Search This Blog

Sunday 15 December 2013

களவும் கற்று மற - அறிந்த விளக்கமும் அறியாத விளக்கமும்!



களவும் கற்று மற.


அறிந்த விளக்கம் :


திருடுவதையும் தெரிந்து கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது.

தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை சங்க காலப் பாடல்களில் களவு காதல் என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகம் வருகிறது.

 தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.

எனவே இதையும் குறிக்கலாம் என்பது சிலர் கருத்து.



அறியாத விளக்கம்
:

மேற் கண்ட பழமொழி ' களவும் கத்தும் மற ' என்று வந்திருக்க வேண்டும்.

இதில் கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள் கொள்ளப்படுகிறது.

 அதாவது ஆத்திச்சூடி பாணியில் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதாய் சொல்லப்பட்ட இப்பழமொழி நாளடைவில் மறுகி களவும் கற்று மற என்றாகி விட்டது.

No comments:

Post a Comment