Search This Blog

Saturday 9 November 2013

வேகமாக பரவி வரும் புது வைரஸ்! மக்களுக்கு எச்சரிக்கை...!


இன்றைக்கும் கணனி பயன்படுத்துவோர் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை எது என்றால் அது வைரஸ் தான்.

தற்போதைய நிலையில் பீ போன் என்ற புதிய வைரஸ் ஒன்று மிக வேகமாகப் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஏறத்தாழ 20 பெயர்களில் கணனி சிஸ்டத்தில் தங்குகிறது.

இந்தியாவில் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று மற்ற வைரஸ்களையும் கணனியில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.

டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக கணனியில் இணைத்து எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் வசதியினை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும்.

விண்டோஸ் சிஸ்டம் கோப்புகளை அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும்.

நம்பிக்கைக்கு சந்தேகம் தரும் இணைய தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மிக வலுவான பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

பீ போன் வைரஸுடன் இணைந்து வோப்பஸ்(Vobfus) என்ற வைரஸும் செயல்படுவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment