இறந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, கருங்குழியாகவோ ஆகி விடும் என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் இவர். இதனால் இந்த கண்டுபிடிப்புக்கு சந்திரசேகர் லிமிட் என்றும் பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில், கருங்குழி பற்றிய மர்மம் நீடித்து வருகிறது.


இந்த குழிகள் சிறியது தானா, அதன் ஆழம் என்ன, அதன் ஈர்ப்பு சக்தி என்ன? ஒலி, ஒளியை தன்னுள் விழுங்கும் போது நடப்பது என்ன? பல சூரியன்கள் ஒளியை கொண்டது என்பது சரியா? என்பது பற்றி எல்லாம் மர்மம் நீடிக்கிறது. சாதாரண கண்களுக்கு இந்த கருங்குழி தெரியாது. டெலஸ்கோப் மூலமும் கண்டுபிடிப்பது சிரமம் தான். நுணுக்கமாக ஆராய்ந்தால் பால்வெளியில் ஏதோ கரும்புள்ளி போல தான் தெரியுமாம். பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள பானிப்ரத்தா முகோபாத்யை இந்த கருங்குழி ஆய்வில் புதிய உண்மையை கண்டுபிடித்துள்ளார்.


இரண்டு ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில், அண்டவெளியில் உருவாகும் கருங்குழி தன்னை சுற்றிய ஒலி, ஒளி மற்றும் நட்சத்திர துகள்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி படைத்தது. இது மட்டுமின்றி, இதை சுற்றிய சுழற்சி, நட்சத்திர எரி துகள்கள் போன்ற பொருட்கள் ஆகியவற்றை வைத்து குழியின் ஆழம், சுழற்சி வேகத்தை கணக்கிடலாம். மேலும், குழியை சுற்றிய சுழற்சி வலை மற்றும் பொருட்கள் தனியாக இயங்குவதில்லை.


ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பது தான் பானிப்ரத்தாவின் கண்டுபிடிப்பு. இந்த கண்டுபிடிப்பு மூலம், கருங்குழி பற்றிய ஆராய்ச்சிகளில் புதிய தெளிவு கிடைத்துள்ளதாக அமெரிக்க, பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர். ‘நட்சத்திரங்கள் எப்படி நொறுங்கி அழிகின்றன, கருங்குழியாகின்றன என்பதற்கு இந்த ஆராய்ச்சி உதவும்’ என்று விஞ்ஞானி பானிப்ரத்தாவுக்கு உதவியாக இருந்த ஆராய்ச்சி மாணவி இந்திராணி பானர்ஜி கூறினார்.

 
அதென்ன கருங்குழி?

* பூமி, சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்தது தான் இந்த அண்டவெளி.

* விண்ணில் பரந்து கிடக்கும் பால்வெளியில் உள்ளது தான் சூரியன், நிலா, நட்சத்திரங்கள்.

*இந்த நட்சத்திரங்கள் தன்னுள் உள்ள அணு எரிசக்தியை இழக்கும் போது ‘இறந்ததாக’ கருதப்படுகின்றன.

* அப்படி இறந்த பின் அவை என்னவாகின்றன என்பது மர்மமாக இருந்தது.

* அவை, கருங்குழியாகிவிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

* கருங்குழி ஈர்ப்பு சக்தி கொண்டது. தன்னை சுற்றிய பொருட்களை ஈர்த்துக்கொள்ளும்.

* சுழலும் அணு துகள்கள், பொருட்கள் வேகம் பற்றிய ஆய்வு தொடர்ந்து மர்மமானது.

* கருங்குழி மர்ம முடிச்சுகள் தொடர்ந்து அவிழ்ந்த வண்ணம் உள்ளது.

' பெருக்கத்து வேண்டும் பணிவு ' (நீதிக்கதை)



மோகன் நன்கு படிக்கும் மாணவன்.

அவன் வகுப்பில் அனைத்து தேர்வுகளிலும் First Rank வாங்கி வந்தான்.அதனால் அவனுக்கு சற்று கர்வம் இருந்து வந்தது.
சக மாணவர்களிடம் பழகும்போதும் கர்வத்துடனேயே பழகி வந்தான்.

அரையாண்டு தேர்வு வர இருந்தது...
மோகனின் பள்ளி ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் 'எல்லோரும் நன்கு படித்து ......மோகனைப்போல முதல் மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

அதனால் மோகனுக்கு தலைக்கனம் அதிகமாகியது.

கர்வமும் ...தலைக்கனமும் சேர அவன் தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை.

தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது ....அவனது ரேங்க் 20 ஐ தாண்டியது.

ஆசிரியர் ...அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது.....இந்த தடவை முதல் ரேங்க் எடுத்த சீனு சொன்னான்.
'சார்...நீங்கள் எப்போதும் மோகனைப் புகழ்வதால் ...அவனைப்போல வரவேண்டும் என நாங்கள் கஷ்டப்பட்டு படித்தோம்.ஆனால் அந்தப் புகழ்ச்சியால் கர்வம் அதிகமாக
மோகன் கவனம் படிப்பில் செல்லவில்லை' என்றான்.

சீனு கூறியதில் இருந்த உண்மையை உண்ர்ந்த ஆசிரியர் ...'மோகன் நாம் எந்த நிலையிலும் கர்வம் கொள்ளக்கூடாது...புகழ்ச்சி ஒருவனை மேலும் முன்னேறவிடாமல் தடுக்கும்...'என்றார் .மேலும் 'நான் உன்னை புகழ்ந்ததை உன்னை மேலும் ஊக்கிவிக்கத்தான் என்பதை உணர்ந்து கொள்' ' என்றார்.

ஆசிரியர் கூறியதை மோகனும் உணர்ந்து கொண்டான்.

நாமும் எப்போதும் நமக்கு ஈடு யாருமில்லையென்று கர்வமோ அகம்பாவமோ கொள்ளக்கூடாது.நம்மை விட வல்லவர்கள் எல்லா துறையிலும் உண்டு என்று எண்ணவேண்டும்.

மழைக்காலத்தில் வெள்ளிப் பொருட்களை பாதுகாக்க!

கௌரவப் பொருட்களாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மேல் ஆசை கொள்ளாதவர்களே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தான் வசதிகேற்ப தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். முக்கியமாக சிலர் வெள்ளி பொருட்களை அன்றாடம் பயன்படுத்தக் கூட செய்கிறார்கள். தகதகவென்று மின்னும் வெள்ளி பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் மீது தீராத காதல் உண்டா? அதனால் வீட்டில் பல வெள்ளி பொருட்களை வாங்கி குவித்திருக்கிறீர்களா? அப்படியானால் மழைக்காலத்தில் ஈரப்பதத்தினால் அவைகள் பாதிப்புக்குள்ளாகும் என்ற கவலை இருக்கிறதா? முதலில் அதை விட்டொழியுங்கள்.

விலை உயர்ந்த பொருட்களுக்கு எந்த ஒரு தேய்மானமும் வந்துவிடாது. மழைக்காலத்தில் எப்போதும் இருப்பதை விட காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், வெள்ளி பொருட்கள் ஜொலிப்பு நீங்கி, பாதுகாப்பதற்கு சிரமமாக இருக்கும். ஆனால் உரிய நடவடிக்கை மேற்கொண்டால், மழைக்காலத்தில் கூட வெள்ளி பொருட்களை மின்னச் செய்யலாம். பிரஷாந்த் சரவ்கி என்ற வல்லுநர், வெள்ளி பொருட்களின் மீது ஏற்படும் பழுதை தடுக்க சில டிப்ஸ்களை அளித்துள்ளார். மேலும் மழைக்காலத்தில் வெள்ளி பொருட்களை பாதுகாக்கவும் வழிமுறைகளை கூறியுள்ளார்.
 
 
கறை படியாமல் பாதுகாப்பது:


காற்றில் உள்ள சல்ஃபர் வெள்ளிப் பொருட்களோடு கலக்கும் போது, அந்த பொருட்கள் மீது கண்டிப்பாக கறை படியும். ஆகவே வெள்ளிப் பொருட்களை பத்திரமாக உள்ளே வைத்து பாதுகாக்காமல், அன்றாட தேவைகளுக்காக உபயோகப்படுத்த ஆரம்பித்தால், அதன் மேல் சல்ஃபர் சல்பேட் கண்டிப்பாக பதிந்திருக்கும். வெள்ளியில் அலங்கார பொருட்கள் இருந்தால், அதனை ஒரு மெல்லிய துணியை கொண்டு மறக்காமல் தினமும் துடைத்து எடுத்தால், விரைவில் கறை படிவதை தடுக்கும்.

வெள்ளி பொருட்களை துடைப்பது:

அதிக கறை படிந்த வெள்ளி பொருட்களை நுரை, தெளிப்பான்கள் அல்லது திரவ பேஸ்ட் வடிவில் உள்ள வெள்ளி பாலிஷ்கள் ஆகிவைகளை பயன்படுத்தி துடைக்கலாம். சில்வர் டிப்பும் நல்ல பலனை கொடுக்கும். அடர்த்தியான் கறை படிந்த வெள்ளி பாத்திரங்களை சிறிதளவு வாஷிங் சோடாவில் தண்ணீர் கலந்து கழுவலாம்.

துளைகள் கொண்ட வெள்ளிப் பொருட்களை துணிகளை கொண்டு துடைக்கக்கூடாது. அப்படி துடைத்தால் நுனியில் துணி மாட்டி கொண்டு கிழிந்துவிடும். எனவே மெதுவான ஒரு பிரஷை பயன்படுத்தியும் வெள்ளிப் பொருட்களை துடைக்கலாம். வெள்ளி பொருட்களை கழுவ டிஷ் வாஷர்யும் பயன்படுத்தலாம். ஆனால் அப்படி செய்யும் போது, அதிக கவனம் தேவை. மேலும் மற்ற ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களோடு சேர்த்து, இதனை டிஷ் வாஷரில் போட கூடாது.

குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்!


 1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

usb மூலம் உங்கள் கணணியை லாக் செய்ய

PenDriverGrande1

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம். பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதையே சாவியாக பயன்படுத்த முடியும்.


இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் (Predator). இது முற்றிலும் இலவசமான புரோகிராம். இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும்.
மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied )அதிலிருந்து எடுத்துவிட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாது?


இந்த புரோகிராமை பயன்படுத்தி உங்களுடை பிளாஷ் டிரைவை எப்படி கம்ப்யூட்டர் திறவுகோலாகப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


1. Predator என்று கூகிளில் தேடி இந்த புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.


2. பிரிடேட்டர் மென்பொருள் இயங்கத்தொடங்கியவுடன், உங்களுடைய பென்டிரைவை கம்ப்யூட்டரில் இணைக்கவும்.


3. இணைத்தவுடன் ஒரு டயலாக்ஸ் பாக்ஸ் கிடைக்கும். பாஸ்வேர்ட் அமைத்திட கேட்கும். OK கொடுக்கவும்.


4. அடுத்து Preferences என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் New Password என்றிருப்பதில் நீங்கள் மட்டும் தெரிந்துகொள்ளக்கூடிய வித்தியாசமான பாஸ்வேர்ட் ஒன்றை கொடுக்கவும்.


5. அடுத்துள்ள ஆல்வேஸ் ரெக்கொயர்ட் (Always Required) என்ற வாசகம் உள்ளதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். (இந்த செட்டிங்கானது நீங்கள் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் பிளாஷ் டிரைவை செருகும்போதும் கம்ப்யூட்டர் பாஸ்வேர்ட் கேட்பதற்காக.)


6. அடுத்துள்ள ஃப்ளாஸ் டிரைவ் என்ற பிரிவில் உங்களுடைய பிளாஸ் டிரைவினைத் தேர்ந்தெடுக்கவும்.


7. இறுதியாக கிரியேட் கீ — Create key என்பதை அழுத்தி ஓ.கே கொடுத்து வெறியேறவும்.


அவ்வளவுதான் முடிந்தது. பிரிகேட்டர் புரோகிராமினை நீங்கள் சரியாக செட் செய்துவிட்டீர்கள். இப்பொழுது டாஸ்க் பாரில் பார்த்தால் பிரிகேட்டர் புரோகிராமின் ஐகான் இருக்கும். அதை அழுத்தினால் ஒரு சில வினாடிகளில் அந்த ஐகான் ஆனது பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பிக்கும். பச்சை நிறமாக மாறியதும் பிரிகேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கிவிட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.


30 வினாடிகளுக்கு ஒரு முறை பிரிகேட்டர் புரோகிராம் ஃப்ளாஷ் டிரைவ் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடும். இணைப்படவில்லை என்றால் உங்களுடைய கம்ப்யூட்டரின் திரையின் வெளிச்சம் குறைந்து இயக்கம் நின்றுவிடும். இப்புரோகிராமின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த டாஸ்க் பாரில் பாஸ் மானிட்டரிங் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


உங்கள் Computer log செய்து இருக்கும்போது யாராவது பயன்படுத்த முயற்சி செய்தால் அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குகையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள வியூ லாக் (View Log) மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் பணிபுரிந்து முடிக்கும் வரை பென்டிரைவயும் USB Port -ல் இணைந்திருக்க வேண்டும்.


இதற்காகவே ஒரு USB Drive வை நீங்கள் தனியாக பயன்படுத்த வேண்டும். அந்த யூ.எஸ்.பி. டிரைவ்தான் உங்கள் கம்ப்யூட்டருக்கு சாவி.
ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரை இயக்க விட்டு, இந்த சாவியை செருகினால்தான் கம்ப்யூட்டர் திறக்கும்.


ஒன்றுக்கும் மேற்பட்ட USB Port-கள் உங்கள் கணினியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சாவி செருகியிருக்கும்போது வேறு ஏதேனும் யூ.எஸ்.பி. டிரைவில் பைல் சேமிக்க வேண்டுமெனில் மாற்று யூ.எஸ்.பி போர்ட் கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும்.



முக்கியமான குறிப்பு: பிரிகேட்டர் புரோகிராம் மூலம் செட் செய்த யூஸ்.எஸ்.பி டிரைவை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கினால் உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிடும் என்பதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…!

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்..!

celkon-launched-new-budget-mobile-for-rs-3999-in-india 
 
செல்கான் மொபைல் நிறுவனம் புதிய செல்கான் ஆண்ட்ராய்ட் மொபைலை வெளியிட்டுள்ளது. சிறப்பு மிக்க இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் ரூபாய் 3,999 க்கு இன்று முதல் கிடைக்கும் என அறிவித்துள்ளது செல்கான் நிறுவனம்.

Celkon Campus A15 என்ற பெயருடைய இந்த மொபைலானது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஆகும். இதில் அடங்கியுள்ள சிறப்பு வசதிகளைப் பார்ப்போம்.

3.5 அங்குல HVGA திரையுடன் உள்ள இப்போன் Android 4.2.2 இயங்குதளத்தில் இயங்குகிறது.

இப்போனை இயக்கும் சிறந்த செயலியாக 1GHz dual core processor அமைந்துள்ளது.

நிழல்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க 3.2 MP rear Camera அமைந்துள்ளது.
1400 mAh battery ஆனது போன் இயங்கப் போதுமான மின்சக்தியைக்கொடுகிறது.
Dual SIM வசதியுடன் கூடிய 2G Connectivity அமைந்துள்ளன.

மேலும் இதில் 256 MB RAM, உள்ளக நினைவகம் 512MB, மைக்ரோ எஸ்டி கார்ட் பயன்படுத்தும் வசதி, வைஃபை (Wi-Fi), புளூடூத் (Blue tooth), மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் (Micro USB Port) ஆகியனவும் அமைந்துள்ளன.


இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் ரீடெய்லர் ஸ்டோர்களிலும் இந்த செல்கான் பட்ஜெட் ஸ்மார்ட் போன் கிடைக்கும்.

****************************

Celkon Campus A15 runs on Android 4.2.2 and is powered by 1GHz dual-core processor.

The phone also comes with 3.5-inch HVGA display, 3.2MP rear camera, 1400 mAh battery, dual-SIM support and 2G connectivity.
A15 also packs 256MB of RAM, 512MB of internal storage, microSD card slot, Wi-Fi, Bluetooth and MicroUSB port.

Although, most of the specifications of the phone are pretty decent, the presence of meager 256MB RAM to run Android 4.2 Jelly Bean is worrisome.

If only the company had provided 512MB of RAM, the phone would have been a pretty decent option for budget Android smartphone buyers.

Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட!

1330711326_microsoft_excel_2010_109374233

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்ப…தில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்.
இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்.


மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது திறக்கும் பாப் அப் விண் டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவு ஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்க ளுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிற தோ அங்கே இழுத்து விடவும். இப்பொ ழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினை க் கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும்

டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் 41 மெகாபிக்சல் நோக்கியா மொபைல்!

10-1381383739-09-1381310659-procamera
 
நோக்கியா நிறுவனம் அண்மையாக 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது என்பது பெரும்பாலோனோருக்கு தெரியும். நோக்கியா லூமியா 1020 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் ஆன்லைன் விற்பனையும் சிறப்பாக நடந்து வருகிறது. நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் கேமரா தான் விளங்குகிறது, டிஜிட்டல் கேமராக்களையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறன் உள்ளது. 
 
 
இதை பற்றி பார்ப்பதற்க்கு முன் இந்க போனின் மற்ற சிறப்பம்சங்களை பார்ப்போம். 4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன் வின்டோஸ் 8 ஓஎஸ் 1.5 GHz டியுல் கோர் பிராசஸர் 41 மெகாபிக்சல் கேமரா 1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 2ஜிபி ராம்(RAM) 32ஜிபி மெமரி 7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் 3ஜி,4ஜி wi-fi 158 கிராம் 10.4mm 2000mAh பேட்டரி டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவிற்க்கு படங்களை தெளிவாக பிடிக்கிறது, இதன் கேமராவின் சிறப்பு என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
 
 10-1381384330-25-1380109961-4copy

நோக்கியா லூமியா 1020 நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.
 
 
10-1381384251-25-1380109932-2copy 
 
 
நோக்கியா லூமியா 1020 நோக்கியா லூமியா 1020யில் நீங்கள் தெளிவான ஹச்டி வீடியோக்களை படம் பிடிக்கலாம்.
 
 
10-1381383995-09-1381311077-nokialumia1020-5 
 
 
நோக்கியா லூமியா 1020 இருட்டில் எடுக்கப்பட்ட போட்டோவில் நீங்கள் பிரைட்னஸ்யை கூட்டினால் எவ்வளவு வெளிச்சமாக தெளிவாக தெரிகிறது என்பதை பாருங்கள்.

பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய..

os 
நாம் பெரும்பாலும் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்வதேன்றால் டி.வி.டி களையோ அதிகம் நம்பி இருப்போம். மேலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிக்கிறோம்.

ஆனால், சில வேளைகளில், நம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள, ஐ.எஸ்.ஓ. பைல் பயன்படுத்தி, விண்டோஸ் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட விரும்புவோம். இதில் பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திடாமல், குறிப்பிட்ட ஐ.எஸ்.ஓ. பைலை படிக்க இயலாது. இங்கு, விண்டோ ஸ் 7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலைப் பயன்படுத்தி, பூட் செய்யக் கூடிய யு.எஸ்.பி. டிஸ்க்கினை எப்படித் தயார் செய்வது எனப் பார்க்கலாம். (இதன் மூலம் நாம் டிவிடி சிஸ்டம் டிஸ்க் மூலம், விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது போல, இதனைப் பயன்படுத்தியும் இன்ஸ்டால் செய்திட முடியும்.)

இதற்கான முதல் தேவை, விண்டோஸ் சிஸ்டத்தின் ஐ.எஸ்.ஓ. பைல். இதனைத் தேடிப் பிடித்து, காப்பி செய்து, கம்ப்யூட்டரின் ட்ரைவ் ஒன்றில் முதலில் பதிந்து வைத்திருக்க வேண்டும். தேவையான சாதனங்கள்: பூட் செய்திடக் கூடிய, யு.எஸ்.பி. ட்ரைவினத் தயார் செய்திட, குறைந்தது 4 ஜிபி இடம் உள்ள, பிளாஷ் ட்ரைவ் ஒன்று தேவைப்படும். தயார் செய்து எடுத்துக் கொண்டு, பின்னர் கீழே தரப்பட்டுள்ளது போல செயல்படவும்.

 மேலே சொன்னபடி தயார் செய்த யு.எஸ்.பி. ட்ரைவினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி ட்ரைவில் இணைக்கவும். பின்னர் Start மெனு செல்லவும். அங்கு cmd என டைப் செய்திடவும். இங்கு கிடைக்கும் தேடல் முடிவுகளில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Run as Administrator என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து diskpart என டைப் செய்து என்டர் தட்டவும். diskpart என்பது, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ட்ரைவ் பார்ட்டிஷன் மற்றும் ட்ரைவ்களைக் கையாளும் ஒரு யுடிலிட்டி புரோகிராம்.

diskpart புரோகிராம் இயங்கத் தொடங்கும் போது, கமாண்ட் ப்ராம்ப்ட் எனப்படும் கட்டளைப் புள்ளி DISKPART என மாறியிருப்பதனைக் காணலாம். அடுத்து list volume என்ற கட்டளைச் சொல்லை டைப் செய்திடவும். இந்தக் கட்டளை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிஸ்க் வால்யூம்கள் அனைத்தையும் பட்டியலிடும்.
03-1380804058-3copy

பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. இந்தக் கட்டளையின் விளைவாகக் காட்டப்படும் தகவல்களிலிருந்து, நமக்குத் தேவைப்படும் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் 8 ஜிபி ப்ளஷ் ட்ரைவ் பயன்படுத்தியதால், 7399 எம்பி என்ற டிஸ்க்கினைத் தேர்ந்தெடுக்கவும்.
 
03-1380804099-4copy 

பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. இங்கு சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறுதலாக, பெர்சனல் கம்ப்யூட்டரின் ட்ரைவினைத் தேர்ந்தெடுத்தால், அந்த ட்ரைவில் உள்ள டேட்டா அழிவதுடன், விபரீதமான விளைவுகளும் ஏற்படலாம்.

பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அடுத்து select volume என்ற கட்டளையைத் தரவும். இந்தக் கட்டளையினை, ட்ரைவ் ஒன்றின் எண் பெயரோடு தர வேண்டும். கட்டளைக்கான முடிவுகளில், முதல் காலத்தில் காட்டப்படும் எண் இதுதான். சரியான எண்ணைத் தரவும். இப்போது நாம் சரியான ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து விட்டதால், Clean கட்டளையினைக் கொடுக்க வேண்டும். இந்தக் கட்டளை, அந்த ட்ரைவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நீக்கிவிடும். நீக்கிவிட்டு, புதிய பார்ட்டிஷன் ஸ்ட்ரக்சர் (Partition Structure) அமைக்க ஏதுவாக, ட்ரைவினை வடிவமைக்கும்.
 
03-1380804165-all-mobile-os-logoscopy 
பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அடுத்து நாம் முதன்மைப் பிரிவினை (Primary Partition) அமைக்க வேண்டும். ஏனென்றால், அனைத்து பூட் டிஸ்க்குகளிலும், முதன்மை பார்ட்டிஷன் இருக்க வேண்டும். create partition primary என்ற கட்டளையைத் தரவும்.
 
03-1380804181-installingxpthroughpendriveorthumbdrivecopy 
பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அடுத்து நாம் குறிப்பிட்ட டிஸ்க்கினை பார்மட் (Format) செய்தாக வேண்டும். விண்டோஸ் தற்போது NTFS என்ற வகை டிஸ்க் பார்ட்டிஷனை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. எனவே format fs=NTFS என்ற கட்டளையைக் கொடுக்கவும். பார்மட் செயல்பாடு முடிந்தவுடன், கமாண்ட் விண்டோவினை மூடவும். அடுத்து மிக முக்கியமான செயல்பாட்டிற்குச் செல்லப் போகிறோம். ஏற்கனவே எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்கும் ஐ.எஸ்.ஓ. பைலின் Boot போல்டருக்குச் செல்லவும். அடுத்து காலியாக உள்ள இடத்தில், shift+right கிளிக் செய்து, Open command window here என்று இருப்பதில் அடுத்து கிளிக் செய்திடவும்.

03-1380804217-os24-1stscreencopy
பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அடுத்து கமாண்ட் விண்டோவில், bootsect.exe/nt60 என்ற கட்டளையைச் சரியான ட்ரைவ் எழுத்துடன் அமைக்கவும். அதாவது, யு.எஸ்.பி. ட்ரைவ் காட்டப்படும் ட்ரைவ் எழுத்து. என்னுடைய கம்ப்யூட்டரில், யு.எஸ்.பி. ட்ரைவ் J: ஆகக் காட்டப்படுவதால், நான் அந்த எழுத்தினையே இணைத்தேன்.
 நீங்கள், உங்கள் கம்ப்யூட்டருக்கேற்ற எழுத்தினை இணைத்து அமைக்கவும். அடுத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரரில், எந்த ட்ரைவில் ஐ.எஸ்.ஓ. பைல் எக்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டு பதியப்பட்டதோ, அந்த ட்ரைவில் உள்ள ரூட் (root) போல்டருக்குச் செல்லவும். இங்கு boot, efi, sources, support, upgrade என்பன போன்ற போல்டர்கள் இருக்கும். இங்கு தான் bootmgr, autorun.inf ஆகிய பைல்களும் இருக்கும். இந்த போல்டர் மற்றும் பைல்கள் அனைத்தையும் காப்பி செய்து, பூட் யு.எஸ்.பி. ட்ரைவில் பதியவும்.
 
03-1380804181-installingxpthroughpendriveorthumbdrivecopy 
பென்டிரைவ் மூலம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய…. அவ்வளவுதான்! இப்போது உங்களிடம் யு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் விண்டோஸ் சிஸ்டம் பூட் செய்திடும் வகையிலான யு.எஸ்.பி. ட்ரைவ் தயாராகி உள்ளது. இதனை சிக்கல்கள் ஏற்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். ஆனால், மேலே காட்டப்பட்டுள்ள படி நிலைகளின் படி சரியாகச் செயல்பட்டு, இந்த பூட்டபிள் டிஸ்க்கினைத் தயார் செய்திட வேண்டும்.

மொபைலின் சில அடிப்படை விஷயங்கள்..

10-mo 
 
இன்று நாம் அனைவரும் என்னதான் மொபைல் பயன்படுத்தினாலும் அதிலிருக்கும் பல அடிப்படை பற்றி நிச்சயம் நமக்கு தெரிவதில்லை எனலாம் இதோ இங்கே கொஞ்சம் மொபைலில் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன இதோ இவற்றை பாருங்கள். இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.


 இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும்.


மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும். திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும்.


 போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம். போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.

டி.வியுடன் கம்பியூட்டரை இணைப்பது எப்படி?

30-1380517293-2copy 
 
 
இன்றைய காலத்தில் தொழில் நுட்பம் என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது எனலாம், மேலும் தினந்தோறும் அதில் பல மாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருகிகுறது. இன்றைக்கு டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது. இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம். கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம். இதன் மூலம் நீங்களும் உங்கள் டி.வியை கம்பியூட்டருடன் இணைத்து கண்டு மகிழுங்கள்….
 30-1380517236-1copy 
எச்.டி.எம்.ஐ. (HDMI) புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.

30-1380517293-2copy 
 
 
டி.வி.ஐ. (DVI) இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

30-1380517320-3copy 
 
 
வி.ஜி.ஏ. (VGA) இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.
 
 
30-1380517343-4copy 
 
 
எஸ்-வீடியோ (Svideo) இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
 
30-1380517382-6copy 


எஸ்-வீடியோ (Svideo) ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும்.
 
 
30-1380517402-5copy 
 
 
எஸ்-வீடியோ (Svideo) ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன.
 
 
30-1380517434-7copy


எஸ்-வீடியோ (Svideo) இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.

பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்!

free-tutorials-project 
 
பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்  தொடர்பில் இன்றும் பலருக்கு புரியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், இதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் குறிப்பிடுகிறேன்.நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
  பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த.

பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது  ?

பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக  record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும்.  ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.

Karaoke Software என்றால் என்ன?

சாதாரண மக்கள் – பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள், உள்ளூர் இடங்களில் சிறு நிகழ்வுகளில் பாடுபவர்கள்  தமக்கான பின்னணி இசையை நிஜ பாடலில் இருந்து பிரித்து எடுக்க பயன்படும் மென்பொருள்.

Karaoke Software இன் திறன் என்ன?

Karaoke software மூலம் ஒருபோதும் 100% இசையை வேறாக்க முடியாது . அதுவும் இன்றைய நவீன  Music composing method இல் உருவான பாடல்களில் அறவே சாத்தியம் இல்லை. ஏன் என்றால் பல பின்னணி பாடகர்கள், தொடர்ந்து மாறுபடும் குரல்கள் , இசைகள், சடுதியான ஏற்ற தாழ்வுகள்… இப்படி ஏராளம். நீங்கள் Karaoke மென்பொருட்கள் மூலம் ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்களில் உள்ள பாடல்களை ஓரளவு துல்லியமாக பிரித்து எடுக்கலாம்.

Karaoke Software இன் அடிப்படை  என்ன?

இவை தானாக அல்லது நீங்களாக மனித குரல், பாடல் என தெரிவு செய்யும் போது அதற்கு உரிய Frequency, வீச்சம் , பண்பு ஆகியவற்றை கொண்ட ஏனைய பகுதிகளையும் அந்த பாடல் முழுவதும் எடுக்கின்றன. இதுவே நாம் கேட்கும் போது பிரிக்கப்பட்ட வடிவமாக கேட்கிறது.

சில Karaoke Softwares

Karaoke Software என்று இணையத்தில் தேடினால் ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கும். அத்தனையும் பயனற்றவை. பொதுவாக எந்த Audio editing software மூலமும் மிகுந்த பிரயத்தனத்தில் ஓரளவு இசையை பிரிக்கலாம். பொதுவாக அறியப்பட்ட சில Softwares.

Sony Sound Forge Pro 10:

இது Audio editing software. ஆனால் இதில் நேரடியாக என வழியும் இசையை பிரிக்க இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும். 400$ மதிப்புள்ள இது Torrent இலும் கிடைக்கிறது. சாதாரணமானவர்கள் இதை பயன்படுத்துவது மிக கடினம்.

Adobe Audition CS6:

இதன் CS5  இல் தான் Avatar திரைப்பட இறுதி Audio editing செய்யப்பட்டது. அந்தளவிற்கு மிக பிரபலமானது.  ஒலியை வைத்து என்ன எல்லாம் செய்யலாமோ அதெல்லாம் இதில் உள்ளது. ஆனால் மேலுள்ளதை போன்று இதுவும் நேரடியாக Karaoke க்கு என்று எந்த வசதியும் இல்லை. நீங்களாக தான் முயற்சிக்க வேண்டும்.

மேலே சொன்ன இரெண்டும் karaoke க்கான மென்பொருட்கள் அல்ல. முன்னணி ஆடியோ எடிங் softwares.

இதுவே எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.

AV Music Morpher Gold 5

இதில் எப்போது உயர் ரக பாடல்களை பயன்படுத்தி ஓரளவு தரமான இசையை பெறலாம். இதும் கட்டண மென்பொருள் தான். Trial  இலவசம்  இதனுடன் Easy DJ mixer இலவசமாக கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றால் போல theme gold கலரில் நன்றாக இருக்கிறது,

Home Page: musicmorpher.com



இதன் Trail இல் முழுவதுமாக பாடல்களை பிரிக்க முடியாது. ஒன்றில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் . அல்லது crack செய்ய வேண்டும்.

பெஸ்ட் ஸ்மார்ட்போன் எது?

samsung 
 
 
தீபாவளி திருநாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது… அதே சமயம் தீபாவளி பர்சேஸ் ஒரு சிலருக்கு இனிமேல்தான் தொடங்கும். ஆனால் உங்களுக்கென்றே பிரத்யேகமாக ஏதேனும் ஒரு பொருள் வாங்க நினைத்திருப்பீர்கள். பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதையே ஒரு பெரிய குறிக்கோளாகவே வைத்திருப்பார்கள்.


ஒரு நல்ல காஸ்ட்லி போன் வாங்க நீங்க தீர்மானிச்சிருந்தால் நிச்சயமாக தொடர்ந்து படியுங்கள். காஸ்ட்லி போன் வாங்குவதால் பல நன்மைகள் உண்டு. நல்ல தரமிக்க டிஸ்பிளே, அதிக பிக்சல் கொண்ட கேமரா, அதிக உள்ளக நினைவகம், மெமரிகார்ட் மூலம் அதிகமாக கோப்புகளை சேமித்து, சேகரித்து வைக்கும் வசதி. அதிக நாள் உழைக்க கூடிய, நீண்ட நேரம் மின்சக்தியை வழங்க கூடிய பேட்டரிஇப்படி நிறைய உண்டு. காஸ்ட்லி ஐட்டம் வாங்குவது என முடிவெடுத்துவிட்டீர்கள். எந்த கம்பெனி போன் வாங்கனால் நல்லது? இப்படியும் ஒரு சில குழப்பம் வரும். தரமென்று வந்துவிட்டால் அதை ஒப்பு நோக்கிதான் வாங்க வேண்டும். இங்கு எனக்குத் தெரிந்த சில போன்களையும், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களையும் கொடுத்திருக்கிறேன். பாருங்கள்.. இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு பிடித்தமான விலையில் உள்ள போன்களை தேர்வு செய்யுங்கள்.


1. Nokia Lumia 1020

                                            lumia1020all_large_verge_medium_landscape

இதுதான் லேட்டஸ்ட் போன். நோக்கியா கம்பெனி சமீபத்தில் தான் வெளியிட்டது. விற்பனையில் சக்கைப் போடு போட்டுக்கொண்டுள்ளது. இது ஒரு விண்டோஸ் போன். இதில் 4.5 அங்குல அகலம் AMOLED touch screen இருக்கு. வயர்லஸ் சார்ஜிக் வசதி இருக்கு. 41 மெகா பிக்சல் கேமரா, 1.5 GHz Qualcomm Snapdragon S4 Dual Core Processor, மியூசிக் அப்ளிகேஷன், நோக்கியா மியூசிக், மிக்ஸ் ரேடியோன்னு ஏகப்பட்ட வசதிகள் குவிஞ்சு கிடக்கு. இதில் உள்ள சில முக்கியமான சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்:

  • 1.2 MP Secondary Camera
  • Powered by Windows Phone 8 OS and 2 GB RAM
  • Wireless Charging
  • Full HD (1080p) Recording
  • 41 MP Primary Camera with PureView technology and Optical Image Stabilisation
  • Carl Zeiss Tessar lens
  • Music apps: Nokia Music; Mix Radio
  • Comes with MS Office and Free Voice-guided Navigation
  • 1.5 GHz Qualcomm Snapdragon S4 Dual Core Processor
இவ்வளவு சிறப்பு வசதிகளுடன் கண்ணைக் கவரும் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்கும் இந்த நோக்கியா 1020 போனின் விலை ரூபாய் 47222./- விலைக்கேற்ற தரமும் வசதிகளும் அடங்கியிருப்பது சிறப்பு.

2. Samsung Galaxy Note 3 N9000 (Jet Black)

SM-N9000ZKEINU-1235650-0

இந்த போனைப் பற்றி சொல்லவே வேண்டாம். பிரபல நிறுவனம் சாம்சங்கின் தயாரிப்பு இது. சங்சங் நிறுவனத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. தரம்.. தரம்.. தரம்… அதுதான் இந்த நிறுவனத்தில் தாரக மந்திரமே அதுதான்.. ஆயிரம் ரூபாய் போனாக இருந்தாலும் சரி.. ஐம்பதாயிரம் ரூபாய் போனாக இருந்தாலும் சரி…. விலைக்கேற்ற தரமும், உழைப்பும் நிச்சயம் உண்டு. இந்த நிறுவனத்தின் காஸ்ட்லி போன் இது.. விலை 46899. இதுல இரண்டு ஐட்டம் இருக்கு. 1. jet black, 2. classic white. இந்த இரண்டு போன்களில் வெளிப்புற நிறங்கள் மட்டுமே வேறுபாடு.. உள்ளிருக்கும் பகுதிகள் எல்லாமே ஒன்றுதான். அதாவது வெளிப்புற உறை மட்டுமே நிறத்தில் வேறுபடும்.

இதிலுள்ள முக்கியமான சிறப்பம்சங்கள் மட்டும் கீழே (ஆங்கிலத்தில்)

  • NFC Support
  • Dual Camera: Dual Shot / Dual Recording / Dual Video Call
  • Android v4.3 (Jelly Bean) OS
  • 2 MP Secondary Camera with Smart Stabilization and BSI Sensor
  • Full HD (1080p) Recording and Playback Support
  • 13 MP Primary Camera with Auto Focus and BSI Sensor
  • Octa Core Processor (1.9 GHz Quad + 1.3 GHz Quad) and 3 GB RAM
  • Samsung Smart Scroll and Samsung Smart Pause
  • 5.7-inch Full HD Super AMOLED (1920 x 1080) Display
  • S Pen Optimized Features: Air Command; Action Memo; Scrapbook; S Finder; Pen Window; Multi Window; Direct Pen Input
  • Air Gesture and Air View
3. Micromax Canvas Doodle 2 A240

samsung 

மைக்ரோமேக்ஸ் கம்பெனி உள்நாட்டு நிறுவனம். இதனுடைய தயாரிப்புகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினரை மையப்படுத்தியே இருக்கும். இந்தியபோன்ற நாடுகளில் உள்ளவர்கள் ஒவ்வொருவரிடமும் தன்னுடைய தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நிறுவனம். இந்நிறுவனத்தில் அதிகபட்ச விலையுடன் போன் இது. விலை ரூபாய் 17499. இந்த போனில் 12 மெகா பிக்சல் கேமரா, 5.7 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1.2 கோட் கோர் பிரசசர்ன்னு நிறைய விஷயங்கள் இருக்கு.
இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்: ஆங்கிலத்தில்:

  • 2 MP Primary Camera
  • 5 MP Secondary Camera
  • 5.7-inch Capacitive Touchscreen
  • Android v4.2 (Jelly Bean) OS
  • 1.2 GHz Quad Core Processor
  • Dual SIM (GSM + GSM)
4. Sony Xperia ultra சோனி எக்ஸ்பீரியா:

                                                 Sony-Xperia-Z-Ultra-smartphone

சோனி நிறுவனத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.. ஜாப்பன் நிறுவனம் இது.. இதனுடைய தயாரிப்புகள் எல்லாமே மிக பிரபலமானவை. ஸ்மார்ட் போன் விற்பனையிலும் இப்போது புது புது மாடல் போன்களை தயாரித்து முன்னணி வகிக்கிறது.. குறிப்பாக சொல்வதென்றால் தண்ணீரிலேயே பயன்படுத்தும் ஸ்மார்ட் போன். இந்த நிறுவனத்தின் காஸ்ட்லி போன் இது. Sony Xperia ultra. இதனுடைய விலை ரூபாய் 41199. இதில் 8 மெகா பிக்சல் கேமரா, ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓ.எஸ். , 6.4 அங்குல ஹெச்.டி திரை, HD recording, வைபை, டஸ்ட் ப்ரூப், வாட்டர் ப்ரூப்ன்னு எக்கச்சக்க வசதிகள் இதுல இருக்கு..


இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்: ஆங்கிலத்தில்:

  • Android v4.2 (Jelly Bean) OS
  • 6.4-inch Full HD Display
  • 2.2 GHz Qualcomm Snapdragon 800 Quad Core Processor
  • Full HD Recording
  • 16 GB Internal Memory and 2 GB RAM
  • Ultra Slim; Dust-proof and Water Resistant
  • 2 MP Secondary Camera
  • NFC Enabled
  • Wi-Fi and WiFi Hotspot Support
5. Karbonn S5 titanium – கார்பன் மொபைல்: 

karbonn vs nexus 

கார்பன் மொபைலும் இப்போ ஸ்மார்ட் போன் தயாரிப்புல பயங்கரமான வளர்ச்சி அடைந்திட்டு வருதுங்க.. இதுல காஸ்ட்லி ஐட்டம் என்று பார்த்தால் இரண்டு போன்களை சொல்லலாம். ஒன்னு karbonn S5 Titanium, இன்னொன்று karbonn Titanium s9. முதல் போன் ரூபாய் 12700. இரண்டாவது டைட்டானியம் எஸ்9 போனின் விலை ரூபாய் 17990. இதுல 13 மெகா பிக்சல் கேமரா இருக்குங்க. வீடியோ,படங்கள்ன்னு நல்ல தரமிக்கதா எடுக்கலாம். டூயல் சிம் வசதி. 5.5 அங்குல தொடுதிரை. ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். ன்னு நிறைய விஷயங்கள் இதுல இருக்கு.


இரண்டாவது இருக்கிற karbonn Titanium s9 போனோட சிறப்பம்சங்கள்:


1. 1.2 GHz Quad Core Processor
2. Wi-Fi Enabled
3. Dual SIM (GSM + GSM)5 MP Secondary Camera
4. Android v4.2 (Jelly Bean) OS
5. Expandable Storage Capacity of 32 GB
6. 13 MP Primary Camera
7. 5.5-inch Capacitive Touch screen

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.

இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 

பீர் பிராண்ட்டுகள்

உலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.


பீர் ஃபோபியா


உங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா? ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா?


உண்மையான பீர்

பீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும் நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.


சளிக்கு சிறந்தது

சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.


இதய நோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.


அழகு

பீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை பெண்கள் குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்.


ஸ்மார்ட்டாக்கும்


எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.


ஆற்றல் பானம்

உடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.


விலை உயர்ந்த பீர்


மிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான 'Vielle Bon Secours' உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.