Search This Blog

Wednesday 25 September 2013

திசு சிகிச்சையில் நெற்றியில் மூக்கு!





 சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் சரியான சிகிச்சை எடுக்காததால், தொற்று காரணமாக குருத்தெலும்பு முற்றிலும் சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது. அதை டாக்டர்களால் சரிசெய்ய முடியவில்லை.


இவருக்கு தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கு உருவாக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளது. இது விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு, பொருத்தப்படவுள்ளது.


No comments:

Post a Comment