Search This Blog

Saturday 24 August 2013

~*~கவிதைகள்~*~

~*~கவிதைகள்~*~

ஈகை

 
உண்ணாமல் ஒளித்து வைத்து  
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை  

என்றைக்கும் இனிதே ஈவாய்!!!


கனியும் காலம்

 
சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை
கண்கவரும் சிலையாய் நிற்கும்!
பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான்

நகையாகிப் பொன்னாய் மின்னும்! 
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில்
பொறுமையெனும் பெற்றி தன்னை!
கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட 

நீராகி கனியும் காலம்...

No comments:

Post a Comment