Search This Blog

Thursday 5 December 2013

கண்களால் நாம் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்!

 

கடற்க்கரையில் நாங்கள் நின்று கொண்டு பார்த்தால், கடலும் வானமும் சேர்கின்றது அல்லவா? அதன் தூரம் 2.5 மைல்கள் தூரம். நீங்கள் உயரத்திற்குப் போகப் போக இன்னும் தொலைவுக்குப் பார்க்கலாம். காரணம் பூமி உருண்டையாக இருப்பதால்.


20 அடி உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 6 மைல்கள்.
300 அடி உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 23 மைல்கள்.
350 உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 80 மைல்கள்.
16.000 (விமானம்) உயரத்திலிருந்து உங்களால் பார்க்கக் கூடிய தூரம் 165 மைல்கள்.

இதுவே இப்படி என்றால் நீங்கள் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால் அதன் கதையே வேறு, சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மைல் தொலைவில் உள்ள சந்திரனைப் பார்க்க முடியும்! அது மாத்திரமா? அதோ அந்த நட்சத்திரம்? அது கோடிக்கணக்கான மைல் தொலைவில் இருக்கின்றது, அதையும் நாம் பார்க்கின்றோம்.


அதற்காக ரொம்பத்தான் பெருமை கொள்ளாதீர்கள்.........


காரணம், உங்கள் பார்வையின் சக்தி நீங்கள் பார்க்கின்ற பொருளில் இருந்து வரும் ஒளியைப் பொருத்தது. பொருட்களுக்கும் உங்கள் கண்ணுக்கும் இடையில் இருக்கும் மீடியம் இதுவும் முக்கியம். ஐரோப்பாவில் சில நாடுகளில் பனிப்படலம் சூழ்ந்து கொள்ளும்போது, பகல் பன்னிரண்டு மணிக்கு நீங்கள் பிடிக்கும் சிகரட் முனையே உங்கள் கண்களுக்குத் தெரியாது!

இது எப்படி இருக்கின்றது

No comments:

Post a Comment